Thursday, June 28, 2007

மழையில் ஓரிதழ்



பெருமழைக்கு
ஒடிந்து சிதறும்
வர்ண மலர்கள்
சாயம் போகவில்லை
ஓரிதழும்

Sunday, June 24, 2007

இணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்

                   
அன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதி ஞாயிறுகால‍ை 10.00 மணியளவில் கோ‍வையில் இணைய நண்பர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நண்பர்களையும் வருக, வருக என இனிதே வரவேற்கிறேம்.


விழா குறித்து சில கேள்வியும் & பதிலும்...


        முதலில் இது எதற்க்கு? அவசியம் என்ன?


        குழுமங்கள் மற்றும் பல இணைய நண்பர்களின் நீண்ட நாள் சந்திப்புதிட்டம் செயலுக்கு வந்துள்ளது.


        யார், யார் கலந்துக்க?


        நீங்கள் வலைபதிவராகதான் இருக்கனும் என்று அவசியமில்லை, குழுமங்களில் கலக்குபவராக இருக்கலாம், மன்றங்களில் வெழுத்துக் கட்டுபவர்களாக இருக்கலாம், இணைய தளங்களில் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். அட அவ்வளவு ஏனுங்க சும்மா நடப்பதை எல்லாம்வேடிக்கை பார்ப்பவராக இருக்கலாம். இணையம் மற்றும் தமிழ் இவ்விரண்டேநம்மை இணைப்பதாக இருக்கும்.


        எதைப் பற்றி பேச?


        பல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசலாம். விரைவில் தலைப்புகள்பட்டியலிட படும்.


        அட இன்னமும் கிளம்பலையா...?


        சரி சரி நீங்க கேட்பது புரியுது யாரை தொடர்புக் கொள்ளனும் என்பது தானே உங்க கேள்வி...


        முத்தமிழ் மஞ்சூர் ராசா - 9443854163


        தமிழ்பயணி சிவா -             9894790836


        மின்னஞ்சல் முகவரி - vanusuya@gmail.com


       
வருகை தருபவர்கள் தவறாது முன்னதாக தொடர்புக் கொண்டால் தேவையான வசதிகள் செய்ய உதவியாக இருக்கும்.


இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....


        


வருவதாக உறுதியளித்துள்ளவர்கள் பெயர் பட்டியல்...







சிறப்பு 
விருந்தினராக தமிழ்மணம் நிறுவனர் திரு.காசிலிங்கம் அவர்கள்



1.முத்தமிழ் மஞ்சூர் ராசா

2.தமிழ்பயணி சிவா

3.திருப்பூர் தியாகு

4.அனுசுயா

5.ஆசாம் சிவா

6.கபீரன்பர் உமேசு

7.புதுகை பாண்டியன்

8.நாமக்கல் சிபி

9.ஜேகே

10.விஜய்

11.கமல்

12.ஆனந்த்



நீங்களும் உங்கள் வருகைய‍ை இங்கே பின்னூட்டமிடுவதன்
மூலம் உறுதி செய்யுங்கள்....

Monday, June 18, 2007

சிவாஜி படம் அனுவின் பார்வை

அப்பப்பா ஒரு ஆறு மாசமா ஆடி தள்ளுபடி, ஆட்சி மாற்றம், மழை, வெயில் கொடுமை எதுவுமே தெரியாத அளவு சிவாஜி பட வெள்ளத்துல மூழ்கடிச்சிடுச்சு நம்ம தமிழ்நாட்டு மக்கள. நான் பொதுவா சினிமாவுக்கே போக மாட்டேன் ஏதோ ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை போனா உண்டு. அப்டியாபட்ட நானே சிவாஜி படம் பாக்க வேண்டியதா போயிடுச்சு. எல்லாம் நேரம்....

என் கல்லூரி நண்பனோட கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போயே ஆகனும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இதுக்கு டிக்கட் விலை வேற ரொம்ப அதிகம் (ரொம்ப டூ மச் :( )

சரி சொந்த நொந்த கதை அப்புறம் படத்த பத்திய என் கருத்துக்கள் கீழே
ஞாபகம் வருதே ஞபாகம் வருதே

1. எத்தன நாளைக்கு ஒரு தனி மனிதன் ஆறு மாசத்துல நாட்ட திருத்துவான்னு படம் எடுப்பீங்க.? லஞ்சம் கேட்கற அதிகாரிங்ககிட்ட ஏன் நான் லஞ்சம் தரனும் எதுக்கு நான் தரனும்னு அதே கேள்விகள். (இந்தியன் படம் ஞாபகம் வருதே)
2.அப்புறம் திருடுன பணத்த பழைய பேப்பர் கூட ஒழிச்சு வெக்கிறது (ஜென்டில்மேன் படம் ஞாபகம் வருதே)
3. பாடல் காட்சிகள் குறிப்பா சகானா பட காட்சி அமைப்புகள் (ஜீன்ஸ் படம் ஞாபகம் வருதே)
4. அதே போல ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் 250கோடி சம்பாதிக்க எவ்வளவு வருசம் பாடுபடனும் அதே மாதிரி படிச்சு முடிக்கவே 25 வருசம் போயிடும் அப்டீனா அவரோட வயசு என்ன அந்த வயசுல காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இப்டி லாஜிக் ரொம்ப இடிக்குதே? (லாஜிக் பார்த்தா சினிமாவே பாக்க முடியாதுனு என் ப்ரெண்ட் சொன்னா அது கரெக்ட்தானுங்க :) )

சிறப்பு அம்சம்
1. நல்ல நகைச்சுவை காட்சிகள் பரவாயில்ல வாய்விட்டு சிரிக்க வெக்கறாங்க சில இடங்கள்ள.
2. ரஜினி நடிப்பு பரவாயில்ல நல்லாயிருக்கு.
3. இசை சிறப்பாயிருக்கு ஆனா பாடல் வரிகள் புரியற மாதிரி அமைச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

இதெல்லாம் என்னோட சின்ன அறிவுக்கு எட்டுன விசயங்கள். எனக்கு இருக்கற சின்ன மூளைக்கு இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சுது. என் கேள்வி ஒன்னே ஒன்னுதான் கடைசியா, இவ்ளோ செலவு பண்ணி இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாருமா சேர்ந்து இந்த படம்தான் எடுக்க முடிஞ்சுதா? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். :)

Monday, June 04, 2007

இது வெறும் விளம்பர பதிவு :)

வணக்கம் மக்களே ரொம்ப நாள் ஆச்சு பதிவு போட்டு. எல்லாம் இந்த அப்ரைஸல் பண்ற வேலை. தலை சூடானதுதான் மிச்சம் வேற ஒன்னும் காணோம். எவ்ளோ நேரந்தான் வேலை செய்யறா மாதிரியே நடிக்கறது அதான் திரும்ப பதிவு போட வந்துட்டேன். கடந்த ஒரு மாசத்துல பெரிசா ஒன்னும் நடக்கல அது அது அப்டி அப்டியேதான் போயிட்டு இருக்கு. நம்ம கச்சேரி தேவ் போட்ட பதிவுல மிகப்பெரிய கமெண்ட் (கதை) எழுதுனது தவிர வேற ஒன்னும் பெரிசா கானோம்.

அதுபோக ரெண்டு வாரம் முன்ன நம்ம பாலா அண்ணாச்சி மற்றும் ரவி, செல்லா தலைமைல வெற்றிகரமா ப்ளாக்கர் மீட் முடிஞ்சிருக்கு. உண்மையா பாராட்ட வேண்டிய விசயம். எனக்கு வேற சில சொந்த வேலை இருந்ததால போக முடியல. அடிச்சு பிடிச்சு போய் ரவியையும் வனஜ்ராஜாவையும் சந்திச்சேன். இதுல நம்ம பாலா அண்ணாச்சிக்கு போன் பண்ணா திட்டுவாருனு பயந்து போன் பண்ணல அதனால அவரு மனம் வருத்தமடைஞ்சு பதிவெல்லாம் போட்டாரு. (சாரிங்க :( ).




ஒரு மனுசி வேலை நல்லா பண்றானா அதுக்காக இப்டியா திரும்ப திரும்ப ஆணிய குடுத்து உக்கார வைக்கிறது முடியலப்பா சாமி. ஒரு ப்ளாக் எழுத முடியல ப்ளாக்ல போட்ட கமெண்ட்டுக்கு பதில் போட முடியல என்ன கொடுமை இது சாமி (டயலாக் மாத்திட்டேன் :)). இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு? (உள்ளுக்குள்ள அவங்களுக்கெல்லாம் சின்ன சந்தோசம்). இல்லீங்க நான் இன்னும் உங்களையெல்லாம் சுலபமா விட்டுற மாட்டேன். வந்துட்டேயிக்கேனுங்க. :)