Saturday, September 29, 2007

ஆப்பிள் பூவே நீ யாரோ.. ...


"ஆப்பிள் பெண்ணே நீ யாரோ"னு பாட்டு கேட்டுருக்கறோம் ஆனா ஆப்பிள் பூவ பத்தி பாட்டு இல்ல. இங்க பாருங்க ஆப்பிள் பூ சூப்பரா இருக்குது. மத்த எல்லா பூவயும்விட இது அழகா இருக்கு.
ஆப்பிள் மரம் 6 லயிருந்து 30 அடி வரை வளரும். அது மண்ணோட தன்மைய பொறுத்தது. ஆப்பிளோட சரித்திரம் தெளிவா கிடையாது ஆனா இது காஸ்பியன் மற்றும் கருங்கடலுக்கு நடுவுல இருந்திருக்கலாம்னு ஆராய்ச்சியாளர்கள் கருதுறாங்க.இது ரோமானியர் களுக்கும் கிரேக்கர்களுக்கும் பிடித்தமான உணவா இருந்திருக்குது. அவ்ளோ ஏனுங்க ஆதாம் ஏவாள் கதைலயே ஆப்பிள்தான வருது.
அ‍மெரிக்காவுக்கு ஆப்பிள் வியாபாரிகளாலும் ஐரோப்பியர்களாலும் கொண்டு செல்லப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.





ஆப்பிள் பூ பெரிய அளவுல வெள்ளை மற்றும் இளம் ரோசா வண்ணத்துல இருக்கும். 2 - 4 இன்ச் அளவுல நடுவுல அதிகமான மகரந்த துகள்களுடன் இருக்கும். இந்த மலரில் தேன் அதிக அளவுல இருக்கறதால தேனீக்களுக்கு எப்பவும் கொண்டாட்டம்தான். இத விட சிறப்பு இந்த மலரோட நறுமணம் நல்லா இருக்கும்னு சொல்றாங்க. நான் பாத்ததில்ல நீங்க யாராவது பாத்திருந்தா சொல்லுங்கப்பா.
ஆப்பிள் பழத்த பத்தி ஒன்னும் சொல்ல வேண்டியதில்ல நமக்கே தெரியும்ல.ஆப்பிள் பழத்தோட விதையும் வேர்களும் மிக விஷத்தன்மையுள்ளதுனு சொல்லறாங்க.இதுல முக்கிய விசயம் ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டா டாக்டரே தேவையில்லங்கற பழமொழிதான். பாத்துங்க டாக்டருக்கு படிக்கறவங்க யாரும் ஆப்பிள் மரத்த வளர்த்துடாதீங்க அப்புறம் உங்க தொழிலுக்கு கஷ்டம் ஆயிடும். :)