Friday, December 29, 2006

முதலாம் பிறந்த நாள்.

2006 ம் ஆண்டு முடிஞ்சுது புது வருசம் பிறக்க போகுது அதே நேரம் என் வலைப்பூவுக்கும் ஒரு வருடம் முடியுது. அதனால ஒரு சின்ன பார்வை. ஏன்னா பெரியவங்க சொல்லியிருக்காங்கள்ள கடந்து வந்த பாதைய எப்பவும் மறக்க கூடாதுனு அதான்.

பொதுவா இந்த ஆண்டு என்னை பொறுத்த வரைக்கும் வலையுலக ஆண்டுனே சொல்லலாம். அந்த அளவு 2006 வாழ்க்கையில் அதிலும் தமிழ் வலை உலகம் நிறைஞ்சிருக்குது.

இந்த வருட ஆரம்பத்துலதான் வலைப்பூ (Blog) அப்படீனா என்னனே எனக்கு தெரியும். என் சகோதரர் அறிமுகப்படுத்தி வெச்சாரு. அப்ப முதன்முதலா நான் படித்தது நம்ம கொங்கு நாட்டு ராசாவோட வலைத்தளம்தான் அதுக்கு பிறகு ஜிராகவனுடையது அப்புறம் அப்டியே தமிழ்மணம் ‍ஜோதியில நானும் இணைஞ்சுட்டேன்.

நான் பாட்டுக்கு அடுத்தவங்க கட்டுரைய படிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டு இருந்தேன். திடீர்னு முதன் முதலா நான் இந்தியாவும் உலக அதிசயமும் அப்டீனு ஒரு கட்டுரை எனக்கு தோனுத எழுதுனேன். அதைய தினமலர் பத்திரிக்கையில பிரசுரம் பண்ணினாங்க உடனே எனக்கு ஒரு நினைப்பு அட நாமளும் பெரிய எழுத்தாளர் போல இருக்கு. இனிமே நாமளும் எழுதுவோம்னு கண்டதையும் கிறுக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் போனவுடனே படம் போட்டு கதை எழுதறது கொஞ்சம் ஈசியா இருந்துச்சு. ஒரு படத்த போட்டு அதுக்கு ஒத்து வரமாதிரி ரெண்டு லைன் எழுத வேண்டியது. இப்டியே கொஞ்ச நாள் ஒப்பேத்துனேன். :)))))

அப்புறம் எனக்கு இந்த பூக்கள் மேல ஒரு பைத்தியம். எங்க பூ படம் பார்த்தாலும் உடனே புடுச்சு போட்டுடுவேன். அப்டியே எழுதி எழுதி கடைசில பூக்கள பத்தி மட்டுமே எழுதற நிலைமைக்கு வந்துட்டேன். கடைசியா கவிதைங்கற பேர்ல ஒரு கிறுக்கல் வேற.

ஆனா போன மாதம் திடீர்னு ஜி.கெளதம் வைச்ச போட்டில ஆறுதல் பரிசு வாங்கி குங்குமத்துல வேற பப்ளிஷ் பண்ணுனாங்க. அது ஒரு சந்தோசம். அப்பப்ப நான் எழுதி அடுத்தவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைக்கும் போது ஏதாவது ஒரு பரிசு கொடுத்து தொடர்ந்து எழுத வைச்சிடுறாங்க. பாவம் படிக்கறவங்க.

இந்த வலையுலகத்தை பொருத்த வரைக்கும் நான் ஒரு வருடக்குழந்தை. ஆனா இந்த ஒரு வருடத்துல கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய.
நிறைய நிறைய நண்பர்கள். நிறைய விதவிதமான மக்களை பற்றிய அறிமுகம். இந்த உலகத்தை சுருக்கி சின்னதாக்கிடுச்சு இந்த வலையுலகம். ஒரே விசயத்தை மத்தவங்க எவ்வளவு விதமா நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.

இனிவரும் அடுத்த ஆண்டிலாவது ஏதாவது உருப்படியா எழுதலாம்னு நினைக்கிறேன். :))