Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Wednesday, February 27, 2008

சிற்சில கணங்களில்...

சில எதிர்பார்ப்புகள் முடக்கப்படுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேவையற்று போகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேய்ந்து மறைந்துவிடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் கேள்வி குறியாகின்றன
சில எதிர்பார்ப்புகள் நடந்தும் விடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தோற்கின்றது - ஆனாலும்
பல எதிர்பார்ப்புகள் தினம் தோன்றுகின்றன
தினம் தோன்றி மறையும் விண்மீன்களை போல.


இதை கவிதைனும் எடுத்துக்களாம் மொக்கைனும் எடுத்துக்கலாம். ஆனா ஏனோ எனக்கு நம்ம ராசா எழுதுன இந்த பதி ஞாபகம் வருது.

Friday, October 05, 2007

முகவரி மறந்ததே !



இன்று நான்

வீடு திரும்ப மாட்டேன்


உன் பிசாசு நினைவுகள்

என் வீட்டிற்கான பாதைகளை

கலைத்து விட்டன


என் வீட்டிற்கு வழிகாட்டும்

விளக்குகளை உன்

பிரியத்தின் கண்களின் வெளிச்சம்

மூழ்கடித்துவிட்டன


என் வீட்டின் எண்களை

உனது பறவைகள் தானியங்களெனெ

கொத்திச் சென்றுவிட்டன


இனி நான் வீடென்று நம்பிய

என் வீட்டிற்கு

ஒரு போதும் திரும்ப மாட்டேன்
டிஸ்கி : கவிதை எழுதிய நண்பருக்கு நன்றி. அப்புறம் யாரும் இதை படிச்சிட்டு நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு நினைச்சு சந்தோசப்படாதீங்க. :)

Thursday, June 28, 2007

மழையில் ஓரிதழ்



பெருமழைக்கு
ஒடிந்து சிதறும்
வர்ண மலர்கள்
சாயம் போகவில்லை
ஓரிதழும்

Wednesday, November 22, 2006

மழை....



எட்டிப்பிடிக்க முடியாத ஆகாயத்திற்கும்
எட்டநிற்கும் மண்ணிற்கும்
இடையில் ஒரு பிணைப்பினை
ஏற்படுத்தும் நீ கூட ஒரு அஞ்சலகம்தான்

கார்மேகமாய் காட்சி தந்து
நீ வரும் முன்னே இப்பூமிக்கு
உன் வாசத்தைக் கொடுத்து
இம்மண்ணிற்கு வளம் கொடுக்கும்
நீ கூட ஒருதாய் தான்.

உன்னில் நனைந்து என்னைத்
தேற்றி இயற்கை வியந்து என்
சோகத்தை மறப்பதால்
ஆம்! உன்னை நேசிக்கிறேன்.
நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!

Monday, March 20, 2006

நிம்மதியான வாழ்க்கை

பள்ளிக்கூடம் போகனுமா?
படிக்கணுமா?
வேலைககு போகணுமா?
நிறைய சம்பாதிக்கணுமா?
வாகனம் வாங்கனுமா?
வீடு கட்டணுமா?
ஊர் சுத்த நண்பர்கள் வேணுமா?
மொபைல் ரீசார்ஜ் பண்ணணுமா?
அப்புறம் இநத மாதிரி வலைப்பதிவு போடணுமா?
மெயில் அணுப்பனுமா?
காதலிக்க பொறுமை வேணுமா?
கல்யாணம் பண்ணி கஷ்டபடனுமா?
குழந்தைகளை படிக்க வைக்கணுமா?
வயசான காலத்தில் நல்ல உறவு ‍வேணுமா?

இப்படி வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாம நிம்மதியா இயற்கையோட இணைந்து வாழ தெரியாத இந்த மனுஷங்கள பார்த்தா ஒரே சிரிப்பா இருக்குது.