
எட்டிப்பிடிக்க முடியாத ஆகாயத்திற்கும்
எட்டநிற்கும் மண்ணிற்கும்
இடையில் ஒரு பிணைப்பினை
ஏற்படுத்தும் நீ கூட ஒரு அஞ்சலகம்தான்
கார்மேகமாய் காட்சி தந்து
நீ வரும் முன்னே இப்பூமிக்கு
உன் வாசத்தைக் கொடுத்து
இம்மண்ணிற்கு வளம் கொடுக்கும்
நீ கூட ஒருதாய் தான்.
உன்னில் நனைந்து என்னைத்
தேற்றி இயற்கை வியந்து என்
சோகத்தை மறப்பதால்
ஆம்! உன்னை நேசிக்கிறேன்.
நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!