Thursday, February 21, 2013

ஜான்சிபார் - 4

​​கேப்டன் காருலயே கிளம்பி கூட்டிகிட்டு போனாங்க. காட்டுக்குள்ள அரை மணிநேர பயணம். அதுக்குள்ள சிட்டிய தாண்டின உடனே எங்க வீட்டுகாரருக்கு ஆசை கார் ஓட்டனும்னு டி​ரைவர்  கிட்ட கேட்டு அவனும் குடுத்திட்டு பின்னாடி உக்கார்ந்துகிட்டான். அவருக்கு நல்லா கார் ஓட்ட தெரியும் இருந்தாலும் வெளி நாட்டுல ஓட்டனும்னு ஒரு ஆசை அது நிறைவேறிடுச்சு. கிட்டதட்ட 30 கீ மீட்டர் ஒட்டுனாரு. அப்புறம் ஒருதோப்பு மாதிரி இடத்துல நிறுத்திட்டு ஒரு ஆள கூட்டிகிட்டு வந்தான். அவன்தான் அந்த ஸ்பைஷ் டூர் இடத்துக்கு சொந்தகாரன்.

முதல்ல ஸ்பைஷ் டூர்னா என்னனா எல்லாவித மசாலா செடி, மரம், கொடி இதெல்லாம் நேர்ல பார்க்கலாம். இதுல அந்த கைடு அவருடைய சொந்த பண்ணைக்கு கூட்டிகிட்டு போயி சுத்தி காட்டுனாரு.அந்த பண்ணைல நிறைய விதம் விதமான மசாலா மரங்கள் இருந்துச்சு எல்லாம் இந்த மாதிரி டூரிஸ்ட்காரங்களுக்கு காட்டறதுக்காகவே வெச்சு இருக்காங்க.

மசாலா மரங்களின் ராணி (Queen of Spices)

முதல்ல ஒரு மரத்துக்கு பக்கத்துல கூட்டி கிட்டு போயி இது என்னனு பாருங்கனு சொன்னாரு. மரத்தை பார்த்தா ஒன்னும் தெரியல சாதாரணமா இருந்துச்சு இலைகள் மட்டும் பெரிசு பெரிசா இருந்துச்சு. பேசிகிட்டே அவன் மரத்தோட பட்டைய கத்தில வெட்டி எடுத்து சாப்பிடுங்கனு சொன்னாரு. சாப்பிட்டா அட நம்ம ஊரு பட்டை பிரியாணிக்கு போடுவோமே அதே தான் ஆனா பச்சையா நல்லா இனிப்பா மணமா இருந்துச்சு. அப்புறம் அவரு கொஞ்சம் இலைகளை பறிச்சு மணம் பார்க்க சொன்னாரு. அது  நம்ம பிரியாணி இலைனு தெரிஞ்சு கிட்டோம். அதுக்கு பிறகு அவரு கத்தியால அந்த மரத்தோட வேறவெட்டி எடுக்க ஆரம்பிச்சாரு. அய்யோ பாவம் அந்த மரம்னு நினைச்சு கிட்டோம். கடைசியா அதை முகர்ந்து பார்க்க குடுத்தாரு. அட எல்லாருக்கும் அதிர்ச்சி அது என்னனா நம்ம விக்ஸ் யூஸ் பண்ணறமே அதேதான். விக்ஸ் அந்த மர வேருல இருந்துதான் செய்யறாங்களாம். கடைசியா சொன்னாரு இந்த மரம்தான் மசாலாக்களின் ராணி (Queen of Spice trees). இந்த மரத்தோட எல்லா பாகமும் உபயோகப்படுது.

அடுத்தது ஒரு சின்னசெடி அது நம்ம ஊரு புல்லு மாதிரிதான் இருக்கு அதை வெட்டி முகர்ந்து பார்த்தா எலுமிச்சை மாதிரி மணம் வருது. அதுல டீ  வெச்சு குடிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லதாம் அது வாந்தி அஜீரணம் இதுக்கெல்லாம் நல்ல மருந்துனு சொன்னாரு.

அப்புறம் மஞ்சள், இஞ்சி, வெற்றிலை இதெல்லாம் எங்க நாட்டுலயே இருக்குது பார்க்க வேண்டாம் வேற காட்டுனு கேட்டோம் அப்புறமா ஒரு மரத்துக்கு கூட்டிட்டு போயி ரோசு கலர்ல ஒரு காய் கொத்தா பறிச்சுட்டு வந்தாரு. என்னனு பார்த்தா கிராம்பு. கிராம்பு பச்சையா இருக்கும்போது சிவப்பு கலர்ல நல்லாதான் இருக்கு அது பழுத்து காய்ந்த பிறகு தான் கருப்பா மாறுது.

அப்புறம் ஏலக்காய்செடி நம்ம ஊருல இருக்குது ஆனா நாங்க இது வரைக்கும் பார்த்தது இல்ல அதனால நல்லா பார்த்து போட்டோ எடுத்துகிட்டு வந்தோம். அப்புறம் ஒருபெரிய கொடிகிட்ட கூட்டிட்டு போயி அதுல சின்னதா நீளமா நம்ம பீன்ஸ் மாதிரி ஒரு காய் ஆனா கருப்பு கலர்ல இருந்துச்சு இதை பார்த்திருக்கீங்களானு கேட்டாரு. இல்லைனோம். அவரு சொன்னாரு இதுதான் வெண்ணிலா (Vanilla) அப்படினாரு. முகர்ந்து பார்த்தா வெண்ணிலா வாசனை சூப்பரா வந்தது. நான் எதிர் பார்க்கவே இல்ல. வெண்ணிலா இப்படி கருப்பு கலர்ல இருக்கும்னு. நான் சாப்பிட்ட வெண்ணிலா கேக் வெண்ணிலா ஐஸ்க்ரீம் எல்லாமே வெளிர் மஞ்சளாதான் இருந்தது.
இதெல்லாம் பார்த்த பிறகு அவங்க குடிசைக்கு கூட்டிகிட்டு போயி ஆளுக்கு ஒரு கப்பு குடுத்தாங்க. அதுல முதல்லலெமன் க்ராஸ் டீ, அப்புறம் ஏலக்காய், வெண்ணிலா, இஞ்சி இப்படினு விதம் விதமா டீ குடுத்தாங்க. எல்லா டீயும் சூப்பரா இருந்துச்சு. அவங்க டீனா நம்ம ஊரு மாதிரி தேயிலை போட்டு இல்ல சும்மா கசாயம் மாதிரி தராங்க அவ்வளவுதான்.

கடைசியா கிளம்பி வரும்போது 3 பசங்க வந்தாங்க அவங்க கிட்ட கையிலதென்னை ஓலையிலசெஞ்ச கிரீடம், கழுத்துக்கு சங்கிலி, தோள்பை, இதெல்லாம் விட கண்ணுக்கு கண்ணாடி எல்லாம் செஞ்சுட்டு வந்து போட்டு விட்டாங்க. எல்லாத்தையும் போட்டா ஆதிவாசி மாதிரியே இருந்தோம். நல்லா புகைப்படங்கள் எடுத்து கிட்டு திரும்ப வந்தோம்.

திரும்ப வரும்போது மறுபடியும் எங்க வீட்டு காரர்தான் கார் ஓட்டுவேனு ஓட்டிகிட்டு வந்தாரு. அப்ப மெயின் ரோடு வந்தவுடன் அவன் நான் ஓட்டறேன். போலீஸ் பார்த்த பிரச்னைனு வாங்கிட்டான். அப்புறம் ஒரு சிக்னல்ல போலீஸ் காரன் வண்டிய ஓரம் கட்ட சொல்லிட்டான். என்னனு பார்த்தா நான் முன்னாடிதான் உக்கார்ந்து இருந்தேன். ஆனா சீட் பெல்ட் போடவே இல்ல. அதான் பிடிச்சுட்டானு  நினைச்சு கிட்டோம். டிரைவர் எதுக்கும் 1000 சில்லிங்  குடுங்கனு சொல்லி வாங்கி வெச்சுகிட்டான். அப்புறம் என்ன வழக்கம்போல இந்தியா மாதிரி அவரு விரல கார்குள்ள விட்டு பணத்த வாங்கிட்டு போலாம்னுட்டாரு. எல்லா ஊரு போலீசும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.

அப்ப மணி மாலை 4 தான் ஆச்சு இப்ப இருந்து நைட் வரைக்கும் என்ன பண்ணறதுனு யோசனை பண்ணிட்டு அவன் கிட்டயே ஐடியா கேட்டோம். அவன் ஸ்டோன் டவுன் (stone town) அதாவது சான்சிபார் மெயின் சிட்டி ஊரு பேரு ஸ்டோன் டவுன். அங்கதான் நாங்க தங்குன ஹோட்டல் ஹார்பர் எல்லாம் இருக்கு. அங்க ஒரு  ஸ்லேவ் சேம்பர் அப்புறம் ஓரு சர்ச் இருக்கு அங்கபோயிட்டு ரூமுக்கு போனா சரியா இருக்கும்னு சொன்னான். சரினு கார நேரா ஸ்லேவ் சேம்பர்க்கு விட்டோம். அது ஒரு பெரிய சர்ச் பக்கத்துல ஒருகோட்டை வீடு அவ்வளவுதான். முதல்ல சர்ச் போனோம் அங்க ஏதோ ப்ரேயர் நடந்திட்டு இருந்தது அதனால உள்ள போகல ஆனா கதை கேட்டோம். அங்க கடவுள் வெச்சு இருக்கற இடத்துலதான் முன் காலத்துல அடிமைகளுக்கு தண்டனை தருவாங்களாம். அவங்கள அடிச்சு அடிச்சு ரத்தம் அந்த இடத்தில எப்பவுமே சிவப்பா தங்கி இருக்குமாம். அதனால அந்த இடத்துக்கு ரெட் கார்பட்னு பேரு வெச்சிருக்காங்க. பிற்காலத்துல ஆங்கிலேயர் வந்து அங்க அடிமைகளின் நினைவா பெரிய சர்ச் கட்டி சாமி கும்புட்டு இருக்காங்க.
அந்த கதை கேட்டு மனசு ரொம்ப கனமா போச்சு. அப்புறம் அந்த கோட்டைக்கு உள்ள போனோம் இப்ப அந்த கோட்டைய ஹோட்டலா மாத்திட்டாங்க. அங்க நார்மலா பாக்கறதுக்கு பக்காவா அழகான கோட்டை நிறைய சாமான்களோ அழகா இருந்துச்சு. அதுக்கு கீழ ஒரு படிக்கட்டுபோகுது அதுல இறங்குனா ஒரு குகை மாதிரியான இடம் அங்க எந்த விதமான வசதியும் கிடையாது யாரும் தலை நிமிர்ந்து நிக்க முடியாது. குறுகலான இடம் அங்கதான் 100 கணக்கான அடிமைகள மாதக் கணக்குல அடைச்சு வெச்சிருக்காங்க. கொடுமையிலும் கொடுமையிது அங்க போயி நாங்களும் உக்கார்ந்து பார்த்தோம் புகைப்படம் எடுக்கறதுகுள்ள வேர்த்து விறுவிறுத்திடுச்சு.
அங்க எப்படி இருந்தாங்களோ அடிமைகள் பாவம். இந்த அரபு நாட்டுக்காரங்க நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்காங்க. எல்லா வேலைக்கும் அடிமைகள் அது போக அவங்கள வியாபாரம் செஞ்சு வர வருமானம் இப்படி நல்லா அனுபவிச்சு இருக்காங்க.
எப்படியோ ஒரு வழியா அடிமைகள் இடத்தை பார்த்திட்டு வந்து கார்காரன நீ கார் எடுத்துட்டு போய்க்கோ நாங்க அப்படியே நடந்து ஊர் சுத்தி பார்த்து கிட்டே ரூம் போய் சேர்ந்திடறோம்னு சொல்லி நடக்க ஆரம்பிச்சோம். கார்காரன் எங்கள நல்ல இடமா இறக்கி விடறேனு சொல்லி ஒரு இடத்துல இறக்கி விட்டான் அது எந்த இடம்னா ஒருபெரிய  ஹோட்டல் அதுக்கு முன்னாடியே கடல். சரியா நாங்க இறங்கும்போது சூரிய அஸ்தமனம் சூப்பரா இருந்துச்சு. அதை எல்லா வெள்ளைக்காரங்களும் படம் எடுத்துகிட்டு இருந்தாங்க. நாங்க மட்டும் சும்மா விடுவமா அந்த சூரியன வெச்சு மணிரத்னம் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி படம் எடுத்தோம் கடைசில 2 படம்தான் தேறிச்சு. அப்படியே கிளம்பி வரும்போது ஒரு இன்டர்நெட்டு கடை கண்ணுல பட்டுச்சு  உடனே படங்கள கேமராவுல இருந்து டவுன்லோட் பண்ணலாம்னு உள்ள புகுந்து கேட்டோம் அங்க இருந்த பொண்ணு இதுக்கு பணம் எல்லாம் ஒன்னும் வேண்டாம் சும்மாவே பண்ணிக்கோங்கனு ரொம்ப பெரிய மனசு பண்ணி சொல்லிச்சு. சரினு டவுன்லோடு பண்ணறோம் பண்றோம் ஒரு மணிநேரம் ஆயிடுச்சு. எங்களுக்கு மனசு பொறுக்காம 20 ரூபாய் தாராள மனசோட குடுத்துட்டு வந்தோம். அதுக்கு பிறகு வர்ர வழில வேற ஒரு கோட்டை இருந்துச்சு. அதுக்குள்ள போனா அங்க அன்னிக்கு பாட்டு கச்சேரினு சரியான கூட்டம் சத்தம் வேறகொஞ்சநேரம் பார்த்திட்டு சாப்பிடற இடத்துக்கு வந்திட்டோம்.
திரும்ப வரும்போது மறுபடியும் எங்க வீட்டு காரர்தான் கார் ஓட்டுவேனு ஓட்டிகிட்டு வந்தாரு. அப்ப மெயின் ரோடு வந்தவுடன் அவன் நான் ஓட்டறேன். போலீஸ் பார்த்த பிரச்னைனு வாங்கிட்டான். அப்புறம் ஒரு சிக்னல்ல போலீஸ் காரன் வண்டிய ஓரம் கட்ட சொல்லிட்டான். என்னனு பார்த்தா நான் முன்னாடிதான் உக்கார்ந்து இருந்தேன். ஆனா சீட் பெல்ட் போடவே இல்ல. அதான் பிடிச்சுட்டானு  நினைச்சு கிட்டோம்.டிரைவர் எதுக்கும் 1000 சில்லிங்  குடுங்கனு சொல்லி வாங்கி வெச்சுகிட்டான். அப்புறம் என்ன வழக்கம்போல
இந்தியா மாதிரி அவரு விரல கார்குள்ள விட்டு பணத்த வாங்கிட்டு போலாம்னுட்டாரு.எல்லா ஊரு போலீசும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.

அப்ப மணி மாலை 4 தான் ஆச்சு இப்ப இருந்து நைட் வரைக்கும் என்ன பண்ணறதுனு யோசனை பண்ணிட்டு அவன் கிட்டயே ஐடியா கேட்டோம். அவன் ஸ்டோன் டவுன் (stone town) அதாவது சான்சிபார் மெயின் சிட்டி ஊரு பேரு ஸ்டோன் டவுன். அங்கதான் நாங்க தங்குன ஹோட்டல் ஹார்பர் எல்லாம் இருக்கு. அங்க ஒரு  ஸ்லேவ் சேம்பர் அப்புறம் ஓரு சர்ச் இருக்கு அங்கபோயிட்டு ரூமுக்கு போனா சரியா இருக்கும்னு சொன்னான். சரினு கார நேரா ஸ்லேவ் சேம்பர்க்கு விட்டோம். அது ஒரு பெரிய சர்ச் பக்கத்துல ஒருகோட்டை வீடு அவ்வளவுதான். முதல்ல சர்ச் போனோம் அங்க ஏதோ ப்ரேயர் நடந்திட்டு இருந்தது அதனால உள்ள போகல ஆனா கதை கேட்டோம். அங்க கடவுள் வெச்சு இருக்கற இடத்துலதான் முன் காலத்துல அடிமைகளுக்கு தண்டனை தருவாங்களாம். அவங்கள அடிச்சு அடிச்சு ரத்தம் அந்த இடத்தில எப்பவுமே சிவப்பா தங்கி இருக்குமாம். அதனால அந்த இடத்துக்கு ரெட் கார்பட்னு பேரு வெச்சிருக்காங்க. பிற்காலத்துல ஆங்கிலேயர் வந்து அங்க அடிமைகளின் நினைவா பெரிய சர்ச் கட்டி சாமி கும்புட்டு இருக்காங்க. அந்த கதை கேட்டு மனசு ரொம்ப கனமா போச்சு. அப்புறம் அந்த கோட்டைக்கு உள்ள போனோம் இப்ப அந்த கோட்டைய ஹோட்டலா மாத்திட்டாங்க. அங்க நார்மலா பாக்கறதுக்கு பக்காவா அழகான கோட்டை நிறைய சாமான்களோ அழகா இருந்துச்சு. அதுக்கு கீழ ஒரு படிக்கட்டுபோகுது அதுல இறங்குனா ஒரு குகை மாதிரியான இடம் அங்க எந்த விதமான வசதியும் கிடையாது யாரும் தலை நிமிர்ந்து நிக்க முடியாது. குறுகலான இடம் அங்கதான் 100 கணக்கான அடிமைகள மாதக் கணக்குல அடைச்சு வெச்சிருக்காங்க. கொடுமையிலும் கொடுமையிது அங்க போயி நாங்களும் உக்கார்ந்து பார்த்தோம் புகைப்படம் எடுக்கறதுகுள்ள வேர்த்து விறுவிறுத்திடுச்சு.அங்க எப்படி இருந்தாங்களோ அடிமைகள் பாவம். இந்த அரபு நாட்டுக்காரங்க நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்காங்க. எல்லா வேலைக்கும் அடிமைகள் அது போக அவங்கள வியாபாரம் செஞ்சு வரவருமானம் இப்படி நல்லா அனுபவிச்சு இருக்காங்க.எப்படியோ ஒரு வழியா அடிமைகள் இடத்தை பார்த்திட்டு வந்து கார்காரன நீ கார் எடுத்துட்டு போய்க்கோ நாங்க அப்படியே நடந்து ஊர் சுத்தி பார்த்து கிட்டே ரூம் போய் சேர்ந்திடறோம்னு சொல்லி நடக்க ஆரம்பிச்சோம். கார்காரன் எங்கள நல்ல இடமா இறக்கி விடறேனு சொல்லி ஒரு இடத்துல இறக்கி விட்டான் அது எந்த இடம்னா ஒருபெரிய  ஹோட்டல் அதுக்கு முன்னாடியே கடல். சரியா நாங்க
இறங்கும்போது சூரிய அஸ்தமனம் சூப்பரா இருந்துச்சு. அதை எல்லா வெள்ளைக்காரங்களும் படம் எடுத்துகிட்டு இருந்தாங்க. நாங்க மட்டும் சும்மா விடுவமா அந்த சூரியன வெச்சு மணிரத்னம் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி படம் எடுத்தோம் கடைசில 2 படம்தான் தேறிச்சு. அப்படியே கிளம்பி வரும்போது ஒரு இன்டர்நெட்டு கடை கண்ணுல பட்டுச்சு  உடனே படங்கள கேமராவுல இருந்து டவுன்லோட் பண்ணலாம்னு உள்ள புகுந்து கேட்டோம் அங்க இருந்த பொண்ணு இதுக்கு பணம் எல்லாம் ஒன்னும் வேண்டாம் சும்மாவே பண்ணிக்கோங்கனு ரொம்ப பெரிய மனசு பண்ணி சொல்லிச்சு. சரினு டவுன்லோடு பண்ணறோம் பண்றோம் ஒரு மணிநேரம் ஆயிடுச்சு. எங்களுக்கு மனசு பொறுக்காம 20 ரூபாய் தாராள மனசோட குடுத்துட்டு வந்தோம். அதுக்கு பிறகு வர்ர வழில வேற ஒரு கோட்டை இருந்துச்சு. அதுக்குள்ள போனா அங்க அன்னிக்கு பாட்டு கச்சேரினு சரியான கூட்டம் சத்தம் வேற கொஞ்ச நேரம் பார்த்திட்டு சாப்பிடற இடத்துக்கு வந்திட்டோம். வழக்கம்போல சீபுட் (sea food) கடையில நல்லா இறால் மீன், பிட்சா, முட்டை
சப்பாத்தி சாப்பிட்டோம். சூப்பர் சாப்பாடு சாப்பிட்டுட்டு கிழம்பி ரூம்கு போலாம்னு வந்தாச்சு. அப்பதான் ஞாபகம் வந்திச்சு திரும்பி போக டிக்கட் வாங்கனும்னு. அப்படியே ஹார்பர் போயி டிக்கட் வாங்கிட்டு ரூம் வந்து சேர்ந்தோம்.

2 comments:

Pandian R said...

இன்னொரு அடிமைப்பெண் கதை

இராஜராஜேஸ்வரி said...

மசாலா பயணம் அருமை..பாராட்டுக்கள்..!