Friday, March 24, 2006

வரமா ? சாபமா?


பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமை,பருக புத்துணர்வூட்டும் பானம்,பிறப்பது எங்கோ ஆனால் வாழ்வது வெளிநாடுகளில்,சீனர்களின் பாரம்பரிய விருந்தோம்பல்,நம் முதல்குடிமகன் கொடுக்கும் விருந்து,ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை பருகுவது இப்படி எத்தனையோ புகழ் பெற்றது இந்த தேயிலை. இது வாங்கிவந்த வரம் அப்படி ஆனால், எந்த தாவரமாக இருந்தாலும் வளர்ந்து பூத்து காயாகி கனியாகி பின்புதான் பறிப்பார்கள். இதை மட்டும் முளையி‍லேயே கிள்ளுகிறார்கள் பாவம் இது வாங்கி வந்தது வரமா? சாபமா?.

Monday, March 20, 2006

நிம்மதியான வாழ்க்கை

பள்ளிக்கூடம் போகனுமா?
படிக்கணுமா?
வேலைககு போகணுமா?
நிறைய சம்பாதிக்கணுமா?
வாகனம் வாங்கனுமா?
வீடு கட்டணுமா?
ஊர் சுத்த நண்பர்கள் வேணுமா?
மொபைல் ரீசார்ஜ் பண்ணணுமா?
அப்புறம் இநத மாதிரி வலைப்பதிவு போடணுமா?
மெயில் அணுப்பனுமா?
காதலிக்க பொறுமை வேணுமா?
கல்யாணம் பண்ணி கஷ்டபடனுமா?
குழந்தைகளை படிக்க வைக்கணுமா?
வயசான காலத்தில் நல்ல உறவு ‍வேணுமா?

இப்படி வாழ்க்கையில் எந்த கவலையும் இல்லாம நிம்மதியா இயற்கையோட இணைந்து வாழ தெரியாத இந்த மனுஷங்கள பார்த்தா ஒரே சிரிப்பா இருக்குது.

Sunday, March 12, 2006

பக்தியும் மாமிசமும்

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக்
கொன்று அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும். வள்ளுவரின் வரிகள் இது. சரி மாமிசம் உண்ணாமல் இருக்க முடிவதில்லை இக்காலத்தில். ஆனால் அதற்காக நம் மக்கள் சொல்லும் காரணங்கள்தான் அதிசயமாக இருக்கிறது.

என் அலுவலகத்தில் ஒருவர் மட்டும் சுத்தமான சைவம் அதுபோக பாதிபேர் சைவமாக
நடிப்பவர்கள். எப்படியென்றால் சாதாரணமாக பேசும்போது நான் சைவம் எனக்கு அசைவம்
சுத்தமாக பிடிக்காது(வேக வைக்காமல் பிடிக்காது என்கிறார்களோ..?) என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அதுபோக வெள்ளி கிழமை, பிரதோஷம் அமாவாசை என்று பல காரணங்கள் கூறிக்கொண்டிருப்பார்கள். அதே சமயம் அலுவலகத்தில்ஏதாவது விருந்து என்று அசைவம் சாப்பிட சென்றால் மறக்காமல் அனைவரும் கட்டாயம் சாப்பிடுவார்கள். அது எந்த நாள் கிழமை என்றாலும் சரி. இதிலும் குறிப்பாக பெண்கள் (தாய்குலங்கள் மன்னிக்கவும்) இல்லாத விளம்பரம் செய்து விட்டுதான் சாப்பிட வருவார்கள்.எதற்கு இந்த அலட்டல் என்று தெரியவில்லை.

அசைவம் சாப்பிடுவேன் என்று கூறிவிட்டால் ஏதோ பாவ காரியம் செய்ததுபோல ஒரு
எண்ணம் நம் மக்களிடம். எந்த கடவுளும் அசைவம் வேண்டாம் என்று சொல்லவில்லை.
கண்ணப்ப நாயனார் கடவுளுக்கே மாமிசம் படைத்தார் அவருக்கும் கடவுள் காட்சியளித்து ஏற்றுக் கொண்டார். அப்படியே அசைவம் சாப்பிடுவதில்லை என்றால் எப்பொழுதும் சாப்பிடாமல் தூய சைவமாக இருப்பின் பரவாயில்லை அதை விட்டுவிட்டு இந்த கிழமையில் இந்த இந்த நாளில மட்டும் சாப்பிட மாட்டேன். எப்படி எந்த நாளில் சாப்பிட்டாலும் ஒரு உயிரை கொல்வது பாவ காரியம்தான் அதில் என்ன பெருமை குறிப்பிட்ட நாட்களில் மாதங்களில் சாப்பிடாமல் இருப்பது என்று எனக்கு புரியவில்லை?