Wednesday, July 18, 2007

செவ்வந்தி







ஆயுத பூ‍ஜை சரஸ்வதி பூஜை வந்தா கண்டிப்பா எல்லா பக்கமும் சும்மா பளிச்னு இந்த செவ்வந்தி பூ கடை போட்டிருப்பாங்க. யார் யாரோ திடீர் திடீர்னு கடை போட்டு வியாபாரம் ரெண்டு நாள் செய்வாங்க. மழைக்கு வரும் காளான் போல இந்த கடை தோன்றி மறையும். நாமும் அந்த பூவ வாங்கி சாமிக்கு போட்டு பூஜை பண்ணுவோம் ஆனா ஒரு நாள் கூட அதோட பூர்வீகம் என்ன அதனோட குணங்கள் என்னனு யோசிச்சது இல்ல.
செவ்வந்தி பூ பத்தி தெரிஞ்சுக்கலாம்னு கூகுளாண்டவரையும் விக்கி அண்ணனையும் போய் கேட்டா அப்டி ஒரு பேரே இல்லைனு சொல்லிபுட்டாங்க. அட கொடுமையே இது என்ன நம்ம பூவூக்கு வந்த சோதனையின்னு தேடுனப்ப இந்த வலைப்பூ கிடைச்சது. யாரோ ஒரு நல்லவங்க என்ன மாதிரியே பூக்கள பத்தி பதிவுகளா போட்டு தள்ளியிருக்காங்க. அவங்க யாரு எவருனு தெரியல ஆனா அவங்க புண்ணியத்துலதான் தெரிஞ்சுது செவ்வந்திப்பூ பேரு க்ருசாந்தேமம் (Chrysanthemum). இந்த வார்த்தை கிரேக்க வார்த்தையில இருந்து வந்ததா சொல்றாங்க.









இந்த பூக்கள் பல நிறங்களில் இருக்கின்றன. மஞ்சள் நமக்கு தெரியும் அதுபோக சிவப்பு, ஆரஞ்சு இப்டி நிறைய கலர்ல இருக்குதுங்க. ஆனா நாம சாமிக்கு வெக்கறது மஞ்சள்தானுங்களே. அது போக வெள்ளை கலரும் வெப்போம்.

அப்புறம் இத முக்கியமா ஜப்பான் சீனாவுல தானுங்க வளர்த்து பயன்படுத்தறாங்க. ஆனா அவங்க இத மன்னரோட சின்னமாவும் துக்கத்தோட வெளிப்பாடாவும் நினைக்கிறாங்க. ஜப்பானுல இத மகிழ்ச்சியான புனித சின்னமா பாக்கறாங்க. ஊருக்கு ஊரு ஒரே பொருள் வெவ்வேறு விதமா பார்க்கபடுது.





இந்த பூக்களுக்குனு பல மருத்துவ குணம் சொல்லறாங்க முக்கியமா இதிலிருந்து தயாரிக்கபடும் ஒரு ரசாயனம் சிறந்த கொசு மற்றும் பூச்சி கொல்லியா பயன்படுது. ஆனா இதுல இருக்கற ரசாயனம் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தறதில்ல அது மட்டும் இல்ல இது பயோ டீ கிரேடபுல் (அதாங்க இயற்கையா மட்கும் பொருள்) அதனால சுற்றுசூழல் பாதிப்பு சுத்தமா கிடையாது. கொஞ்சம் பேரு இதனோட இதழ்கள காய வெச்சு டீ தயாரிச்சு சாப்பிடறாங்களாம் நல்லா இருக்குனு போட்டு இருக்குது குடிச்சு பார்த்தாதான் தெரியும்.

Wednesday, July 11, 2007

எட்டாவது சாதனைகள்

நம்ம கச்சேரி தேவ் என்னைய எட்டு போட்டு காட்டி‍யே ஆகனும்னு சொல்லிபுட்டாக அவரு கூப்புட்ட எல்லாரும் போட்டுட்டாங்க நான்தேன் கடைசி. ம் என் எட்டு சாதனைகள் கீழே போடறேன் யாரும் பயந்து அல்லது வெறுத்து போயி திட்டாதீங்க.

‍என் வலையுலக சாதனை

1. முதன் முதல்ல பதிவு எழுதுனப்ப நமக்கு (இந்தியாவும் உலக அதிசயமும்) என்ன எழுத தெறியும் சும்மா வெட்டி வேலைனு நினைச்சுதான் ஆரம்பிச்சு கிறுக்கினேன். அதையும் படிச்சுட்டு நல்லா இருக்குனு தமிழ் நாளிதழ் ஒன்னு (தினமலர்) பிரசுரிச்சு இருந்தாங்க. இது ஒரு சாதனைதான் என்ன பொறுத்தவரைக்கும்.


2. அடுத்து நம்ம ஜி கெளதம் அவங்க ஒரு தடாலடி போட்டி வெச்சிருந்தாங்க. படம் போட்டு அதுக்கு கவிஜ எழுதனும். அதுதான எனக்கு ஈசியான வேலையாச்சே. எழுதியிருந்தேனுங்க அதைய குங்குமத்துல கூட போட்டிருந்தாங்க. அதை படிச்சிட்டு என் நட்பு வட்டம் அடிச்ச நக்கலுக்கு அளவே இல்ல அது வேற விசயம்.

3. சுடர் ஏத்த சொன்னாங்கனு ஏத்துனேன் நானும் அது கொஞ்சம் உறுப்படியாதான் இருக்குனு எல்லாரும் சொன்னாங்க. அதனால அதையும் சேர்த்துட்டேன்.



4. காந்தார கலை பத்தி ஒரு பதிவு எழுதினேன் அது பூங்கா இதழில் வந்தது. பாவம் புத்தருக்கு கொஞ்சம் மரியாதை கிடைச்சது. :)

இன்னும் நிறைய சாதனைகள் பண்ணனும்னு ஆசைதான் ஆனா பாருங்க நமக்கு எழுதறது வரவே வராது. மத்தவங்கள நக்கல் பண்றது மட்டும் கொஞ்சம் நல்லா வரும் அதனால அதை மட்டுமே பண்ணிட்டு இருக்கேன். இப்டியே சொல்லிகிட்டே போன இதுக்கு பேரு விளம்பரம்னு சொல்லு வாங்க. அதனால (அதனால மட்டும்தான்) கொஞ்சம் என் பெருமைகளை அடக்கி வாசிக்கிறேனுங்க.

ஒன்னா ரெண்டா சொக்கா எட்டு சாதனைய போடனுமாமே என்ன போடுவேன் எப்படி போடுவேன். எதை போடுவேன். அதனால போதும் நிறுத்திக்கிறேன். இத்தோட நிறுத்திக்கிறேன். கிட்ட தட்ட எல்லாரும் எட்டு போட்டுட்டாங்க. இருந்தாலும் வடுவேனா எனக்கு கிடைச்சத அவங்களும் அனுபவிக்கனும்ல
நான் கூப்பிடற எட்டுபேரு

1. எப்பபாரு சீரியசா மட்டுமே பதிவு போடற கோபாலன்
2. சவுண்ட் பார்ட்டினு பேர் வெச்சிட்டு அமைதியா இருக்கற உதயகுமார்.
3. கபீர் பத்தி எழுதற திரு உமேஷ் அய்யா
4. கவுஜனு என்னமோ எழுதற கமல்ராஜா
5. எப்பவாது பதிவு போடும் மனசு
6. டெக்னிகலா எழுதற அருண்குமார்
7. மதுரைய சேர்ந்த (மீட்ட) பாண்டியன்
8. புதுகை பாண்டியன் அண்ணாச்சி (ஆங்கிலத்தில எட்டு போட்டாலும் பரவாயில்ல‍ை)

விளையாட்டின் விதிகள்:


1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

Tuesday, July 03, 2007

இணைய நண்பர்கள் சந்திப்பு 3

சில ஒளிப்படங்கள்...


ரொம்ப பிசியா நடக்குது கூட்டம்.

போண்டா குடுக்கலீனு யாரும் சொல்லகூடாதுல்ல அதான் போண்டா மற்றும் கேசரியுடன் படம் எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்... :)



மழை வந்ததால் கூட்டம் வெளியில் இருந்து வீட்டுக்கு உள்புறம் சென்று தொடர்ந்தது.













Monday, July 02, 2007

இ‍ணைய நண்பர்கள் சந்திப்பு - 2

நேற்று காலை தொடங்கிய சந்திப்பில் அனல் பறந்ததுஎப்போதும் விளையாட்டாய் போகும் சந்திப்பு நேற்றோமிக சீரியசாய் போனது .சில விவாதங்கள் :
1.தமிழ்மணம் ஆரம்பிக்கபட்டதன் நோக்கம் என்ன -காசி அவர்களின் பதில்
2.. நான் வீரப்பனை பிடிக்கும்போது அந்த படையில்வேலை பார்த்தேன் துறை சார்ந்த ரகசியங்களைவெளியிடலாமா - ஓரு போலீஸ் அதிகாரி கேட்டார்
3.விடாது கருப்பு பல நன்மைகளும் செய்துள்ளார் -நண்பர் ஒருவர் தகவல்
4.கம் யூனிஸ்டுகள் 100 சதவீத தீர்வை தரமுடியுமா-செல்லா அதிரடி கேள்வி
5.அசுரனை ஏன் விலக்கினீர்கள் ,எனது கேள்விக்குமுத்தமிழ் நிர்வாகி திணறல்
6.பிளாக்கர்கள் இனி என்ன செய்யலாம் -அனைத்து ஊடகங்களிலும் பிரபலபடுத்தலாம் தகவல்
7.திருப்பூரில் இருந்து கலந்து கொண்ட ஓனர் ஒருவரின்வலைப்பூக்கள் பற்றிய கருத்து -நான் ஒரு திராவிட விரும்பி
8.தமிழ்மணத்தில் மக இக வின் ஆதிக்கமா - செல்லா குற்றச்சாட்டுஎதிர்பார்க்காத அளவு நிறைய பேர் கலந்து கொண்டதாலும் புதிதாக நிறைய பேர் வலைபதிவர் ஆகி இருப்பதும் வரவேற்க தக்க விசயங்கள்

இதெல்லாம் தியாகு எழுதியது இதன் விரிவான விளக்கம் அவரே எழுதுவாருங்க

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பு - 1

நேற்று (01-07-07) இணைய நண்பர்கள் சந்திப்பு கோவையில் இனிமையாக நடந்து முடிந்தது. ‍நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு மாலை 5.30 வரை அடாத மழையிலும் விடாது நடந்தது. இடம் கவுண்டம்பாளையத்தில் உள்ள மஞ்சூர் ராஜா அவர்களின் இல்ல மூன்றாம் தளத்தில் நடந்தது.
இதன் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என எண்ண வேண்டாம். ஏனெனில் இதில் கலந்து கொண்டவர்கள் வெறும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல, முத்தமிழ் குழுமத்தில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்பயணி வலைதளத்தை சேர்ந்தவர்கள் எனவே இதற்கு பெயர் இணைய நண்பர்கள் சந்திப்பு என்று வைத்தோம்.

கலந்து கொண்டவர்கள் 15 பேர் கீ‍ழே பட்டியலில் உள்ளவர்கள்.

1. கமல்ராஜா

2. உமேஷ்

3. வின்சென்ட்

4. K.P.குப்புசாமி

5. காசி (தமிமணம்)

6. பாண்டியன்

7. வி.கனகராஜ்

8. ஓசை செல்லா

9. தியாகு

10. செந்தில்குமார்

11. யுவராஜ் சம்பத்

12. நம்பிக்கை பாண்டியன்

13. தமிழ்பயணி சிவா

14. மஞ்சூர் ராஜா

இவங்ககூட நானும் கலந்துகிட்டேன் :)


சரி இன்னும் என்ன பேசுனோம் அப்புறம் புகைப்படங்கள் எல்லாம் அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போதைக்கு கொஞ்சம் ஆணி புடுங்கனும் வர்ட்டா :)