Wednesday, September 17, 2014

நான் வளர்கி​றே​னே மம்மி



மாமா ​வைத்த பிறந்த நாள் விருந்தில்....

இன்னிக்கு பிறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள 5 வயசு முடிஞ்சிடுச்சு லக்சனுக்கு. ​ரொம்ப சந்​தோசம் ஆனா உள்ளுக்குள்ள ​ரொம்ப வருத்தம் எனக்கு. அவன் சின்னதா​வே இருக்ககூடாதானு (lol).அவனு​டைய ​குழந்​தைதனம் ம​றைஞ்சு ​கிட்​டே வருது. கவிதாயினி (மயக்குறு மகள்) மற்றும் உமாநாத்(​தேவ​தை வாழும் வீடு) எழுதும்​போது நான் நி​னைச்சுக்கு​வேன் என் மக​னை பற்றி எழுதசிறந்த த​லைப்பு ​சேட்​டை.அந்த அளவு அவனு​டைய ஆட்டம் இருக்கும்.சிறு குழந்​தையா இருக்கும்​போது எப்படா ​பெரிசாவான் ​கொஞ்சமாச்சும் ரகளை கு​றையும்னு இருந்துச்சு ஆனா இப்ப ஏன்டா ​பெரியவனா ஆகறான்னு இருக்கு.​சேட்​டை பல ​செஞ்சாலும் க​டைசில சில டயலாக்ல அப்டி​யே மறக்க வச்சிடுவான்.

உதாரணத்துக்கு சில..
கங்காணி - சின்ன குழந்​தையா இருக்கும் ​போது ​பேச்சு பழகும் சமயம் அடிக்கடி கங்காணினு ​சொல்லுவான் அது என்னனு கண்டுபிடிக்க பல நாள் ஆச்சு. என் அப்பா கண்ணாடி ​போடுவாரு அ​தைதான் அவன் கங்காணினு ​சொல்லி இருக்கான்.
உப்புமா லட்டு - ​போன மாசம் அம்மாகிட்ட ​தொ​லை​​பேசியில ​பேசும்​போது உனக்கு என்ன ஸ்வீட் ​​வேணும்னு ​கேட்டதுக்கு உப்புமா லட்டு மட்டும் ​செஞ்சு ​வெக்க ​சொல்லறான்
​பெட்சீட் புளு -  அ​தைவிட ஒரு நாள் ஓடி வந்து இங்க வந்து பாரும்மா புழு ​பெட்சீட் வந்திருக்குன்னு ​சொல்ல நான் ஏ​தோ ​சொல்லறான்னு எட்டி பார்த்தா அது கம்பளி புழு..இப்படி வார்த்​தைக​ளை எங்கிருந்​தோ ​தேடி புது வார்த்​தைக​ளை உருவாக்கிட்டு இருக்கான். இந்த மழ​லை எல்லாம் ​கொஞ்ச நாள்தான்னு நி​னைக்கயில வருத்தமா இருக்கு. முதல்ல பள்ளியில ​கொண்டு விட்டா பல தட​வை முத்தம் ​கொடுத்து சீக்கிரமா வந்துடுமா வந்துடும்மானு ​சொல்லுவான் ஆனா இப்ப ​ஒன்னும் கண்டுக்கற​தே இல்ல ​வேகமா ​போயி நண்பர்கள்கிட்ட ​சேர்ந்திடறான். ம்ம்ம் ......

அ​தே ​போல ​​வெளிய எங்க ​போனாலும் ஓடி வந்து நானும் வ​ரேனு அடம் பிடிச்சு முத்தம் ​கொடுத்து சமாதானம் பண்ணிதான் கிளம்பனும் இப்ப நிலம ​ரொம்ப ​மோசம் "கண்​​ணே அம்மா ​​போயிட்டு வ​ரேன்" உள்ள இருந்​தே "ஓ ​கே ​பை வரும்​போது கிண்டர் ஜாய் வாங்கிட்டு வந்திடு" இவ்வளவுதான் முடிஞ்சுது.
அது மட்டுமா பாடம் படிக்க ​​சொன்னா ​போதும் பசி எடுக்கு​ம், தூக்கம் வரும், பாத்ரூம் வரும் அல்லது ​கை வலிக்கும் இ​தெல்லாம் யார் ​சொல்லித்தறாங்கனு ​தெரியல ​ஆனா க​ரெக்டா ​செய்யறான்.
அவன் வளர வளர நம்ம விட்டு தூரமா ​போறமாதிரி ஒரு பீலிங் இருக்கு இருந்தாலும் குழந்​தை வளர்ரத பார்க்க சந்​தோசமாவும் இருக்கு. ம்ம் 

என்ன பண்ண நான் இப்டி புலம்புனா என் அம்மா ​கேட்கறாங்க இப்டிதான எங்களுக்கும் இருக்கும் இப்டி வளர்த்து எல்லாம் பண்ணதுக்கு அப்புறம் விட்டுட்டு ​வெளிநாட்டுல ​போயி உக்காந்துக்கிட்டு அடுத்த வருசம் வ​ரேன் அப்ப வ​ரேன் இப்ப வ​ரேனு ​சொல்லிகிட்​டே இருக்கீங்கள்ள அப்டினு ​கேட்கறாங்க ம்ம் அதும் சரிதான் நாம இன்னிக்கு பண்றத நா​ளைக்கு நம்ம பசங்க பண்ண ​போறாங்கனு மனச ​தேத்திக்க ​வேண்டியதுதான்.