Monday, January 28, 2008

பிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்

போன வாரம் படம் பார்க்கலாம்னு முடிவு பண்ணவுடனே. பில்லா பீமா எல்லாம் அடிதடியா இருக்கும் இந்த படம் கொஞ்சம் குடும்ப பாங்கா இருக்கும்னு போனேன். அது மட்டும் இல்ல விகடன்ல வேற இந்த படத்துக்காக காரைக்குடில போட்ட செட்டு. அங்க அவங்க நடத்துன கல்யாணம் எல்லாம் விலாவாரியா எழுதி கொஞ்சம் எதிர் பார்ப்ப ஏத்தி விட்டிருந்தாங்க.
படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும் பொண்ணு பார்க்க போறது. கல்யாணம் இப்டியே போயிடுச்சு. நான் நினைச்சேன். இதென்ன கொடுமையிது
ஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன். அப்புறம் இடை‍வேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.
ஆனா படம் முக்கால்வாசி போன பிறகுதான் தெரிய வருது எடுத்துகிட்ட
நோக்கம். ஆனா அதை புரிய வைக்கறதுகாக கொஞ்சம் இழுத்துட்டே போயிட்டாரு கதைய. ஆனா வேற வழியில்ல இந்த விசயத்தை இந்த மாதிரி கொஞ்சம் இழுத்து சொன்னாதான் தெளிவா புரியும். கண்டிப்பா இந்த படத்தை
தொலைகாட்சில ரிமோட்டோட பார்த்தம்னா ஒன்னுமே இல்லனு சொல்லிட்டு
போயிடுவோம். திரையரங்குல உக்காந்து வேற வழியே இல்லனு பார்த்தாதான் இந்த படத்‍தோட விசயம் விளங்கம். தனிமை கொடுமைங்கறதுதான் எடுத்துகிட்ட விசயம். அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருக்காரு படத்தை.

பாராட்ட வேண்டியது :
1. இயல்பான கதை அமைப்பு, நடிப்பு, காஸ்ட்யூம்.
(நான் நினைக்கிறேன் எல்லா நடிகர்களையும் அவங்க அவங்க வீட்லயிருந்து கிளம்பி வர சொல்லி அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ல அப்டியே படம் எடுத்திருப்பாரு போல இருக்கு :) )

2. எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது.

3. எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.

குறைகள் :
1. முக்கியமான விசயம் கதைய ரொம்ப ஸ்லோவா நகர்த்தியிருக்கிறது. (ரொம்ப கஷ்டம் அடங்கி 2.30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கறது. அதுலயும் ரிமோட் இல்லாம ரொம்ப கஷ்டமப்பா )

Sunday, January 20, 2008

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே

வணக்கம் மக்களே மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு போடலாம்னு வந்திருக்கேன். தற்போதைய நிலைமையில் எனக்கு பதிவு போர் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. சரி இருந்தாலும் இது அவசியம்னு நினைச்சதால எழுதறேன்.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒரு கேள்வி அடிக்கடி பதிவுலக நண்பர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. அது என்னா கேள்வினா

பெண் பதிவர்கள் ஏன் தங்களுடைய புகைப்படத்தை பதிவுகளில் அல்லது ப்ரொபைலில் போடுவதில்லை?

இது தான் கேள்வி இது பல தடவை நேர்லயும் சிலரால் சாட்டிங்கிலும் கேட்கப்பட்டு விட்டது. நானும் என்னவோ பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் மத்தவங்களுக்கும் இது ஒரு பயனுள்ளதா (ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவைனு சொல்றது காதுல விழுது :) ) இருக்கும்னு இங்க எழுதறேன்.

1. பதிவு எழுதவர்ரவங்க அவங்களோட கருத்துகளை அடுத்தவங்ககிட்ட பகிர்ந்துகனும்னுதான் எழுத வராங்க. இதுல படத்த பார்த்து ஒன்னும் ஆக போறது இல்ல.

2. அப்ப‍டியே படம் போட்டு பேர் வாங்கனும்னு நினைச்சா அதுக்கு மாடலிங், நடிப்புனு நிறைய மத்த துறைகள் இருக்குது. இங்க பதிவு எழுதனும்னு அவசியம் இல்ல.

3. அப்புறம் சிலர் ‍கேட்கறாங்க முகமிலிகூட எப்டி பேச்சுவார்த்தை வெச்சுக்கிறது. நட்பு எப்படி சாத்தியம்னு கேட்கறாங்க. இதுக்கு என் பதில் ஏன் குறிப்பா பெண்களை மட்டுமே கேட்கறீங்க இன்னும் பல ஆண் பதிவர்களும்தான் முகமிலியா இருக்காங்க. அதுக்காக உங்க நட்புல ஏதாவது தடை ஏற்பட்டு இருக்குதா?

4. இன்னும் சிலர் இப்டி தங்கள் புகைப்படத்தையே வெளியிடாதவங்க எப்டி சமூகத்த பத்தி எழுத முடியும்னு கேட்கறாங்க. ஏனுங்க பதிவு எழுதறதே அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்க கருத்துகளை தெரிவிக்கதானே தவிர சமூகத்தை சீர் திருத்தறதுக்காக இல்ல. அப்டியே இருந்தாலும் சமூக சிந்தனைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு புரியல.

5. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )

Tuesday, January 01, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள் 2008


என் இனிய வலை உலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இனி வரும் ஆண்டுகளில் மேலும் மேலும் நட்பும் உருபடியான பதிவுகளும் பெருக வாழ்த்துகின்றேன். :)