Sunday, May 28, 2006

நாகலிங்கம்


இந்த படத்துக்கு மேட்டர் இங்க போய் பாருங்க. இது நான் முதல்ல போட்ட போஸ்ட்டிங்கோட தொடர்ச்சினு வெச்சிக்கலாம்.இந்த மலர் இயற்கையின் அற்புதங்களில் ஒன்று. உள்ள இருக்கற லிங்க அமைப்பை சரியா படம் பிடிக்க முடியல. இத படம் பிடிக்க தேடின தேடல் ம்ம்... மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் எங்கயும் கிடைக்கல. கடைசில ஒரு நண்பர் கும்பகோணத்திலிருந்து எடுத்து கொடுத்தாரு.படம் எடுத்து கொடுத்த நண்பருக்கு நன்றிங்கோ.

Saturday, May 13, 2006

சித்தார்த்தா......

இன்று புத்தர் பிறந்த தினம். வட இந்தியாவிலும் சீனா,ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
புத்தரோட கொள்கைகள்னு பார்த்தா முக்கியமானது பிற உயிர்களுக்கு துன்பம் தரகூடாது,ஆசைதான் துன்பத்திற்கு அடிப்படை அப்டீனு சொல்லியிருக்காரு. எல்லாம் நம்ம பாட புத்தகங்களோட புண்ணியத்துல தெரிஞ்சுகிட்ட விசயங்கள். புத்த துறவிகள் வாழ்க்கைல அவங்களால முடிஞ்சவரைக்கும் பிறருக்கு உதவியா இருந்திருக்காங்க. வைத்தியம் செய்யறது, ஓவியம் வரையது அவங்கபாட்டுக்கு அமைதியா வாழ்ந்திருக்காங்க. இது போக சில துறவிகள் நல்ல பல நூல்களும் இயற்றியிருக்காங்க.
நம்ம அசோகர் (அதாங்க மயிலுக்கு மன்னிக்கவும் மையிலுக்கு ஒரு குளம் வெட்னவரு) காலத்துல புத்தரோட கொள்கைகளை நல்லாதான் வளத்துனாரு. தன்னோட மகன் மகள் எல்லாரையும் அனுப்பி புத்த மதத்தை பரப்பியிருக்காரு. அட நம்ம சிலப்பதிகாரம் மணிமேகலை காலத்திலகூட புத்த மதம் நல்லாதான் இருந்திருக்குது. இப்பவும் புதுக்கோட்டை சித்தன்னவாசல் குகைகளில் அவங்க ஓவியங்களும் கல் படுக்கை களும் இருக்குது.
விசயம் என்னனா புத்தர் பிறந்து வளர்ந்தது போதனை செய்தது எல்லாம் இந்தியாவில, ஆனா புகழ் பெற்று அது ஒரு தனி மதமா சிறந்து விளங்கறது வெளிநாட்டுங்கள்ல. இதுக்கு காரணம் என்னனே தெரியல. ஒரு வேலை அவர் தென் இந்தியாவில் பிறந்திருந்தா ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரிசையில அவரும் ஒருத்தரா ஆயிருப்பார்னு நெனக்கிறேன். எப்படியோ
இந்த ஒரு நாளாவது புத்தரைப்பற்றி நினைக்கலாம்.
வந்தோரை வாழ வைக்கும் தமிழகம் எப்படி புத்தரை கண்டுக்காம விட்டுதுனு தெரியல?