Sunday, April 14, 2019

ஒன்றா இரண்டா 14 வருசம்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். பதினாலு வருசத்துக்கு முன்ன இதே நாள் நானும் என் தோழியும் விமானத்துல இருந்தோம். அன்னைக்கு எங்கள வழி அனுப்ப வீடே திருவிழா கோலத்துல இருந்த்து முதல் நாளில் இருந்து உறவினர் நண்பர்கள் வருகை, வித விதமான திண்பண்டம் அறிவுரை இப்படி எவ்வளவோ விசயங்கள். அதே இப்ப கிளம்பினா எங்க அம்மா வீட்டுக்குள்ளயே இருந்த டாடா சொல்லிடறாங்க. ஆமா  அவங்கள சொல்லி குத்தம் இல்ல வருசா வருசம் இதே வேலையா இருந்தா அவங்க என்ன பண்ணுவாங்க.
நான் இத்தாலி போய் தொழில் கத்துகிட்டு முன்னேறினானு தெரியல ஆனா வலைப்பதிவு ஆரம்பிச்சு நிறைய நண்புகள் அமைந்த்து. அதுக்கப்புறம் கல்யாணம் ஆகி சில சின்ன மற்றும் பெரிய கஜா புயல்களால் எதுவும் உருப்படியா எழுதவே இல்ல (சரி சரி இல்லனா மட்டும் பெரிய அருந்த்தி ராய்னு நினைப்பு அப்படினு நீங்க நினைக்கறது புரியுது)
இப்ப இந்த விளம்பரம் எதுக்குன்னா இந்த முகநூல் பார்த்து போர் அடிச்சிடுச்சு. அதுலயும் இந்த தேர்தல் வந்தாலும் வந்த்து. எல்லாரும் கருத்து கந்தசாமியா ஆகிட்டாங்க. முடியல அதான் இனிமேல் இந்த வலைப்பதிவு மீண்டும் தொடர போறேன். பாக்கலாம் எந்த அளவு முடியுதுன்னு.

No comments: