Saturday, July 09, 2011

ஆன கத,,,,



குழல் இனிதல்ல யாழ் இனிதல்ல தம் மக்கள் மழலைச் சொற்கள் முன்னால். அது நூறு சதம் உண்மையே. அதை அனுபவிச்சாதான் தெரியும். என் மகனுக்கு தற்போது 2 ஆண்டு முடிய போகிறது. தற்போது கதை கேட்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதுதான் இந்த பதிவின் தலைப்பே.
தினமும் குறைந்தது 4 முறையாவது என் பையன் என்னிடம் "அம்மா ஆன கத" என்று கேட்காத நாள் இல்லை. உறங்கும் நேரம் தவிர அவனுக்கு மீதி நேரம் முழுக்க கதை கேட்பதில் அத்துனை ஆர்வம் அதிலும் குறிப்பாக யானை கதை மட்டும் வேண்டும். யானை போட்ட படங்கள், யானை கார்டூன், யானை வைத்து சொல்லப்படும் கதைகள் அனைத்தம் யானைதான்.
இந்த Iceage கார்டுன் பார்த்து பார்த்து எனக்கு ஒவ்வொரு சீனும் மனப்பாடமே ஆயிடுச்சு. பாவம் அந்த CD தேஞ்சே போச்சு. எப்ப பாரு ஆன கத ஆன கதனு கேட்டு இப்பவெல்லாம் ஆனை வடை திருடிட்டு போயி மரத்து மேல உக்காந்துதுனு சொன்னாலும் கேட்டுக்கிறான். இந்த ஆனை வியாதி எப்ப முடியும்னு தெரியல.
இவனுக்கு கதை சொல்ல போக நெட்டுல யானை பத்தி தேடி தேடி படிச்சுட்டு இருக்கேன். அதுல கிடைச்சதுதான் யானை டாக்டர்.

Wednesday, July 06, 2011

யானை டாக்டர்

யானை டாக்டர் நேத்துதான் படிச்சேன் என்னால அதை பற்றி எழுதாம இருக்க முடியல. உண்மையில ஒரு நல்ல விசயம் படிச்ச திருப்தி இருந்துச்சு. நாம எதை வெற்றினு நினைக்கிறோமோ அது இயற்கைக்கு முன்னாடி ஒன்னுமே இல்லாத விசயமா ஆயிடுது.
அணுகுண்ட சமாளிச்சு வெற்றி பெற்ற ஜப்பான் கூட இயற்கைய பாத்து பயந்துதான் நிக்குது. நாம இன்னும் தெரிஞ்சு அனுபவிக்க பல விசயங்கள இயற்கை தன்கிட்ட வெச்சு இருக்கு. இயற்கைய நேசிக்க ஆரம்பிச்சா நம்மளோட போட்டி பொறாமை எல்லாம் கொஞ்சம் தணியும்கிறது என்னோட எண்ணம்.

Friday, April 03, 2009

குங்குமப்பூ


வணக்கம் மக்களே பதிவுனு ஒன்னு எழுதி பல மாதங்கள் ஆச்சு. இப்ப வந்ததுக்கு காரணம் பழையபடி பூ பத்தி எழுததான். நானும் பல விதமான பூக்கள பத்தி எழுதிட்டேன். ஆனா இப்ப ஒரு குறிப்பிட்ட பூவ பத்தி எழுதற நேரம் வந்தாச்சு. ஆமாங்க நாம இப்ப பார்க்க போறது குங்குமப்பூ.
குங்குமப்பூ அப்படினா நமக்கு உடனே ஞாபகம் வரது தமிழ் படத்தில வர்ர சீன்தான் குழந்தை கலரா பிறக்கனும்னா குங்குமப்பூவ பால்ல கலந்து குடிக்க சொல்லுவாங்க. அது தவிர இந்த பூவ பத்தி வேற ஒன்னும் தெரியாது. அது மட்டும் இல்ல நான் இது வரைக்கும் குங்குமப்பூனா குங்குமக் கலர்ல சிவப்பா இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்பதான் தெரியுது குங்குமப்பூ பிங்க் கலர்ல சூப்பரா கீழ படத்துல இருக்கற மாதிரி இருக்கும்னு.






அப்புறம் நாம பயன் படுத்தறது குங்குமப்பூக்களின் இதழ்களை இல்ல. அதுக்கு உள்ள இருக்கற மகரந்த இதழ்கள் மட்டும்தான். மேல படத்தில இருக்கற பூவுக்கு உள்ள இருந்து வர சிவப்பு மகரந்தம்தான் நாம பயன்படுத்தற குங்குமப்பூ. 1500 மலர்களில் இருந்து எடுத்தா அதிக பட்சம் 50 மிகி அளவுதான் குங்குமப்பூ கிடைக்கும். அதனாலதான் அது விலை மிக அதிகமா இருக்கு.


குங்குமப்பூ பல வகைகளிலும் பயன்படுது மருத்துவம், சாயம், உணவு வகை தயாரித்தல், வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன் படுத்தறாங்க.
குங்குமப்பூவினால நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களும், காய்ச்சல், கல்லீரல் பாதிப்பு எல்லாத்துக்கும் மருத்தா பயன்படுது. ஆனா அளவுக்கு அதிகமாவோ அல்லது மருத்துவர் ஆலோசனை இல்லாமயோ பயன்படுத்துனா இது மிகக் கடுமையான உடல்நல பாதிப்புகளை உண்டாக்குமாம். அதனால அதிகமா உபயோகப்படுத்த கூடாது.

அது மட்டும் இல்லீங்க குங்குமப்பூ குழந்தைக்கு நிறத்தை குடுக்கும்னு எந்த உறுதியான தகவலும் இல்லை. ஆனா பெரியவங்களுக்கு அழகு சாதனப் பொருட்கள் செய்யும் போது பயன்படுத்தறாங்க.
எது எப்படியோ இந்த குங்குமப்பூ வழக்கம் போல எல்லா மலர்களையும் போலவே அழகா இருக்கு. பார்க்கவே ஆசையா இருக்கு.



Tuesday, September 23, 2008

ஆப்பிரிக்காவில் அனு

வணக்கமுங்க இந்த பதிவு ஒரு தொடர்பதிவு இதுல நான் இருக்கற நாடு அதாவது தான்சானியா அதோட சுத்துபட்டு நாடுகள், அவங்க வரலாறு,வாழ்க்கை முறை, மக்களோட அன்றாட வேலை எல்லாத்தையும் பத்தி முடிஞ்ச வரைக்கும் தெளிவா எனக்கு தெரிஞ்சத எழுத போறேன்.படிச்சுட்டு நல்லா இருந்தா கமெண்ட் போடுங்க இல்லைனாலும் கமெண்ட் போடுங்க மாத்திக்க முயற்சி பண்றேன். பொதுவா ஆப்பிரிக்கானாலே இன்னும் எல்லாரும் இருண்ட கண்டம் அப்படினுதான் நினைக்கறாங்க. இன்னும் இங்க மனிச கறி சாப்பிடறஆதிவாசிகள் குடியிருக்காங்க. இங்க போனா எதுவுமே கிடைக்காது அப்படி இப்படினு பல பயங்கர பயமுறுத்தல்கள் இருந்துகிட்டுதான் இருக்குஅது உண்மைனு நானும் கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நம்பிட்டுதான் இருந்தேன். இங்க வந்த பிறகுதான் சில உண்மைகள் புரியும்.சரி சரி கதைக்கு வரேன் வழக்கம் போல எங்கயோ சுத்திட்டு இருக்கேன்.


ஆப்பிரிக்கா அப்படினாலே மிகப் பெரிய கண்டம்னு எல்லாறுக்கும் தெரியும். சரி ஆனா இதுல மிக்பெரிய நிலப்பகுதி சகாரா பாலைவனம். அதாவது வடக்கு பகுதி, அதே வடகிழக்கு பகுதியில குறிப்பா எகிப்து, சூடான் இங்கயெல்லாம் நைல் நதி பாஞ்சு மிக மிக செழிப்பா இருக்குது.ஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம் அதாவது பாலைவனத்துக்கு மேல வடக்கு பகுதி, பாலைவனத்துக்கு கீழ தெற்கு பகுதினு. இதுல பாலைவனத்துக்கு மேல உள்ள நாடுகள் நைல் நதி பாயறதாலயும், ஐரோப்பாவுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கறதாலயும் நல்ல முன்னேற்றத்தோட இருக்குது.அதே போல கிழக்கு பகுதியில கடலோரம் இருக்குற நாடுகளும் தென் ஆப்பிரிக்காவும் நல்ல நீர் வழத்தோடயும் ஆசியா அரேபிய நாடுகள்கூட தொடர்பு கொண்டு நல்லா வழமாதான் இருக்காங்க. இது எல்லாத்துலயும் பாவப்பட்டவங்க மேற்கு ஆப்பிரிக்காதான். ஏன்னா இவங்க அடுத்த கண்டத்தோட தொடர்பு கொள்ளனும்னா ஒன்னு மேற்கு பக்கம் அட்லாண்டிக் கடல்ல பல தூரம் கடந்து தென் அமெரிக்காவுக்கு வரனும் இல்லைனா கிழக்க பெரிய ஆப்பிரிக்க நிலப்பரப்ப கடந்து அரேபியா அல்லது ஆசியாவ அடையனும். ரெண்டு பக்கமுமே ரொம்ப தூரம்.அதனால முன்னேற்றம் கொஞ்சம் கம்மிதான் அங்கெல்லாம்.
இப்ப இந்த கண்டத்துல கிழக்கு கடலோரம் இருக்கற தான்சானியாங்கற நாட்டுலதான் நான் இருக்கேன். இந்த நாட்ட பத்திதான் நான் எழுத போறேன்.
அடுத்த பதிவுல சந்திக்கறேனுங்க நன்றி வணக்கம் இப்போதைக்கு :)

Wednesday, September 17, 2008

ஒரு சின்ன சந்தேகமுங்க

வணக்கம்,
இந்த பதிவுல ஒன்னுமே இல்லீங்க வெறும் டெஸ்ட் பதிவுதான் பல நாள் நான் என் வலைப்பக்கம் வரவே இல்ல அதான் ஒரு சந்தேகம் வலைப்பூ உயிரோட இருக்கா இல்லையானு ஒரு சின்ன சந்தேகம் அதான் இந்த பதிவு. சரி வந்தது வந்துட்டீங்க இந்த படத்தையும் பார்த்துட்டு போங்க.


இது தான்சானியாவுக்கு பக்கத்துல இருக்கற சான்சிபார்ங்கற தீவுல எடுத்தது. முடிஞ்சா இனிமேலாவது ஏதாவது எழுத முயற்சி செய்ய‍றேன். (ஆமா ஒவ்வொரு தடவையும் இததான சொல்லறேனு நினைக்கறீங்க :)

Saturday, April 12, 2008

மக்களாட்சி

பல நாளா நானும் யோசிச்சது உண்டு. இந்த ஜனநாயகம் அரசியல் அமைப்பு சட்டம், திட்டங்கள், கொள்கை, அறிக்கை இப்டியெல்லாம் எப்பபாரு மெனக்கெட்டு பேசிக்கறாங்க. இதுக்காக எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் கண்டபடி திட்டி திண்டாடி என்ன என்னமோ பண்ணி நிறைவேத்துறாங்களே. இதுக்கெல்லாம் ஏன் இப்டி கஷ்டப்படறாங்க. எதுக்கு வீணா வாதம் பிரதிவாதம் பண்ணி நேரத்தையும் பணத்தையும் வீணாக்குறாங்க இப்‍டியெல்லாம் யோசிச்சதுண்டு. ஏன்னா பள்ளிகூடத்துல இருந்து பாடங்கள பெறும்பாலும் இதை சுத்தியேதான் இருக்கும். ஆனா எந்த மாணவனும் அதை படிச்சு பயன் அடைஞ்சதா தெரியல இதுக்கு காரணம் நம்ம கல்வி சொல்லி தர முறை மாற வேண்டும் அல்லது விசயத்தை கொஞ்சம் சுருக்கி படங்கள் மற்றும் நடப்பு நிலவரத்தோட கம்பேர் பண்ணி சொல்லி தரனும். சரி விடுங்க அது கல்வி முறை மாற்றத்தில வருது. இப்ப தலைப்புக்கு வர்ரேன்.

திட்டம்னா முதன் முதல்ல இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்போ மக்கள் தொகை கிட்டதட்ட வெறும் 50கோடிதான் ஆனா பஞ்சம் வறுமை எல்லாம் நல்லா அமோகமா இருந்துச்சு இதை போக்க என்ன பண்ணலாம்னு சில நல்ல அரசியல்வாதிகள் ஐந்தாண்டு திட்டம்னு ஒன்னு கொண்டு வந்து எங்க எங்க முடியுதோ அங்க எல்லாம் அணைகளை கட்டி வாய்க்கால் வெட்டி நீர் பாசனத்தை பெறுக்கி உணவு உற்பத்திய பெறுக்கி இப்டி என்ன என்னவோ செஞ்சு உணவு பற்றாக்குறையில்லாம வறுமை அண்டாம இன்னிய மக்கள் தொகையிலயும் காலந்தள்ளற அளவு முன்னேற்றம் பண்ணியிருக்காங்க.

அதுக்கு பிறகு உள் கட்டுமானம் அதாங்க (Infra structure) போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு. இத பத்தி சொல்லவே வேண்டாம் யாராவது தப்பி தவறி மொபைல் போன் இல்லைனு சொன்னா ஒன்னு அவரு வெளிநாட்டுகாரரா இருக்கும் இல்லைனா பேச முடியாத குழந்தையா இருக்கும் அந்த அளவு பெறுத்துடுச்சு. போக்குவரத்தும் ஒன்னும் குறைஞ்சிடல கிட்டதட்ட எல்லா கிராமங்களும் போக்குவரத்து வசதில தன்னிறைவு பெற்றுதான் இருக்கு.

அது போக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். கண்டிப்பா 100 சதவீத தன்னிறைவு இல்லை. ஆனா கிட்டதட்ட முழு அளவு இருக்குது. சரி எதுக்கு இப்போ இந்த விளம்பரம்னு கேட்கறீங்களா? ஒன்னும் இல்லீங்க திட்டம்னு ஒன்னு போட்டா அதை நிறைவேத்தி செயல் படுத்த கொஞ்ச காலம் ஆகும். ஏன்னா எத்தனையோ அரசு அலுவலகங்களை தாண்டி மக்களை வந்தடையவே பல காலம் ஆகும். அது வரைக்கும் அரசாங்கம்னு ஒன்னு நிலையா இருந்தாதான் அந்த திட்டம் கடைசி குடி மகனுக்கும் வந்து சேர்ந்து கொஞ்சமாச்சும் ஆமை வேகத்திலயாவது முன்னேற முடியும், அதை விட்டுட்டு இந்த ஜனநாயம் எல்லாம் சுத்த தெண்டம். கம்முனு சர்வாதிகாரம்தான் நல்லதுஅல்லது வேற ஆட்சி முறைதான் நல்லதுனு இள ரத்தங்கள்லாம் கர்ஜணை பண்றாங்க ஆனா ஒரு விசயம் தெளிவா இருக்கனும் என்ன ஆட்சி நடந்தாலும் ஜனநாயகத்துலதான் பலன் ஆமை வேகத்துலயாவது நிஜமா கஷ்டப்படுற மக்களுக்கு போய் சேரும் அதை விட்டுட்டு குதிச்சா அது முக்கிய நகரங்கள்ள மட்டும்தான் பலன் அடைஞ்சு முன்னேறும். ஆனா சத்தம் இல்லாத கிராமங்கள் முன்னேறாது. அதனால மக்களே முடிஞ்ச வரைக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க நம்மளால முடிஞ்ச கடமைய செய்யனும் இல்லீனா அடுத்த தலைமுறைக்கு ‍ரொம்ப சிரமமா போயிடும்.

எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் இப்படி பாராட்டவோ அல்லது திட்டவோ அல்லது மொக்கை போடவோ அனுமதிக்கும் மக்களாட்சிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய ஒரு மொக்கை கட்டுரை சமர்ப்பணம்.

வாழ்க மக்களாட்சி..!!

Thursday, April 10, 2008

கற்கை நன்றே..!!

நான் கற்ற புத்தகங்களில் முக்கியமான சிலவற்றை குறித்த பகிர்தல்.
இதை நான் நமது புதிய இளைய தலைமுறைக்கு எனது ஆலோசனையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் காந்தியின் சத்திய சோதனை போன்ற நீதிநெறி மற்றும் பகவத்கீதை போன்ற மதம், அரசியல் சார்ந்த தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேச போவதில்லை. உலக அறிவு மற்றும் பல்வேறு வெற்றி தோல்விகளையும், ஒற்றுமை மற்றும் விரோதங்கள் குறித்து சொல்லும் நூல்கள் இவை. தவிரவும் இவைகளை பின்வரும் வரிசையில் படிப்பதால் உலக அறிவும் வளரும் என்றே அசட்டு நம்பிக்கையும் உள்ளது.

நீரினுள் எழும்பி வெடிக்கும் காற்று குமிழி போல...
- நேரு


1. நேருவின் உலகவரலாறு பாகங்கள் 1 & 2
தனது பதின்ம வயது மகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே என்றாலும்
பலமடங்கு வயதான நமக்கும் வியப்பான ஒரு நூலே. இது புத்தகமாக வெளி வந்த சமயத்திலேயே தமிழாக்கம் (திரு.அழகேசன் என்பது சரி என்றே எண்ணுகிறேன்) செய்யப் பட்டுவிட்டது. ஒரு தந்தை தன் குழந்தைக்கு சொல்லும் அதே பாங்குடன் உலகை குறித்த வரலாற்றை விவரிக்கிறார். பல்வேறு மொழிகள், மதங்கள், இராச்சியங்கள் என்று அனைத்தையும் கால வெள்ளத்தினுள் நீந்திவாறே விளக்குகிறார்.

அவருடைய கொள்கைகளை மறந்து படிக்க ஆரம்பித்தால் மிக அருமையான நூல் இது. எண்ணற்ற மதங்கள், மொழிகள், கொள்கை கோட்பாடுகள், இராச்சியங்கள் அனைத்தும் தோன்றி அழிந்த பாங்கினை விவரித்து வரும் போது மேலே சொல்லியுள்ள உவமையை காட்டுவார். மெய்சிலிர்க்க வைக்கும் தருணம். கிட்டதட்ட ஆங்கில அரசாங்கமும், அடிமை இந்தியாவும் என்ற வரைக்கும் இருக்கும்.

2. மதனின் - வந்தார்கள் வென்றார்கள்

கிட்டதட்ட இரு பாகங்களாக உள்ள உலக வரலாற்றின் சுருக்கி வரைதல் போன்று எளிய முறையில் சுவைபட விவரித்துள்ளார். தைமூரில் ஆரம்பித்து கிட்டதட்ட ஆங்கில ஆட்சி துவக்கம் வரை புத்தகத்தை கீழே வைக்க இயலாத அளவு சுவையுடன் கொடுத்துள்ளார். வண்ண வண்ண ஓவியங்கள் மிக அழகாக மனதை கொள்ளை கொள்ளும் வ‍கையில் இருக்கிறது.

3. கல்கியின் - சிவகாமியின் சபதம்

காலத்தே இரண்டாவதாக எழுதப்பட்டு இருந்தாலும் முதலில் படிக்க வேண்டியது. ஓவியக்கலை, சிற்பக் கலை, நடனக் கலை என்று எங்கு எந்த பக்கம் படித்தாலும் அரசியலும் , கலையும் சரியான போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். இவை தவிர அன்றைய தமிழர் தம் வாழ்வியல் முறைகள், போர் திட்டமிடல், ஒற்றாடல் என்று இன்றைய நவீன நாவல்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்திருக்கும்.

4. கல்கியின் - பார்த்தீபன் கனவு

கல்கியின் கிட்டதட்ட முதலாவது வரலாற்று நாவல். அளவில் சிறிதாக
இருப்பினும் படிக்க சுவையான எளிய கதை.

5. கல்கியின் - பொன்னியின் செல்வன் 1,2,3,4 & 5

சொல்லி தெரியவேண்டியதில்லை பொன்னியின் செல்வன் பெருமைகளை. யாவரும் படித்து இன்புறும வண்ணம் தமிழர் தம் வாழ்க்கை முறை, அது இது என எண்ணற்ற செய்தி குவியல்கள் நிலவறையினுள் உள்ள பொக்கிஷம் போல குவிக்கப் பட்டுள்ளது. உள்ளே போய் வர பயிற்ச்சி எடுத்தால் அனுபவிக்க ஏராளம், ஏராளம்...

6. நள்ளிரவில் சுதந்திரம்- வெளிநாட்டு ஆசிரியர்கள் (Larry Collins,Dominique Lapierre)

இந்திய சுதந்திர சமயத்தில் நடைபெற்ற சுவாரசியமான தகவல்கள் களஞ்சியம் என்றே சொல்லலாம். இன்றைய இந்திய டூடே புத்தகத்தின் அன்றைய முன்மாதிரியாக செய்தி திரட்டுவது மற்றும் வழங்கும் கோணங்கள் பிரமிக்க வைக்கிறது. நாம் எதிர் பாரா கோணங்கள் நமக்கு வெளிச்சமிடப் பட்டு காண்பிக்க படும் போது மிகவும் வியப்படைய வேண்டியிருக்கிறது. தமிழாக்கம் செய்ய பட்டு வெகு அருமையாக உள்ளது. தமிழாசிரியர் பெயர் அறிய இயலவில்ல‍ை.

மேற்க் கண்ட புத்தகங்களை மேற்க் கண்ட வரிசையிலேயே படிப்பது
நமக்கும், நம் வாரிசுகளுக்கும் பாரதம் மற்றும் பிற சமூகங்கள் குறித்த தேவையான அறிவை வழங்கும் என்றே எண்ணுகிறேன்.