Showing posts with label சுயபுராணம். Show all posts
Showing posts with label சுயபுராணம். Show all posts

Wednesday, September 17, 2014

நான் வளர்கி​றே​னே மம்மி



மாமா ​வைத்த பிறந்த நாள் விருந்தில்....

இன்னிக்கு பிறந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள 5 வயசு முடிஞ்சிடுச்சு லக்சனுக்கு. ​ரொம்ப சந்​தோசம் ஆனா உள்ளுக்குள்ள ​ரொம்ப வருத்தம் எனக்கு. அவன் சின்னதா​வே இருக்ககூடாதானு (lol).அவனு​டைய ​குழந்​தைதனம் ம​றைஞ்சு ​கிட்​டே வருது. கவிதாயினி (மயக்குறு மகள்) மற்றும் உமாநாத்(​தேவ​தை வாழும் வீடு) எழுதும்​போது நான் நி​னைச்சுக்கு​வேன் என் மக​னை பற்றி எழுதசிறந்த த​லைப்பு ​சேட்​டை.அந்த அளவு அவனு​டைய ஆட்டம் இருக்கும்.சிறு குழந்​தையா இருக்கும்​போது எப்படா ​பெரிசாவான் ​கொஞ்சமாச்சும் ரகளை கு​றையும்னு இருந்துச்சு ஆனா இப்ப ஏன்டா ​பெரியவனா ஆகறான்னு இருக்கு.​சேட்​டை பல ​செஞ்சாலும் க​டைசில சில டயலாக்ல அப்டி​யே மறக்க வச்சிடுவான்.

உதாரணத்துக்கு சில..
கங்காணி - சின்ன குழந்​தையா இருக்கும் ​போது ​பேச்சு பழகும் சமயம் அடிக்கடி கங்காணினு ​சொல்லுவான் அது என்னனு கண்டுபிடிக்க பல நாள் ஆச்சு. என் அப்பா கண்ணாடி ​போடுவாரு அ​தைதான் அவன் கங்காணினு ​சொல்லி இருக்கான்.
உப்புமா லட்டு - ​போன மாசம் அம்மாகிட்ட ​தொ​லை​​பேசியில ​பேசும்​போது உனக்கு என்ன ஸ்வீட் ​​வேணும்னு ​கேட்டதுக்கு உப்புமா லட்டு மட்டும் ​செஞ்சு ​வெக்க ​சொல்லறான்
​பெட்சீட் புளு -  அ​தைவிட ஒரு நாள் ஓடி வந்து இங்க வந்து பாரும்மா புழு ​பெட்சீட் வந்திருக்குன்னு ​சொல்ல நான் ஏ​தோ ​சொல்லறான்னு எட்டி பார்த்தா அது கம்பளி புழு..இப்படி வார்த்​தைக​ளை எங்கிருந்​தோ ​தேடி புது வார்த்​தைக​ளை உருவாக்கிட்டு இருக்கான். இந்த மழ​லை எல்லாம் ​கொஞ்ச நாள்தான்னு நி​னைக்கயில வருத்தமா இருக்கு. முதல்ல பள்ளியில ​கொண்டு விட்டா பல தட​வை முத்தம் ​கொடுத்து சீக்கிரமா வந்துடுமா வந்துடும்மானு ​சொல்லுவான் ஆனா இப்ப ​ஒன்னும் கண்டுக்கற​தே இல்ல ​வேகமா ​போயி நண்பர்கள்கிட்ட ​சேர்ந்திடறான். ம்ம்ம் ......

அ​தே ​போல ​​வெளிய எங்க ​போனாலும் ஓடி வந்து நானும் வ​ரேனு அடம் பிடிச்சு முத்தம் ​கொடுத்து சமாதானம் பண்ணிதான் கிளம்பனும் இப்ப நிலம ​ரொம்ப ​மோசம் "கண்​​ணே அம்மா ​​போயிட்டு வ​ரேன்" உள்ள இருந்​தே "ஓ ​கே ​பை வரும்​போது கிண்டர் ஜாய் வாங்கிட்டு வந்திடு" இவ்வளவுதான் முடிஞ்சுது.
அது மட்டுமா பாடம் படிக்க ​​சொன்னா ​போதும் பசி எடுக்கு​ம், தூக்கம் வரும், பாத்ரூம் வரும் அல்லது ​கை வலிக்கும் இ​தெல்லாம் யார் ​சொல்லித்தறாங்கனு ​தெரியல ​ஆனா க​ரெக்டா ​செய்யறான்.
அவன் வளர வளர நம்ம விட்டு தூரமா ​போறமாதிரி ஒரு பீலிங் இருக்கு இருந்தாலும் குழந்​தை வளர்ரத பார்க்க சந்​தோசமாவும் இருக்கு. ம்ம் 

என்ன பண்ண நான் இப்டி புலம்புனா என் அம்மா ​கேட்கறாங்க இப்டிதான எங்களுக்கும் இருக்கும் இப்டி வளர்த்து எல்லாம் பண்ணதுக்கு அப்புறம் விட்டுட்டு ​வெளிநாட்டுல ​போயி உக்காந்துக்கிட்டு அடுத்த வருசம் வ​ரேன் அப்ப வ​ரேன் இப்ப வ​ரேனு ​சொல்லிகிட்​டே இருக்கீங்கள்ள அப்டினு ​கேட்கறாங்க ம்ம் அதும் சரிதான் நாம இன்னிக்கு பண்றத நா​ளைக்கு நம்ம பசங்க பண்ண ​போறாங்கனு மனச ​தேத்திக்க ​வேண்டியதுதான்.

Thursday, February 07, 2013

ஜான்சிபார் -3

மூணாவது நாள் (09-08-2008)

 இன்னிக்கு கொஞ்சம் மெதுவா எழுந்திருச்சு குளிச்சு கிழம்பி வெளிய வறோம் அப்பவே நண்பர் தயவு செஞ்சு கப்பல்ல மட்டும் என்ன கூப்பிடாதீங்கனு ராகம் பாட ஆரம்பிச்சாரு. நாங்க ரெண்டு பேரும் அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்ல நீங்க தைரியமா வாங்கனு கூப்பிட்டுகிட்டு தான்சானியா டூரிசம் கம்பெனி ஆபீஸ் போயி சேர்ந்தோம். அங்க போனவுடனே அந்த ஆளு இப்பதான் ஒரு கப்பல் கிளம்புச்சு சரி பரவாயில்ல உங்களுக்காக நான் தனியா ஏற்பாடு பண்றேனு சொல்லி மூணு பேருக்கு டிக்கட் வாங்கிகிட்டு மதியம் சாப்பாடு நாங்களே தருவோம் அதாவது பழங்கள்தான் மதிய உணவு நான் போயி வாங்கிட்டு வரேனு எங்கள உக்காற வெச்சுட்டு அவன் போயிட்டான். நாங்க காத்திருக்கும் போதே ரெண்டு பேரு க்ரீஸ் நாட்ட சேர்ந்தவங்க வந்தாங்க அவங்க கூட அரை மணி நேரம் பேசிட்டு இருந்தோம். அவங்க கிட்ட இந்த மாதிரி நண்பர் பயப்படறாருனு சொன்னோம் அதுக்கு அவங்க இதெல்லாம் ஒருபெரிய விசயமா?

நாங்க ரெண்டுபேரும் டார்சலாம்ல இருந்து சான்சிபார்க்கு சின்ன படகுல தான் வந்தோம் அதும் கடல் அதிகம் கொந்தளிப்பா இருந்ததால மேல கீழ வந்துபோயி ஒரு வழியா நாலு மணிநேரம் கழிச்சு வந்தோம் நீங்க என்னடானா 20 நிமிசம் படகுல கண்ணுக்கு எட்டுற தூரத்துக்கு பயப்படறீங்க. தைரியமா போங்க ஒன்னும் ஆகாதுனு சொன்னாரு. இதுக்கு நடுவுல கேப்டன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தன் வந்து அறிமுகம் செஞ்சுகிட்டான். அந்த பையன்தான் எங்கள கூட்டிகிட்டு போக போறதா சொன்னான். அதுக்குள்ள ஆபீசரும் வந்திட்டாரு பழங்கள்ளாம் வாங்கிட்டு. சரினு நாங்க கிளம்பி கடற்ரைக்கு போனோம். நான் மனசுக்குள்ள பெரிய படகாதான் இருக்கும்னு நினைச்சு போயி நின்னாச்சு அதுக்கு அப்புறம் தான் அவன் ஓடி போயி ஒரு படகோட்டிய கூட்டிக்கிட்டு வந்தான். அந்த படகோட்டி கையில ஒரு மோட்டார் என்ன ஏதுனு கேட்டா அதுல தான் படகு ஓடும் படகுல வெச்சா யாராவது கழட்டி கிட்டு போயிடு வாங்கனு கழட்டி வீட்டுல வெச்சிருக்கோம் தேவைப்படும் போது வெச்சு ஓட்டு வோம்னு சொன்னான். எங்களுக்கு சிரிப்பா இருந்துச்சு. அப்புறம் கேப்டன் பையன் நான் உங்க கூட வர மாட்டேன் அந்த படகோட்டிதான் வருவான். அந்த ஒரு தீவுக்கு போயிட்டு 4 மணி நேரத்துல வந்திடோனும்னு சொன்னான். எங்களுக்கு ஒரே சாக் என்ன கொடுமையிது அந்த ஆளு 4 தீவுனுதான சொல்லி காசு வாங்கினான். இப்ப நீங்க 1 தீவுனு சொல்லறீங்னோம். அவன் இல்ல இல்ல 1 தீவுதான்னு சொல்ல சரி எப்படியோ ஒன்னு கூட்டிகிட்டுபோனு சமாதானம் ஆகி கிழம்பினோம்.

இதுல முக்கிய விசயம் என்னனா? சான்சிபார்ங்கற பெரிய தீவுக்கு பக்கத்தில குட்டி குட்டியா நிறைய  தீவுகள் இருக்கு. அதுல குறிப்பா 4  தீவுக்குதான் பயணிகள் போவாங்க. அது என்ன என்னனா?

க்ரேவ் தீவு இங்கதான் அந்த காலத்துல பிரிட்டீஸ் அதிகாரிங்கள அடக்கம் செஞ்சிருக்காங்க அதனால இதுக்கு கல்லறை தீவுனு பேரு அதுபோக இங்க நிறைய வவ்வால் இருக்குது இந்த தீவுல மனிதர்கள் யாரும் இருக்கறது இல்ல வெறும் பயணிகள் மட்டும் வந்துபோறாங்க அவ்வளவுதான்.

ஸ்நேக் தீவு இது சின்ன தீவுதான் ஆனா இதோட வடிவம் கேக் மாதிரி இருக்கும் அதாவது கடல்ல இருந்துசெங்குத்தா இருக்கறதால இதுல யாரும் இறங்க முடியாது. அந்த தீவ சுத்தி படகுல போயிட்டு வரலாம் அவ்வளவுதான். இந்த தீவுல நிறைய பாம்புகள் இருக்கறதா சொல்லறாங்க ஆனா யாரும் இறங்கி பார்த்தது இல்ல.

சாண்ட் தீவு இது வெறும் மணல் திட்டு அவ்வளவு தான் நல்லா நீச்சல் அடிக்கவும் வெயில் காயவும் மட்டும் பயன் படுது அவ்வளவுதான். அந்த தீவுலவேற ஒன்னும் கிடையாது.
ப்ரிசன் தீவுங்கறதுதான் முக்கியமான பெரிய தீவு இங்க முக்கியமா ஆமைகள் அதாவது உலகத்துலயே பெரிய ஆமைகளை வளர்த்திட்டு இருக்காங்க அதுபோக ஒரு  ஹோட்டல் இருக்கு முக்கியமா நல்ல கடற்கரை இருக்குது இங்க நீச்சல் அடிக்க அருமையா இருக்கும். இங்கதான் எங்கள கூட்டிக்கிட்டுபோனாங்க.

இப்ப படகுல ஏறலாம்னு திரும்பி பார்த்தா நாங்க ரெண்டு பேருதான் இருக்கோம் அந்த நண்பர காணோம் எங்கனு பார்த்தா அவரு ரோட்டுக்கு அந்த பக்கம் நிக்கறாரு. என்னனு கேட்டா அய்யோ சாமி என்ன ஆள விடுங்க நான் வரல படகு சின்னதா இருக்கு அது மட்டும் இல்ல அலையெல்லாம் வருது நான் வரலனுட்டாரு. நாங்க எவ்வளவோ சொல்லியும் ஆளு வரவே இல்ல. நாங்க ரெண்டுபேரு மட்டும் கிளம்புனோம்.

கப்பலோ சின்னது நாங்க ரெண்டுபேரு மட்டும்தான் அலை வேற பயங்கரமா அடிக்குது அந்த சமயம். எனக்கு கொஞ்சம் கூட பயம் இல்ல ஆனாலும் நாங்க ரெண்டு பேரும் லைப் ஜாக்கட் போட்டு கிட்டோம் எதுக்கு ரிஸ்க் அப்படினு. சரியா 30 நிமிச பயணம் நாங்க அந்த தீவுக்கு போய் சேர்ந்தாச்சு. அட அட அட அழகுனா அழகு அப்படி ஒரு அழகு கடலோட நிறம் சுத்தமான நீலக்கலர்ல பார்க்கவே கண்ணு படுது அப்படி ஒரு அழகு. இறங்கி உள்ள என்ட்ரன்ஸ் பீஸ் வாங்கிட்டு போனா அங்கதான் ஆமை (பெரிய்ய) ஆமைகள் இருக்குது உள்ள போகும் போது ஒரு கட்டு கீரை குடுக்கறாங்க. அந்த ஆமைகளுக்கு குடுக்கறதுக்கு. அதை அந்த ஆமைகளுக்கு நாங்க ஊட்டி விட்டுக்கிட்டே நிறையபோட்டோ எடுத்தோம்.

ஆமைனா ஒவ்வொன்னும் அம்மாடி ரொம்ப பெரிசு. அப்ப நிறைய ஆமைகளுக்கு வயசு 160 வருசம் ஆயிருக்கு.

உலக தொலைக் காட்சிகளில் முதன் முறையாக 


இதெல்லாம் முடிச்சிட்டு திரும்பலாம்னு நினைக்கும்போது ஒரு ஆமை மட்டும் தனியா இருந்துச்சு பாவம் அதுக்கு யாருமே கீரை தரல சரி பாவம் நாம மட்டுமாவது தரலாம்னு உள்ள இறங்கி போயி குடுத்தேன். அதுக்கு பாவம் பசிபோல கட கடனு கீரைய கடிச்சுகிட்டே வந்துச்சு அப்ப என்ன ஆச்சு கீரை தண்ட கடிக்கறதா நினைச்சு என் மோதிர விரல கடிச்சுடுச்சு நான் அவசரமா விரல இழுக்கவும்  அதோட பல்லுல சிக்கி விரலுல நல்லா 1 இன்ச் அளவுக்கு காயம். ரத்தம் கடகடனு வர ஆரம்பிச்சுடுச்சு. பாவம் ஆமை அது வேணும்னு கடிக்கல அதுக்கு பசி அதான் தண்டுனு நினைச்சு விரல கடிச்சுடுச்சு. உடனே அந்த தோட்ட காரன் கிட்ட கேட்டோம் இதுக்கு என்ன மருந்து போடறதுனு அவன் கூலா இதுக்கெல்லாம் ஒன்னும் மருந்து போட வேண்டாம் போயி கடல் தண்ணில கழுவுங்க போதும்னு சொல்லிட்டான். எனக்கு அழுகையா வருது.
அப்புறம் பக்கத்திலயே ஒரு ஹோட்டல் இருந்துச்சு அங்க போயி கொஞ்ச நேரம் உக்காரலாம்னு உக்காந்து போட்டோ எடுத்துக்கிட்டோம். அப்பவும் மனசே சரியில்ல என்னடா இப்படி ஆயிடுச்சேனு. ஆனா அந்தஹோட்டல் சூப்பரா இருந்துச்சு. பழைய கட்டிடத்த மாத்தாம அப்படியே புதுசு மாதிரி வச்சிருக்காங்க. அங்க பால்கனி மாதிரி ஒரு இடம் பில்டிங்ல இருந்து நீண்டு இருக்கும் அதுல நாம நிக்கற உக்கார அத்தனையும் கடலுக்கு மேல அதாவது அடில கடலுமேல ஸ்லாப் போட்டு அளகா வச்சிருக்காங்க.

 அப்புறம் திரும்ப கடற்கரைக்கு வந்தோம். அங்க கடல்ல நிறையபேரு குளிச்சுட்டு இருந்தாங்க. எனக்கு தண்ணில இறங்கற எண்ணமே இல்ல.  அப்படியே ஓடிபோயி தண்ணில (Snorkling) பாக்கற கண்ணாடி அப்புறம்வாய்வழியா சுவாசிக்கற ஒரு ட்யூப்பு இதுக்கு 100 ரூபாய் வாடகைவேற குடுத்து வாங்கிட்டு வந்திட்டாரு. உணமையில மறக்க முடியாத காட்சிகள் தண்ணிக்கு அடியில இவ்வளவு இருக்கா அம்மாடி. சூப்பருங்க நாம டிஸ்கவரி சேனல்ல பாக்கற மாதிரியே குட்டி குட்டி மீனுங்க கூட்டமா டிசைன் டிசைனா வந்து போகுது அது போக கல்லே செடி மாதிரி டிசைனா கலர் கலரா இருந்துச்சு. உள்ள இருந்து அந்த கல்லு செடி கலர் கலரா எப்படி உருவாகுதுனே தெரியல அதெல்லாம் பார்க்க ரொம்ப அருமையான மறக்க முடியாத காட்சிகள். இதெல்லாம் முடிச்சு வெளிய வரும்போது சரியா ரெண்டு மணிநேரம் கடந்திருக்குது. நேரம் போனதே தெரியல. அப்படியே ஆமை கடியும்தான். இதெல்லாம் முடிச்சுட்டு வெளிய வந்தப்புறம் எங்க வீட்டுக்காரரு கிண்டல் யாரோ தண்ணில இறங்க மாட்டேனு சொன்னாங்க கடைசில பார்த்தா என்ன கரைல நிக்கவெச்சுட்டு நீ இந்நேரம் ஆடறயே நியாயமானு. என்ன பண்ணறதுங்க தண்ணில இறங்கற வரைக்கும் பயம் இறங்கின பிறகு ஒன்னுமே தெரியல தைரியம் வந்திடுச்சுனு சொல்லி சிரிச்சேன் அப்பறம் அவரு கேட்டுதான் எனக்கு ஞயாபகம் வந்திச்சு ஆமை கடி பத்தியே. ஆமைகடி ரத்தம் வரது நின்னுடுச்சு வலியும் இல்ல.

அதுக்குள்ள கரையில இருந்து நண்பர் போன் பண்ணி என்ன பண்ணறீங்கனு கேள்வி நாங்க இப்பதான் கடல்ல இருக்கோம் நீங்க கரைல என்ன பண்ணறீங்க பாவம்னு கேட்டோம் அவரு கூலா நான் இங்க ஒரு நண்பர்கூட சான்சிபார் சிட்டிய சுத்தி பார்த்துகிட்டு இருக்கேன்னாரு. எதுலனு கேட்டா ஸ்கூட்டர் காரு எல்லாத்துலயும்னு சொல்ல சொல்ல கட்டு சரி நாங்க நினைச்சோம் யாரவது கல்லூரி மாணவர்களா இருக்கும்னு. அப்புறம் கிளம்பி கரைக்கு போகலாம்னு கப்பலுக்கு வந்தோம் படகோட்டி எங்கள ஏத்திட்டு கப்பல நகர்த்த ஆரம்பிச்சான். எனக்கு சந்தேகம் இவ்வளவு பழங்கள் வாங்கிட்டு வந்தானே ஒன்னு கூட இன்னும் எங்களுக்கு தரலயேனு. ஏன்னா எனக்கு பசி பயங்கரமா ஆயிடுச்சு தண்ணில ஆடின ஆட்டத்துல. கப்பல் கொஞ்ச தூரம் வந்தப்புறம்தான் அவன் பழங்கள எடுத்து கட் பண்ணி அழகா குடுக்க ஆரம்பிச்சான். அப்புறம் விசாரிச்சதுல அந்த தீவு ஒரு தனியாருக்கு சொந்தமானது அங்க அந்த ஹோட்டல் உணவுகள் மட்டும்தான் சாப்பிடனும் பிற உணவு பொருட்கள் அனுமதி இல்லைனு. பசிக்கு எல்லா பழமும் அமிர்தமா இருந்துச்சு சுத்திலயும் தண்ணி நடுவுல உக்காந்து பழங்கள் சாப்பிடறது அருமையாதான் இருந்துச்சு. பழங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது

கரை கிட்ட வந்தாச்சு. கரைய போட்டோ எடுத்துகிட்டே வந்தோம்.

கிட்டதட்ட அந்த இடங்கள் வெனீஸ் மாதிரியேதான் இருக்குது. அப்புறம் கரைல இறங்கும்போது தயாரா எங்க நண்பர் இருந்தாரு எப்படி தெரியும் நாங்க இப்ப வருவோம்னு கேட்டா. அவரு அதான் படகோட்டி போன் பண்ணி சொன்னானே அப்படிங்கறாரு. கடற்கரைல இருந்து ஹோட்டலுக்கு கிட்டதட்ட அரை கிலோ மீட்டர் இருக்கும். இனி நடக்கனுமா இல்ல கார் பிடிக்கனுமோனு யோசனை பண்ணிகிட்டு இருக்கும்போதே நண்பர் வாங்க நம்ப கார் இருக்குதுனு ஏத்துனாரு யாருப்பா அந்த நண்பன்னு கேட்டா அதாங்க நம்ம கேப்டன். நம்மள கூட்டிகிட்டுபோக வந்தானே காலைல அவன் தான் இது. நீங்கபோன பிறகு அவன் கூடதான் ஊரு சுத்திகிட்டு இருக்கேன். இதும் அவன் காருதான் ஏறுங்க போகலாம்னு ஏத்தி ஹோட்டலுக்கு கூட்டி கிட்டு போனாரு. போகற வழிலயே இனி மதியம் என்ன பண்ணறது பக்கத்துல பாதி நாள் சுத்தற மாதிரி என்ன இடம் இருக்குனு அவனையே கேட்டோம். அதுக்கு அந்த ஆளு ஸ்பைஷ் டூர் போகலாம் அரை நாள்ள முடிஞ்சிடும்னு சொன்னான். சரி நாங்க குளிச்சு கிளம்பி வரோம் நீயே கூட்டிகிட்டு போனு சொல்லிட்டு நாங்கபோயி 20 நிமிசத்துல தயாராகி வந்தாச்சு.


Saturday, July 09, 2011

ஆன கத,,,,



குழல் இனிதல்ல யாழ் இனிதல்ல தம் மக்கள் மழலைச் சொற்கள் முன்னால். அது நூறு சதம் உண்மையே. அதை அனுபவிச்சாதான் தெரியும். என் மகனுக்கு தற்போது 2 ஆண்டு முடிய போகிறது. தற்போது கதை கேட்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. அதுதான் இந்த பதிவின் தலைப்பே.
தினமும் குறைந்தது 4 முறையாவது என் பையன் என்னிடம் "அம்மா ஆன கத" என்று கேட்காத நாள் இல்லை. உறங்கும் நேரம் தவிர அவனுக்கு மீதி நேரம் முழுக்க கதை கேட்பதில் அத்துனை ஆர்வம் அதிலும் குறிப்பாக யானை கதை மட்டும் வேண்டும். யானை போட்ட படங்கள், யானை கார்டூன், யானை வைத்து சொல்லப்படும் கதைகள் அனைத்தம் யானைதான்.
இந்த Iceage கார்டுன் பார்த்து பார்த்து எனக்கு ஒவ்வொரு சீனும் மனப்பாடமே ஆயிடுச்சு. பாவம் அந்த CD தேஞ்சே போச்சு. எப்ப பாரு ஆன கத ஆன கதனு கேட்டு இப்பவெல்லாம் ஆனை வடை திருடிட்டு போயி மரத்து மேல உக்காந்துதுனு சொன்னாலும் கேட்டுக்கிறான். இந்த ஆனை வியாதி எப்ப முடியும்னு தெரியல.
இவனுக்கு கதை சொல்ல போக நெட்டுல யானை பத்தி தேடி தேடி படிச்சுட்டு இருக்கேன். அதுல கிடைச்சதுதான் யானை டாக்டர்.

Tuesday, September 23, 2008

ஆப்பிரிக்காவில் அனு

வணக்கமுங்க இந்த பதிவு ஒரு தொடர்பதிவு இதுல நான் இருக்கற நாடு அதாவது தான்சானியா அதோட சுத்துபட்டு நாடுகள், அவங்க வரலாறு,வாழ்க்கை முறை, மக்களோட அன்றாட வேலை எல்லாத்தையும் பத்தி முடிஞ்ச வரைக்கும் தெளிவா எனக்கு தெரிஞ்சத எழுத போறேன்.படிச்சுட்டு நல்லா இருந்தா கமெண்ட் போடுங்க இல்லைனாலும் கமெண்ட் போடுங்க மாத்திக்க முயற்சி பண்றேன். பொதுவா ஆப்பிரிக்கானாலே இன்னும் எல்லாரும் இருண்ட கண்டம் அப்படினுதான் நினைக்கறாங்க. இன்னும் இங்க மனிச கறி சாப்பிடறஆதிவாசிகள் குடியிருக்காங்க. இங்க போனா எதுவுமே கிடைக்காது அப்படி இப்படினு பல பயங்கர பயமுறுத்தல்கள் இருந்துகிட்டுதான் இருக்குஅது உண்மைனு நானும் கடந்த ஆறு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் நம்பிட்டுதான் இருந்தேன். இங்க வந்த பிறகுதான் சில உண்மைகள் புரியும்.சரி சரி கதைக்கு வரேன் வழக்கம் போல எங்கயோ சுத்திட்டு இருக்கேன்.


ஆப்பிரிக்கா அப்படினாலே மிகப் பெரிய கண்டம்னு எல்லாறுக்கும் தெரியும். சரி ஆனா இதுல மிக்பெரிய நிலப்பகுதி சகாரா பாலைவனம். அதாவது வடக்கு பகுதி, அதே வடகிழக்கு பகுதியில குறிப்பா எகிப்து, சூடான் இங்கயெல்லாம் நைல் நதி பாஞ்சு மிக மிக செழிப்பா இருக்குது.ஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம் அதாவது பாலைவனத்துக்கு மேல வடக்கு பகுதி, பாலைவனத்துக்கு கீழ தெற்கு பகுதினு. இதுல பாலைவனத்துக்கு மேல உள்ள நாடுகள் நைல் நதி பாயறதாலயும், ஐரோப்பாவுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கறதாலயும் நல்ல முன்னேற்றத்தோட இருக்குது.அதே போல கிழக்கு பகுதியில கடலோரம் இருக்குற நாடுகளும் தென் ஆப்பிரிக்காவும் நல்ல நீர் வழத்தோடயும் ஆசியா அரேபிய நாடுகள்கூட தொடர்பு கொண்டு நல்லா வழமாதான் இருக்காங்க. இது எல்லாத்துலயும் பாவப்பட்டவங்க மேற்கு ஆப்பிரிக்காதான். ஏன்னா இவங்க அடுத்த கண்டத்தோட தொடர்பு கொள்ளனும்னா ஒன்னு மேற்கு பக்கம் அட்லாண்டிக் கடல்ல பல தூரம் கடந்து தென் அமெரிக்காவுக்கு வரனும் இல்லைனா கிழக்க பெரிய ஆப்பிரிக்க நிலப்பரப்ப கடந்து அரேபியா அல்லது ஆசியாவ அடையனும். ரெண்டு பக்கமுமே ரொம்ப தூரம்.அதனால முன்னேற்றம் கொஞ்சம் கம்மிதான் அங்கெல்லாம்.
இப்ப இந்த கண்டத்துல கிழக்கு கடலோரம் இருக்கற தான்சானியாங்கற நாட்டுலதான் நான் இருக்கேன். இந்த நாட்ட பத்திதான் நான் எழுத போறேன்.
அடுத்த பதிவுல சந்திக்கறேனுங்க நன்றி வணக்கம் இப்போதைக்கு :)

Wednesday, September 17, 2008

ஒரு சின்ன சந்தேகமுங்க

வணக்கம்,
இந்த பதிவுல ஒன்னுமே இல்லீங்க வெறும் டெஸ்ட் பதிவுதான் பல நாள் நான் என் வலைப்பக்கம் வரவே இல்ல அதான் ஒரு சந்தேகம் வலைப்பூ உயிரோட இருக்கா இல்லையானு ஒரு சின்ன சந்தேகம் அதான் இந்த பதிவு. சரி வந்தது வந்துட்டீங்க இந்த படத்தையும் பார்த்துட்டு போங்க.


இது தான்சானியாவுக்கு பக்கத்துல இருக்கற சான்சிபார்ங்கற தீவுல எடுத்தது. முடிஞ்சா இனிமேலாவது ஏதாவது எழுத முயற்சி செய்ய‍றேன். (ஆமா ஒவ்வொரு தடவையும் இததான சொல்லறேனு நினைக்கறீங்க :)

Wednesday, February 27, 2008

சிற்சில கணங்களில்...

சில எதிர்பார்ப்புகள் முடக்கப்படுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேவையற்று போகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேய்ந்து மறைந்துவிடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் கேள்வி குறியாகின்றன
சில எதிர்பார்ப்புகள் நடந்தும் விடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தோற்கின்றது - ஆனாலும்
பல எதிர்பார்ப்புகள் தினம் தோன்றுகின்றன
தினம் தோன்றி மறையும் விண்மீன்களை போல.


இதை கவிதைனும் எடுத்துக்களாம் மொக்கைனும் எடுத்துக்கலாம். ஆனா ஏனோ எனக்கு நம்ம ராசா எழுதுன இந்த பதி ஞாபகம் வருது.