Showing posts with label யானை. Show all posts
Showing posts with label யானை. Show all posts

Saturday, July 09, 2011

ஆன கத,,,,



குழல் இனிதல்ல யாழ் இனிதல்ல தம் மக்கள் மழலைச் சொற்கள் முன்னால். அது நூறு சதம் உண்மையே. அதை அனுபவிச்சாதான் தெரியும். என் மகனுக்கு தற்போது 2 ஆண்டு முடிய போகிறது. தற்போது கதை கேட்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதுதான் இந்த பதிவின் தலைப்பே.
தினமும் குறைந்தது 4 முறையாவது என் பையன் என்னிடம் "அம்மா ஆன கத" என்று கேட்காத நாள் இல்லை. உறங்கும் நேரம் தவிர அவனுக்கு மீதி நேரம் முழுக்க கதை கேட்பதில் அத்துனை ஆர்வம் அதிலும் குறிப்பாக யானை கதை மட்டும் வேண்டும். யானை போட்ட படங்கள், யானை கார்டூன், யானை வைத்து சொல்லப்படும் கதைகள் அனைத்தம் யானைதான்.
இந்த Iceage கார்டுன் பார்த்து பார்த்து எனக்கு ஒவ்வொரு சீனும் மனப்பாடமே ஆயிடுச்சு. பாவம் அந்த CD தேஞ்சே போச்சு. எப்ப பாரு ஆன கத ஆன கதனு கேட்டு இப்பவெல்லாம் ஆனை வடை திருடிட்டு போயி மரத்து மேல உக்காந்துதுனு சொன்னாலும் கேட்டுக்கிறான். இந்த ஆனை வியாதி எப்ப முடியும்னு தெரியல.
இவனுக்கு கதை சொல்ல போக நெட்டுல யானை பத்தி தேடி தேடி படிச்சுட்டு இருக்கேன். அதுல கிடைச்சதுதான் யானை டாக்டர்.