Thursday, February 21, 2013

ஜான்சிபார் - 4

​​கேப்டன் காருலயே கிளம்பி கூட்டிகிட்டு போனாங்க. காட்டுக்குள்ள அரை மணிநேர பயணம். அதுக்குள்ள சிட்டிய தாண்டின உடனே எங்க வீட்டுகாரருக்கு ஆசை கார் ஓட்டனும்னு டி​ரைவர்  கிட்ட கேட்டு அவனும் குடுத்திட்டு பின்னாடி உக்கார்ந்துகிட்டான். அவருக்கு நல்லா கார் ஓட்ட தெரியும் இருந்தாலும் வெளி நாட்டுல ஓட்டனும்னு ஒரு ஆசை அது நிறைவேறிடுச்சு. கிட்டதட்ட 30 கீ மீட்டர் ஒட்டுனாரு. அப்புறம் ஒருதோப்பு மாதிரி இடத்துல நிறுத்திட்டு ஒரு ஆள கூட்டிகிட்டு வந்தான். அவன்தான் அந்த ஸ்பைஷ் டூர் இடத்துக்கு சொந்தகாரன்.

முதல்ல ஸ்பைஷ் டூர்னா என்னனா எல்லாவித மசாலா செடி, மரம், கொடி இதெல்லாம் நேர்ல பார்க்கலாம். இதுல அந்த கைடு அவருடைய சொந்த பண்ணைக்கு கூட்டிகிட்டு போயி சுத்தி காட்டுனாரு.அந்த பண்ணைல நிறைய விதம் விதமான மசாலா மரங்கள் இருந்துச்சு எல்லாம் இந்த மாதிரி டூரிஸ்ட்காரங்களுக்கு காட்டறதுக்காகவே வெச்சு இருக்காங்க.

மசாலா மரங்களின் ராணி (Queen of Spices)

முதல்ல ஒரு மரத்துக்கு பக்கத்துல கூட்டி கிட்டு போயி இது என்னனு பாருங்கனு சொன்னாரு. மரத்தை பார்த்தா ஒன்னும் தெரியல சாதாரணமா இருந்துச்சு இலைகள் மட்டும் பெரிசு பெரிசா இருந்துச்சு. பேசிகிட்டே அவன் மரத்தோட பட்டைய கத்தில வெட்டி எடுத்து சாப்பிடுங்கனு சொன்னாரு. சாப்பிட்டா அட நம்ம ஊரு பட்டை பிரியாணிக்கு போடுவோமே அதே தான் ஆனா பச்சையா நல்லா இனிப்பா மணமா இருந்துச்சு. அப்புறம் அவரு கொஞ்சம் இலைகளை பறிச்சு மணம் பார்க்க சொன்னாரு. அது  நம்ம பிரியாணி இலைனு தெரிஞ்சு கிட்டோம். அதுக்கு பிறகு அவரு கத்தியால அந்த மரத்தோட வேறவெட்டி எடுக்க ஆரம்பிச்சாரு. அய்யோ பாவம் அந்த மரம்னு நினைச்சு கிட்டோம். கடைசியா அதை முகர்ந்து பார்க்க குடுத்தாரு. அட எல்லாருக்கும் அதிர்ச்சி அது என்னனா நம்ம விக்ஸ் யூஸ் பண்ணறமே அதேதான். விக்ஸ் அந்த மர வேருல இருந்துதான் செய்யறாங்களாம். கடைசியா சொன்னாரு இந்த மரம்தான் மசாலாக்களின் ராணி (Queen of Spice trees). இந்த மரத்தோட எல்லா பாகமும் உபயோகப்படுது.

அடுத்தது ஒரு சின்னசெடி அது நம்ம ஊரு புல்லு மாதிரிதான் இருக்கு அதை வெட்டி முகர்ந்து பார்த்தா எலுமிச்சை மாதிரி மணம் வருது. அதுல டீ  வெச்சு குடிச்சா உடம்புக்கு ரொம்ப நல்லதாம் அது வாந்தி அஜீரணம் இதுக்கெல்லாம் நல்ல மருந்துனு சொன்னாரு.

அப்புறம் மஞ்சள், இஞ்சி, வெற்றிலை இதெல்லாம் எங்க நாட்டுலயே இருக்குது பார்க்க வேண்டாம் வேற காட்டுனு கேட்டோம் அப்புறமா ஒரு மரத்துக்கு கூட்டிட்டு போயி ரோசு கலர்ல ஒரு காய் கொத்தா பறிச்சுட்டு வந்தாரு. என்னனு பார்த்தா கிராம்பு. கிராம்பு பச்சையா இருக்கும்போது சிவப்பு கலர்ல நல்லாதான் இருக்கு அது பழுத்து காய்ந்த பிறகு தான் கருப்பா மாறுது.

அப்புறம் ஏலக்காய்செடி நம்ம ஊருல இருக்குது ஆனா நாங்க இது வரைக்கும் பார்த்தது இல்ல அதனால நல்லா பார்த்து போட்டோ எடுத்துகிட்டு வந்தோம். அப்புறம் ஒருபெரிய கொடிகிட்ட கூட்டிட்டு போயி அதுல சின்னதா நீளமா நம்ம பீன்ஸ் மாதிரி ஒரு காய் ஆனா கருப்பு கலர்ல இருந்துச்சு இதை பார்த்திருக்கீங்களானு கேட்டாரு. இல்லைனோம். அவரு சொன்னாரு இதுதான் வெண்ணிலா (Vanilla) அப்படினாரு. முகர்ந்து பார்த்தா வெண்ணிலா வாசனை சூப்பரா வந்தது. நான் எதிர் பார்க்கவே இல்ல. வெண்ணிலா இப்படி கருப்பு கலர்ல இருக்கும்னு. நான் சாப்பிட்ட வெண்ணிலா கேக் வெண்ணிலா ஐஸ்க்ரீம் எல்லாமே வெளிர் மஞ்சளாதான் இருந்தது.
இதெல்லாம் பார்த்த பிறகு அவங்க குடிசைக்கு கூட்டிகிட்டு போயி ஆளுக்கு ஒரு கப்பு குடுத்தாங்க. அதுல முதல்லலெமன் க்ராஸ் டீ, அப்புறம் ஏலக்காய், வெண்ணிலா, இஞ்சி இப்படினு விதம் விதமா டீ குடுத்தாங்க. எல்லா டீயும் சூப்பரா இருந்துச்சு. அவங்க டீனா நம்ம ஊரு மாதிரி தேயிலை போட்டு இல்ல சும்மா கசாயம் மாதிரி தராங்க அவ்வளவுதான்.

கடைசியா கிளம்பி வரும்போது 3 பசங்க வந்தாங்க அவங்க கிட்ட கையிலதென்னை ஓலையிலசெஞ்ச கிரீடம், கழுத்துக்கு சங்கிலி, தோள்பை, இதெல்லாம் விட கண்ணுக்கு கண்ணாடி எல்லாம் செஞ்சுட்டு வந்து போட்டு விட்டாங்க. எல்லாத்தையும் போட்டா ஆதிவாசி மாதிரியே இருந்தோம். நல்லா புகைப்படங்கள் எடுத்து கிட்டு திரும்ப வந்தோம்.

திரும்ப வரும்போது மறுபடியும் எங்க வீட்டு காரர்தான் கார் ஓட்டுவேனு ஓட்டிகிட்டு வந்தாரு. அப்ப மெயின் ரோடு வந்தவுடன் அவன் நான் ஓட்டறேன். போலீஸ் பார்த்த பிரச்னைனு வாங்கிட்டான். அப்புறம் ஒரு சிக்னல்ல போலீஸ் காரன் வண்டிய ஓரம் கட்ட சொல்லிட்டான். என்னனு பார்த்தா நான் முன்னாடிதான் உக்கார்ந்து இருந்தேன். ஆனா சீட் பெல்ட் போடவே இல்ல. அதான் பிடிச்சுட்டானு  நினைச்சு கிட்டோம். டிரைவர் எதுக்கும் 1000 சில்லிங்  குடுங்கனு சொல்லி வாங்கி வெச்சுகிட்டான். அப்புறம் என்ன வழக்கம்போல இந்தியா மாதிரி அவரு விரல கார்குள்ள விட்டு பணத்த வாங்கிட்டு போலாம்னுட்டாரு. எல்லா ஊரு போலீசும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.

அப்ப மணி மாலை 4 தான் ஆச்சு இப்ப இருந்து நைட் வரைக்கும் என்ன பண்ணறதுனு யோசனை பண்ணிட்டு அவன் கிட்டயே ஐடியா கேட்டோம். அவன் ஸ்டோன் டவுன் (stone town) அதாவது சான்சிபார் மெயின் சிட்டி ஊரு பேரு ஸ்டோன் டவுன். அங்கதான் நாங்க தங்குன ஹோட்டல் ஹார்பர் எல்லாம் இருக்கு. அங்க ஒரு  ஸ்லேவ் சேம்பர் அப்புறம் ஓரு சர்ச் இருக்கு அங்கபோயிட்டு ரூமுக்கு போனா சரியா இருக்கும்னு சொன்னான். சரினு கார நேரா ஸ்லேவ் சேம்பர்க்கு விட்டோம். அது ஒரு பெரிய சர்ச் பக்கத்துல ஒருகோட்டை வீடு அவ்வளவுதான். முதல்ல சர்ச் போனோம் அங்க ஏதோ ப்ரேயர் நடந்திட்டு இருந்தது அதனால உள்ள போகல ஆனா கதை கேட்டோம். அங்க கடவுள் வெச்சு இருக்கற இடத்துலதான் முன் காலத்துல அடிமைகளுக்கு தண்டனை தருவாங்களாம். அவங்கள அடிச்சு அடிச்சு ரத்தம் அந்த இடத்தில எப்பவுமே சிவப்பா தங்கி இருக்குமாம். அதனால அந்த இடத்துக்கு ரெட் கார்பட்னு பேரு வெச்சிருக்காங்க. பிற்காலத்துல ஆங்கிலேயர் வந்து அங்க அடிமைகளின் நினைவா பெரிய சர்ச் கட்டி சாமி கும்புட்டு இருக்காங்க.
அந்த கதை கேட்டு மனசு ரொம்ப கனமா போச்சு. அப்புறம் அந்த கோட்டைக்கு உள்ள போனோம் இப்ப அந்த கோட்டைய ஹோட்டலா மாத்திட்டாங்க. அங்க நார்மலா பாக்கறதுக்கு பக்காவா அழகான கோட்டை நிறைய சாமான்களோ அழகா இருந்துச்சு. அதுக்கு கீழ ஒரு படிக்கட்டுபோகுது அதுல இறங்குனா ஒரு குகை மாதிரியான இடம் அங்க எந்த விதமான வசதியும் கிடையாது யாரும் தலை நிமிர்ந்து நிக்க முடியாது. குறுகலான இடம் அங்கதான் 100 கணக்கான அடிமைகள மாதக் கணக்குல அடைச்சு வெச்சிருக்காங்க. கொடுமையிலும் கொடுமையிது அங்க போயி நாங்களும் உக்கார்ந்து பார்த்தோம் புகைப்படம் எடுக்கறதுகுள்ள வேர்த்து விறுவிறுத்திடுச்சு.
அங்க எப்படி இருந்தாங்களோ அடிமைகள் பாவம். இந்த அரபு நாட்டுக்காரங்க நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்காங்க. எல்லா வேலைக்கும் அடிமைகள் அது போக அவங்கள வியாபாரம் செஞ்சு வர வருமானம் இப்படி நல்லா அனுபவிச்சு இருக்காங்க.
எப்படியோ ஒரு வழியா அடிமைகள் இடத்தை பார்த்திட்டு வந்து கார்காரன நீ கார் எடுத்துட்டு போய்க்கோ நாங்க அப்படியே நடந்து ஊர் சுத்தி பார்த்து கிட்டே ரூம் போய் சேர்ந்திடறோம்னு சொல்லி நடக்க ஆரம்பிச்சோம். கார்காரன் எங்கள நல்ல இடமா இறக்கி விடறேனு சொல்லி ஒரு இடத்துல இறக்கி விட்டான் அது எந்த இடம்னா ஒருபெரிய  ஹோட்டல் அதுக்கு முன்னாடியே கடல். சரியா நாங்க இறங்கும்போது சூரிய அஸ்தமனம் சூப்பரா இருந்துச்சு. அதை எல்லா வெள்ளைக்காரங்களும் படம் எடுத்துகிட்டு இருந்தாங்க. நாங்க மட்டும் சும்மா விடுவமா அந்த சூரியன வெச்சு மணிரத்னம் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி படம் எடுத்தோம் கடைசில 2 படம்தான் தேறிச்சு. அப்படியே கிளம்பி வரும்போது ஒரு இன்டர்நெட்டு கடை கண்ணுல பட்டுச்சு  உடனே படங்கள கேமராவுல இருந்து டவுன்லோட் பண்ணலாம்னு உள்ள புகுந்து கேட்டோம் அங்க இருந்த பொண்ணு இதுக்கு பணம் எல்லாம் ஒன்னும் வேண்டாம் சும்மாவே பண்ணிக்கோங்கனு ரொம்ப பெரிய மனசு பண்ணி சொல்லிச்சு. சரினு டவுன்லோடு பண்ணறோம் பண்றோம் ஒரு மணிநேரம் ஆயிடுச்சு. எங்களுக்கு மனசு பொறுக்காம 20 ரூபாய் தாராள மனசோட குடுத்துட்டு வந்தோம். அதுக்கு பிறகு வர்ர வழில வேற ஒரு கோட்டை இருந்துச்சு. அதுக்குள்ள போனா அங்க அன்னிக்கு பாட்டு கச்சேரினு சரியான கூட்டம் சத்தம் வேறகொஞ்சநேரம் பார்த்திட்டு சாப்பிடற இடத்துக்கு வந்திட்டோம்.
திரும்ப வரும்போது மறுபடியும் எங்க வீட்டு காரர்தான் கார் ஓட்டுவேனு ஓட்டிகிட்டு வந்தாரு. அப்ப மெயின் ரோடு வந்தவுடன் அவன் நான் ஓட்டறேன். போலீஸ் பார்த்த பிரச்னைனு வாங்கிட்டான். அப்புறம் ஒரு சிக்னல்ல போலீஸ் காரன் வண்டிய ஓரம் கட்ட சொல்லிட்டான். என்னனு பார்த்தா நான் முன்னாடிதான் உக்கார்ந்து இருந்தேன். ஆனா சீட் பெல்ட் போடவே இல்ல. அதான் பிடிச்சுட்டானு  நினைச்சு கிட்டோம்.டிரைவர் எதுக்கும் 1000 சில்லிங்  குடுங்கனு சொல்லி வாங்கி வெச்சுகிட்டான். அப்புறம் என்ன வழக்கம்போல
இந்தியா மாதிரி அவரு விரல கார்குள்ள விட்டு பணத்த வாங்கிட்டு போலாம்னுட்டாரு.எல்லா ஊரு போலீசும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.

அப்ப மணி மாலை 4 தான் ஆச்சு இப்ப இருந்து நைட் வரைக்கும் என்ன பண்ணறதுனு யோசனை பண்ணிட்டு அவன் கிட்டயே ஐடியா கேட்டோம். அவன் ஸ்டோன் டவுன் (stone town) அதாவது சான்சிபார் மெயின் சிட்டி ஊரு பேரு ஸ்டோன் டவுன். அங்கதான் நாங்க தங்குன ஹோட்டல் ஹார்பர் எல்லாம் இருக்கு. அங்க ஒரு  ஸ்லேவ் சேம்பர் அப்புறம் ஓரு சர்ச் இருக்கு அங்கபோயிட்டு ரூமுக்கு போனா சரியா இருக்கும்னு சொன்னான். சரினு கார நேரா ஸ்லேவ் சேம்பர்க்கு விட்டோம். அது ஒரு பெரிய சர்ச் பக்கத்துல ஒருகோட்டை வீடு அவ்வளவுதான். முதல்ல சர்ச் போனோம் அங்க ஏதோ ப்ரேயர் நடந்திட்டு இருந்தது அதனால உள்ள போகல ஆனா கதை கேட்டோம். அங்க கடவுள் வெச்சு இருக்கற இடத்துலதான் முன் காலத்துல அடிமைகளுக்கு தண்டனை தருவாங்களாம். அவங்கள அடிச்சு அடிச்சு ரத்தம் அந்த இடத்தில எப்பவுமே சிவப்பா தங்கி இருக்குமாம். அதனால அந்த இடத்துக்கு ரெட் கார்பட்னு பேரு வெச்சிருக்காங்க. பிற்காலத்துல ஆங்கிலேயர் வந்து அங்க அடிமைகளின் நினைவா பெரிய சர்ச் கட்டி சாமி கும்புட்டு இருக்காங்க. அந்த கதை கேட்டு மனசு ரொம்ப கனமா போச்சு. அப்புறம் அந்த கோட்டைக்கு உள்ள போனோம் இப்ப அந்த கோட்டைய ஹோட்டலா மாத்திட்டாங்க. அங்க நார்மலா பாக்கறதுக்கு பக்காவா அழகான கோட்டை நிறைய சாமான்களோ அழகா இருந்துச்சு. அதுக்கு கீழ ஒரு படிக்கட்டுபோகுது அதுல இறங்குனா ஒரு குகை மாதிரியான இடம் அங்க எந்த விதமான வசதியும் கிடையாது யாரும் தலை நிமிர்ந்து நிக்க முடியாது. குறுகலான இடம் அங்கதான் 100 கணக்கான அடிமைகள மாதக் கணக்குல அடைச்சு வெச்சிருக்காங்க. கொடுமையிலும் கொடுமையிது அங்க போயி நாங்களும் உக்கார்ந்து பார்த்தோம் புகைப்படம் எடுக்கறதுகுள்ள வேர்த்து விறுவிறுத்திடுச்சு.அங்க எப்படி இருந்தாங்களோ அடிமைகள் பாவம். இந்த அரபு நாட்டுக்காரங்க நல்லா அனுபவிச்சு வாழ்ந்திருக்காங்க. எல்லா வேலைக்கும் அடிமைகள் அது போக அவங்கள வியாபாரம் செஞ்சு வரவருமானம் இப்படி நல்லா அனுபவிச்சு இருக்காங்க.எப்படியோ ஒரு வழியா அடிமைகள் இடத்தை பார்த்திட்டு வந்து கார்காரன நீ கார் எடுத்துட்டு போய்க்கோ நாங்க அப்படியே நடந்து ஊர் சுத்தி பார்த்து கிட்டே ரூம் போய் சேர்ந்திடறோம்னு சொல்லி நடக்க ஆரம்பிச்சோம். கார்காரன் எங்கள நல்ல இடமா இறக்கி விடறேனு சொல்லி ஒரு இடத்துல இறக்கி விட்டான் அது எந்த இடம்னா ஒருபெரிய  ஹோட்டல் அதுக்கு முன்னாடியே கடல். சரியா நாங்க
இறங்கும்போது சூரிய அஸ்தமனம் சூப்பரா இருந்துச்சு. அதை எல்லா வெள்ளைக்காரங்களும் படம் எடுத்துகிட்டு இருந்தாங்க. நாங்க மட்டும் சும்மா விடுவமா அந்த சூரியன வெச்சு மணிரத்னம் ரேஞ்சுக்கு ட்ரை பண்ணி படம் எடுத்தோம் கடைசில 2 படம்தான் தேறிச்சு. அப்படியே கிளம்பி வரும்போது ஒரு இன்டர்நெட்டு கடை கண்ணுல பட்டுச்சு  உடனே படங்கள கேமராவுல இருந்து டவுன்லோட் பண்ணலாம்னு உள்ள புகுந்து கேட்டோம் அங்க இருந்த பொண்ணு இதுக்கு பணம் எல்லாம் ஒன்னும் வேண்டாம் சும்மாவே பண்ணிக்கோங்கனு ரொம்ப பெரிய மனசு பண்ணி சொல்லிச்சு. சரினு டவுன்லோடு பண்ணறோம் பண்றோம் ஒரு மணிநேரம் ஆயிடுச்சு. எங்களுக்கு மனசு பொறுக்காம 20 ரூபாய் தாராள மனசோட குடுத்துட்டு வந்தோம். அதுக்கு பிறகு வர்ர வழில வேற ஒரு கோட்டை இருந்துச்சு. அதுக்குள்ள போனா அங்க அன்னிக்கு பாட்டு கச்சேரினு சரியான கூட்டம் சத்தம் வேற கொஞ்ச நேரம் பார்த்திட்டு சாப்பிடற இடத்துக்கு வந்திட்டோம். வழக்கம்போல சீபுட் (sea food) கடையில நல்லா இறால் மீன், பிட்சா, முட்டை
சப்பாத்தி சாப்பிட்டோம். சூப்பர் சாப்பாடு சாப்பிட்டுட்டு கிழம்பி ரூம்கு போலாம்னு வந்தாச்சு. அப்பதான் ஞாபகம் வந்திச்சு திரும்பி போக டிக்கட் வாங்கனும்னு. அப்படியே ஹார்பர் போயி டிக்கட் வாங்கிட்டு ரூம் வந்து சேர்ந்தோம்.

Thursday, February 07, 2013

ஜான்சிபார் -3

மூணாவது நாள் (09-08-2008)

 இன்னிக்கு கொஞ்சம் மெதுவா எழுந்திருச்சு குளிச்சு கிழம்பி வெளிய வறோம் அப்பவே நண்பர் தயவு செஞ்சு கப்பல்ல மட்டும் என்ன கூப்பிடாதீங்கனு ராகம் பாட ஆரம்பிச்சாரு. நாங்க ரெண்டு பேரும் அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்ல நீங்க தைரியமா வாங்கனு கூப்பிட்டுகிட்டு தான்சானியா டூரிசம் கம்பெனி ஆபீஸ் போயி சேர்ந்தோம். அங்க போனவுடனே அந்த ஆளு இப்பதான் ஒரு கப்பல் கிளம்புச்சு சரி பரவாயில்ல உங்களுக்காக நான் தனியா ஏற்பாடு பண்றேனு சொல்லி மூணு பேருக்கு டிக்கட் வாங்கிகிட்டு மதியம் சாப்பாடு நாங்களே தருவோம் அதாவது பழங்கள்தான் மதிய உணவு நான் போயி வாங்கிட்டு வரேனு எங்கள உக்காற வெச்சுட்டு அவன் போயிட்டான். நாங்க காத்திருக்கும் போதே ரெண்டு பேரு க்ரீஸ் நாட்ட சேர்ந்தவங்க வந்தாங்க அவங்க கூட அரை மணி நேரம் பேசிட்டு இருந்தோம். அவங்க கிட்ட இந்த மாதிரி நண்பர் பயப்படறாருனு சொன்னோம் அதுக்கு அவங்க இதெல்லாம் ஒருபெரிய விசயமா?

நாங்க ரெண்டுபேரும் டார்சலாம்ல இருந்து சான்சிபார்க்கு சின்ன படகுல தான் வந்தோம் அதும் கடல் அதிகம் கொந்தளிப்பா இருந்ததால மேல கீழ வந்துபோயி ஒரு வழியா நாலு மணிநேரம் கழிச்சு வந்தோம் நீங்க என்னடானா 20 நிமிசம் படகுல கண்ணுக்கு எட்டுற தூரத்துக்கு பயப்படறீங்க. தைரியமா போங்க ஒன்னும் ஆகாதுனு சொன்னாரு. இதுக்கு நடுவுல கேப்டன்னு சொல்லிக்கிட்டு ஒருத்தன் வந்து அறிமுகம் செஞ்சுகிட்டான். அந்த பையன்தான் எங்கள கூட்டிகிட்டு போக போறதா சொன்னான். அதுக்குள்ள ஆபீசரும் வந்திட்டாரு பழங்கள்ளாம் வாங்கிட்டு. சரினு நாங்க கிளம்பி கடற்ரைக்கு போனோம். நான் மனசுக்குள்ள பெரிய படகாதான் இருக்கும்னு நினைச்சு போயி நின்னாச்சு அதுக்கு அப்புறம் தான் அவன் ஓடி போயி ஒரு படகோட்டிய கூட்டிக்கிட்டு வந்தான். அந்த படகோட்டி கையில ஒரு மோட்டார் என்ன ஏதுனு கேட்டா அதுல தான் படகு ஓடும் படகுல வெச்சா யாராவது கழட்டி கிட்டு போயிடு வாங்கனு கழட்டி வீட்டுல வெச்சிருக்கோம் தேவைப்படும் போது வெச்சு ஓட்டு வோம்னு சொன்னான். எங்களுக்கு சிரிப்பா இருந்துச்சு. அப்புறம் கேப்டன் பையன் நான் உங்க கூட வர மாட்டேன் அந்த படகோட்டிதான் வருவான். அந்த ஒரு தீவுக்கு போயிட்டு 4 மணி நேரத்துல வந்திடோனும்னு சொன்னான். எங்களுக்கு ஒரே சாக் என்ன கொடுமையிது அந்த ஆளு 4 தீவுனுதான சொல்லி காசு வாங்கினான். இப்ப நீங்க 1 தீவுனு சொல்லறீங்னோம். அவன் இல்ல இல்ல 1 தீவுதான்னு சொல்ல சரி எப்படியோ ஒன்னு கூட்டிகிட்டுபோனு சமாதானம் ஆகி கிழம்பினோம்.

இதுல முக்கிய விசயம் என்னனா? சான்சிபார்ங்கற பெரிய தீவுக்கு பக்கத்தில குட்டி குட்டியா நிறைய  தீவுகள் இருக்கு. அதுல குறிப்பா 4  தீவுக்குதான் பயணிகள் போவாங்க. அது என்ன என்னனா?

க்ரேவ் தீவு இங்கதான் அந்த காலத்துல பிரிட்டீஸ் அதிகாரிங்கள அடக்கம் செஞ்சிருக்காங்க அதனால இதுக்கு கல்லறை தீவுனு பேரு அதுபோக இங்க நிறைய வவ்வால் இருக்குது இந்த தீவுல மனிதர்கள் யாரும் இருக்கறது இல்ல வெறும் பயணிகள் மட்டும் வந்துபோறாங்க அவ்வளவுதான்.

ஸ்நேக் தீவு இது சின்ன தீவுதான் ஆனா இதோட வடிவம் கேக் மாதிரி இருக்கும் அதாவது கடல்ல இருந்துசெங்குத்தா இருக்கறதால இதுல யாரும் இறங்க முடியாது. அந்த தீவ சுத்தி படகுல போயிட்டு வரலாம் அவ்வளவுதான். இந்த தீவுல நிறைய பாம்புகள் இருக்கறதா சொல்லறாங்க ஆனா யாரும் இறங்கி பார்த்தது இல்ல.

சாண்ட் தீவு இது வெறும் மணல் திட்டு அவ்வளவு தான் நல்லா நீச்சல் அடிக்கவும் வெயில் காயவும் மட்டும் பயன் படுது அவ்வளவுதான். அந்த தீவுலவேற ஒன்னும் கிடையாது.
ப்ரிசன் தீவுங்கறதுதான் முக்கியமான பெரிய தீவு இங்க முக்கியமா ஆமைகள் அதாவது உலகத்துலயே பெரிய ஆமைகளை வளர்த்திட்டு இருக்காங்க அதுபோக ஒரு  ஹோட்டல் இருக்கு முக்கியமா நல்ல கடற்கரை இருக்குது இங்க நீச்சல் அடிக்க அருமையா இருக்கும். இங்கதான் எங்கள கூட்டிக்கிட்டுபோனாங்க.

இப்ப படகுல ஏறலாம்னு திரும்பி பார்த்தா நாங்க ரெண்டு பேருதான் இருக்கோம் அந்த நண்பர காணோம் எங்கனு பார்த்தா அவரு ரோட்டுக்கு அந்த பக்கம் நிக்கறாரு. என்னனு கேட்டா அய்யோ சாமி என்ன ஆள விடுங்க நான் வரல படகு சின்னதா இருக்கு அது மட்டும் இல்ல அலையெல்லாம் வருது நான் வரலனுட்டாரு. நாங்க எவ்வளவோ சொல்லியும் ஆளு வரவே இல்ல. நாங்க ரெண்டுபேரு மட்டும் கிளம்புனோம்.

கப்பலோ சின்னது நாங்க ரெண்டுபேரு மட்டும்தான் அலை வேற பயங்கரமா அடிக்குது அந்த சமயம். எனக்கு கொஞ்சம் கூட பயம் இல்ல ஆனாலும் நாங்க ரெண்டு பேரும் லைப் ஜாக்கட் போட்டு கிட்டோம் எதுக்கு ரிஸ்க் அப்படினு. சரியா 30 நிமிச பயணம் நாங்க அந்த தீவுக்கு போய் சேர்ந்தாச்சு. அட அட அட அழகுனா அழகு அப்படி ஒரு அழகு கடலோட நிறம் சுத்தமான நீலக்கலர்ல பார்க்கவே கண்ணு படுது அப்படி ஒரு அழகு. இறங்கி உள்ள என்ட்ரன்ஸ் பீஸ் வாங்கிட்டு போனா அங்கதான் ஆமை (பெரிய்ய) ஆமைகள் இருக்குது உள்ள போகும் போது ஒரு கட்டு கீரை குடுக்கறாங்க. அந்த ஆமைகளுக்கு குடுக்கறதுக்கு. அதை அந்த ஆமைகளுக்கு நாங்க ஊட்டி விட்டுக்கிட்டே நிறையபோட்டோ எடுத்தோம்.

ஆமைனா ஒவ்வொன்னும் அம்மாடி ரொம்ப பெரிசு. அப்ப நிறைய ஆமைகளுக்கு வயசு 160 வருசம் ஆயிருக்கு.

உலக தொலைக் காட்சிகளில் முதன் முறையாக 


இதெல்லாம் முடிச்சிட்டு திரும்பலாம்னு நினைக்கும்போது ஒரு ஆமை மட்டும் தனியா இருந்துச்சு பாவம் அதுக்கு யாருமே கீரை தரல சரி பாவம் நாம மட்டுமாவது தரலாம்னு உள்ள இறங்கி போயி குடுத்தேன். அதுக்கு பாவம் பசிபோல கட கடனு கீரைய கடிச்சுகிட்டே வந்துச்சு அப்ப என்ன ஆச்சு கீரை தண்ட கடிக்கறதா நினைச்சு என் மோதிர விரல கடிச்சுடுச்சு நான் அவசரமா விரல இழுக்கவும்  அதோட பல்லுல சிக்கி விரலுல நல்லா 1 இன்ச் அளவுக்கு காயம். ரத்தம் கடகடனு வர ஆரம்பிச்சுடுச்சு. பாவம் ஆமை அது வேணும்னு கடிக்கல அதுக்கு பசி அதான் தண்டுனு நினைச்சு விரல கடிச்சுடுச்சு. உடனே அந்த தோட்ட காரன் கிட்ட கேட்டோம் இதுக்கு என்ன மருந்து போடறதுனு அவன் கூலா இதுக்கெல்லாம் ஒன்னும் மருந்து போட வேண்டாம் போயி கடல் தண்ணில கழுவுங்க போதும்னு சொல்லிட்டான். எனக்கு அழுகையா வருது.
அப்புறம் பக்கத்திலயே ஒரு ஹோட்டல் இருந்துச்சு அங்க போயி கொஞ்ச நேரம் உக்காரலாம்னு உக்காந்து போட்டோ எடுத்துக்கிட்டோம். அப்பவும் மனசே சரியில்ல என்னடா இப்படி ஆயிடுச்சேனு. ஆனா அந்தஹோட்டல் சூப்பரா இருந்துச்சு. பழைய கட்டிடத்த மாத்தாம அப்படியே புதுசு மாதிரி வச்சிருக்காங்க. அங்க பால்கனி மாதிரி ஒரு இடம் பில்டிங்ல இருந்து நீண்டு இருக்கும் அதுல நாம நிக்கற உக்கார அத்தனையும் கடலுக்கு மேல அதாவது அடில கடலுமேல ஸ்லாப் போட்டு அளகா வச்சிருக்காங்க.

 அப்புறம் திரும்ப கடற்கரைக்கு வந்தோம். அங்க கடல்ல நிறையபேரு குளிச்சுட்டு இருந்தாங்க. எனக்கு தண்ணில இறங்கற எண்ணமே இல்ல.  அப்படியே ஓடிபோயி தண்ணில (Snorkling) பாக்கற கண்ணாடி அப்புறம்வாய்வழியா சுவாசிக்கற ஒரு ட்யூப்பு இதுக்கு 100 ரூபாய் வாடகைவேற குடுத்து வாங்கிட்டு வந்திட்டாரு. உணமையில மறக்க முடியாத காட்சிகள் தண்ணிக்கு அடியில இவ்வளவு இருக்கா அம்மாடி. சூப்பருங்க நாம டிஸ்கவரி சேனல்ல பாக்கற மாதிரியே குட்டி குட்டி மீனுங்க கூட்டமா டிசைன் டிசைனா வந்து போகுது அது போக கல்லே செடி மாதிரி டிசைனா கலர் கலரா இருந்துச்சு. உள்ள இருந்து அந்த கல்லு செடி கலர் கலரா எப்படி உருவாகுதுனே தெரியல அதெல்லாம் பார்க்க ரொம்ப அருமையான மறக்க முடியாத காட்சிகள். இதெல்லாம் முடிச்சு வெளிய வரும்போது சரியா ரெண்டு மணிநேரம் கடந்திருக்குது. நேரம் போனதே தெரியல. அப்படியே ஆமை கடியும்தான். இதெல்லாம் முடிச்சுட்டு வெளிய வந்தப்புறம் எங்க வீட்டுக்காரரு கிண்டல் யாரோ தண்ணில இறங்க மாட்டேனு சொன்னாங்க கடைசில பார்த்தா என்ன கரைல நிக்கவெச்சுட்டு நீ இந்நேரம் ஆடறயே நியாயமானு. என்ன பண்ணறதுங்க தண்ணில இறங்கற வரைக்கும் பயம் இறங்கின பிறகு ஒன்னுமே தெரியல தைரியம் வந்திடுச்சுனு சொல்லி சிரிச்சேன் அப்பறம் அவரு கேட்டுதான் எனக்கு ஞயாபகம் வந்திச்சு ஆமை கடி பத்தியே. ஆமைகடி ரத்தம் வரது நின்னுடுச்சு வலியும் இல்ல.

அதுக்குள்ள கரையில இருந்து நண்பர் போன் பண்ணி என்ன பண்ணறீங்கனு கேள்வி நாங்க இப்பதான் கடல்ல இருக்கோம் நீங்க கரைல என்ன பண்ணறீங்க பாவம்னு கேட்டோம் அவரு கூலா நான் இங்க ஒரு நண்பர்கூட சான்சிபார் சிட்டிய சுத்தி பார்த்துகிட்டு இருக்கேன்னாரு. எதுலனு கேட்டா ஸ்கூட்டர் காரு எல்லாத்துலயும்னு சொல்ல சொல்ல கட்டு சரி நாங்க நினைச்சோம் யாரவது கல்லூரி மாணவர்களா இருக்கும்னு. அப்புறம் கிளம்பி கரைக்கு போகலாம்னு கப்பலுக்கு வந்தோம் படகோட்டி எங்கள ஏத்திட்டு கப்பல நகர்த்த ஆரம்பிச்சான். எனக்கு சந்தேகம் இவ்வளவு பழங்கள் வாங்கிட்டு வந்தானே ஒன்னு கூட இன்னும் எங்களுக்கு தரலயேனு. ஏன்னா எனக்கு பசி பயங்கரமா ஆயிடுச்சு தண்ணில ஆடின ஆட்டத்துல. கப்பல் கொஞ்ச தூரம் வந்தப்புறம்தான் அவன் பழங்கள எடுத்து கட் பண்ணி அழகா குடுக்க ஆரம்பிச்சான். அப்புறம் விசாரிச்சதுல அந்த தீவு ஒரு தனியாருக்கு சொந்தமானது அங்க அந்த ஹோட்டல் உணவுகள் மட்டும்தான் சாப்பிடனும் பிற உணவு பொருட்கள் அனுமதி இல்லைனு. பசிக்கு எல்லா பழமும் அமிர்தமா இருந்துச்சு சுத்திலயும் தண்ணி நடுவுல உக்காந்து பழங்கள் சாப்பிடறது அருமையாதான் இருந்துச்சு. பழங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது

கரை கிட்ட வந்தாச்சு. கரைய போட்டோ எடுத்துகிட்டே வந்தோம்.

கிட்டதட்ட அந்த இடங்கள் வெனீஸ் மாதிரியேதான் இருக்குது. அப்புறம் கரைல இறங்கும்போது தயாரா எங்க நண்பர் இருந்தாரு எப்படி தெரியும் நாங்க இப்ப வருவோம்னு கேட்டா. அவரு அதான் படகோட்டி போன் பண்ணி சொன்னானே அப்படிங்கறாரு. கடற்கரைல இருந்து ஹோட்டலுக்கு கிட்டதட்ட அரை கிலோ மீட்டர் இருக்கும். இனி நடக்கனுமா இல்ல கார் பிடிக்கனுமோனு யோசனை பண்ணிகிட்டு இருக்கும்போதே நண்பர் வாங்க நம்ப கார் இருக்குதுனு ஏத்துனாரு யாருப்பா அந்த நண்பன்னு கேட்டா அதாங்க நம்ம கேப்டன். நம்மள கூட்டிகிட்டுபோக வந்தானே காலைல அவன் தான் இது. நீங்கபோன பிறகு அவன் கூடதான் ஊரு சுத்திகிட்டு இருக்கேன். இதும் அவன் காருதான் ஏறுங்க போகலாம்னு ஏத்தி ஹோட்டலுக்கு கூட்டி கிட்டு போனாரு. போகற வழிலயே இனி மதியம் என்ன பண்ணறது பக்கத்துல பாதி நாள் சுத்தற மாதிரி என்ன இடம் இருக்குனு அவனையே கேட்டோம். அதுக்கு அந்த ஆளு ஸ்பைஷ் டூர் போகலாம் அரை நாள்ள முடிஞ்சிடும்னு சொன்னான். சரி நாங்க குளிச்சு கிளம்பி வரோம் நீயே கூட்டிகிட்டு போனு சொல்லிட்டு நாங்கபோயி 20 நிமிசத்துல தயாராகி வந்தாச்சு.


Wednesday, February 06, 2013

ஜான்சிபார் - 2

இரண்டாம் நாள்

அடுத்த நாள் காலைல தூங்கி எழுந்து பார்த்தா அவரு எனக்கு முன்னாடி ரெடியா இருந்தாரு எப்படினு கேட்டா எல்லாம் சிக்கன் புண்ணியம் 3 மணிக்கே எழுந்தாச்சுனு சொன்னாரு. அங்கன விடுதிகாரங்களே இலவசமா காலை உணவு குடுத்தாங்க சாப்பிட்டுட்டு தயாரானவுடனே அவருடைய மாணவி அந்த ஊருக்கார பொண்ணு வந்து நின்னாங்க. அவங்க கிட்ட இன்னிக்கு எங்க போலாம்னு விசாரிச்​சோம் பக்கத்துல இருக்கற கோட்டைய பார்க்கலாம்னு சொல்லுச்சு ஆனா எங்களுக்கு உள்ளூரு வேண்டாம் வெளியூருல சுத்தி பாக்கலாம்னு சொன்னோம். ஏன்னா அந்த பொண்ணுக்கு ஸ்வாகிலி தெரியும் வழி கேட்கறது ரொம்ப எளிது. நாங்க ஊருல இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி அலுவலகத்துல வேலை செய்யற ஒரு பாட்டி சொன்னாங்க சான்சிபார்ல ஒரு குகை இருக்கும் கண்டிப்பா போயிட்டு வாங்கனு. சரி இன்னிக்கு அந்த இடத்துக்கு போலாம்னு முடிவு பண்ணிட்டு வழிகேட்க ஆரம்பிச்சோம். சரியா காலை 11 மணிக்கு அந்த ஊருக்கு போற ​பேருந்து வந்துச்சு. இதுல முக்கியமான விசயம் இந்த தான்சானியா முழுக்கவே பஸ்னா உடனே நம்ம ஊரு பஸ் மாதிரினு நினைக்காதீங்க, நம்ம ஊரு ஆம்னி வேன் தான் இந்த ஊருல பஸ். எப்படியோ ​பேருந்து பிடிச்சு 1 மணிநேரம் பயணம் செஞ்சு ஒரு கிராமத்துல இறக்கி விட்டுட்டு போயிடுச்சு. அங்க ​பெயர் பல​கை ஒன்னு குகைக்கு போக இங்கயிருந்து 1 கி மீட்டர் நடக்கனும்னு போட்டிருந்துச்சு சரி 1 கி மீ தான நடக்கலாம்னு நடக்கறோம் நடக்கறோம் நடந்துகிட்டே இருக்கோம் இடம் மட்டும் வரல இதுல அந்த ஊரு குழந்தைங்க ஒரு 10 பேரு எங்க பின்னாடியே வேடிக்கை பார்த்துகிட்டு வந்தாங்க. எப்படியோ காடு மேடு ஏறி இறங்கி அந்த இடத்துக்கு போய் சேர்ந்தோம். அங்க பார்த்தா ஒரு கிணறு மட்டும் இருந்துச்சு அதுக்கு 1 டாலர் கட்டணம் வேற. திட்டிக்கிட்டே வாங்கிட்டு பக்கத்துல போனோம். அப்பகூடவே ஒரு பையன் வழிகாட்டி பணி ​செய்ய டார்ச் எல்லாம் எடுத்துகிட்டு வந்தான். அத பார்த்து நாங்க சிரிச்சோம் சின்ன கிணத்த சுத்தி பார்க்க இவ்ளோ ஆர்பாட்டமானு.

அப்புறம் அசட்​​டையா கிணத்து படில இறங்க ஆரம்பிச்சோம் கொஞ்ச தூரம் போன பிறகு அப்படியே மலைச்சு போயி நின்னுட்டோம். அம்மாடி எவ்ளோ பெரிய குகை அசந்து போயிட்டோம். மேல பாக்க வெறும் கிணறு மாதிரி சின்னதா இருக்கு ஆனா உள்ளே பெரிய குகை. சரி இந்த பையன கேட்போம்னு சொல்லுப்பா தம்பி இந்த இடம் என்ன ஏதுனு கேட்க ஆரம்பிச்சோம். அவன் சொன்ன கதை “இந்த இடத்துக்குபேரு மங்காபானி (Mangapwani) அதாவது மங்கானா அரேபியர்கள்னு அர்த்தம் பானினா தண்ணி அதாவது இந்த இடத்துக்கு அரேபியர்களின் கடற்கரைனு பேரு. இங்க இந்த குகை சான்சிபார் புரட்சி 1960ல நடந்துச்சு அதுக்கு அப்புறமா கட்ட பட்டு இருக்கலாம். புரட்சிக்கு பிறகு அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. அந்த டைம்ல அடிமைகள மறைச்சு வெச்சு வியாபாரம் பண்ண இந்த குகைகளை உபயோகம் பண்ணி இருக்காங்க. வெளில இருந்து பார்த்தா சாதாரண விவசாய நிலம் அதுல ஒரு சின்ன கிணறு அவ்ளோதான் தெரியும் ஆனா உள்ள ஆயிரக்கணக்கான அடிமைகளை மறைச்சு வெச்சுக்கலாம். அது மட்டும் இல்ல இந்த குகைல இருந்து 3 கிமீ தூரத்துக்கு குகை போகுது அது கடற்கரைல போயி முடியும். இங்க இருந்து அடிமைய நிலத்துக்கே கூட்டி வராம அப்படியே குகை வழியா கடற்கரைக்கு கொண்டு போயி கப்பல்ல ஏத்தி வெளி நாட்டுக்கு அனுப்பிடலாம். இப்ப இங்க ரெண்டு வழி இருக்கு ஒன்னு நல்ல வழி ஆனா 3 கி மீ தூரம் மற்றது 1 கி மீ தூரம் ஆனா வழி ரொம்ப மோசமா இருக்கும். நீங்க எந்த வழிய தேர்ந்து எடுத்தாலும் அது வழியா போலாம்னு” சொல்லி நிறுத்துனான்.
அது மட்டும் இல்ல இந்த இடத்தை கண்டு பிடிச்சது ஒரு கதை  ஒரு தடவை ஆடுமேய்க்கும் போது ஆடு தவறி கிணத்துல விழுந்திருக்கு ஆனா ஆடு சாகவும் இல்லாம கத்திக்கிட்டே இருந்திருக்கு அதனால கயிறு கட்டிகிட்டு இறங்கி பார்த்திருக்காங்க அப்பதான் இவ்ளோ பெரிய இடம் இருக்கறதே தெரிஞ்சிருக்கு.”
இந்த கதையயும் இடத்தையும் பார்த்தே மலைச்சு நின்னாச்சு சரிகொஞ்ச தூரம் போயி பார்க்கலாம் அப்புறம் முடிவு பண்ணலாம்னு சொல்லிட்டு நடக்க ஆரம்பிச்சோம். கொஞ்சம் போனவுடனே ஒரு சின்ன குளம் மாதிரி இருக்கு அதுல தண்ணி இருந்துச்சு அந்தபையன் இதுரொம்ப சுத்தமான தண்ணி எந்த அழுக்கும் கிடையாது பக்கத்து கிராம மக்கள் இந்த தண்ணிய  மருந்து மாதிரி உபயோகம் பண்ணறாங்க. இதை குடிச்சா நோய் நீங்கும்னு நம்பறாங்கனு சொன்னான். சரினு நாங்களும் ஆளுக்கு கொஞ்சம் குடிச்சு வெச்சுகிடடோம்ல :).

அப்படியே உள்ள போக போக வவ்வால் நிறைய கூரைல இருந்துச்சு. பத்தாததுக்கு வேர்வை பயங்கரமா வர ஆரம்பிச்சுது. இதெல்லாம் டிஸ்கவரி சேனல்ல பார்க்கதான் நல்லா இருக்கும் என்னால முடியாதுனு சொல்லிட்டு நான் வரல சாமி ஆள விடுங்கனு சொல்லி திரும்புனேன் அந்த பொண்ணும் என் கூட வந்திடுச்சு ரெண்டு பேரும் மேல படிகிட்ட வந்த பிறகு தான் உயிரே வந்திச்சு. எங்க வீட்டுல அவரு  இன்னும் கொஞ்ச தூரம் போறேனு உள்ள போனாரு  ஒரு கால் மணிநேரம் கழிச்சு அவங்களும் திரும்ப வந்தாங்க. என்ன பார்த்திங்க முழுசா போலையானு கேட்டோம் அப்ப சொல்லறாங்க உள்ள போக போக வவ்வால் அதிகமா இருக்கு அது மட்டும் இல்ல மூச்சு திணறலும் ஆரம்பிச்சிடுச்சு அதான் வந்திட்டோம்னாங்க. சந்தோசம் திரும்ப போலாம்னு சொன்னப்ப அந்த கைட் பையன் இன்னொரு வழி இருக்கே அதுலவேணா போயி பார்க்கலாம்னு சொன்னான். அங்க நானும் அந்த பொண்ணும் மட்டும் போனோம். அட அந்த வழி கொடுமையிலும் கொடுமையா இருந்துச்சு ஒரே கல்லு கல்லா ஆண்டவா எப்டிதான் அங்க அடிமை இருந்தாங்களோ ரொம்ப பாவம் அவங்க. ஒரு 20 அடிக்கு மேல நடக்க முடியல போட்டோ மட்டும் எடுத்துகிட்டு திரும்ப வந்திட்டோம். மேல நிலத்துக்கு வந்த பிறகுதான் நிம்மதியாச்சு. நிஜமா வாழ்க்கைல மறக்க முடியாத அனுபவம் அது.


வெளிய வந்து மறத்துக்கு அடியில உக்கார்ந்து இருக்றோம் நம்ம கூட வந்த பசங்க எல்லாம் மரம் ஏறி பழம் புடுங்கி குடுத்தாங்க அட என்ன பழமா இருக்கும்னு பார்த்த நம்ம எழந்தைப்பழம்தான். ஒரே சநதோசம் ஆயிடுச்சு அவங்க நிறைய புடுங்கி புடுங்கி குடுத்தாங்க. அப்புறம் ஒரு பையனோட மிதிவண்டி வாங்கி கொஞ்ச தூரம் ஒட்டினோம் அவங்கள ஒளிபடம் எடுத்து காட்டினவுடனே ரொம்ப சந்தோசம் ஆயிடுச்சு அவங்களுக்கு.

அடுத்த இடத்துக்கு போகலாம்னா அதும் இன்னும் 2 கி.மீ தள்ளி இருக்குனாங்க. இப்பவே சலிச்சு போச்சு பக்கத்துல ஒரு விவசாயிகிட்ட மாட்டு வண்டில கொண்டு விடுங்கனு கேட்டோம் ஆனா அவரு மாட்​டேன் சொல்லிட்டாரு அதனால நடராஜா சர்வீஸ்தான். காட்டு வழில ரெண்டு பக்கமும் விவசாய நிலம். ஆனா வெயில் கொழுத்தி எடுத்திடுச்சு :(. வேர்க்க விறுவிறுக்க அங்கபோயிசேர்நதோம். அங்க ஒன்னும்பெரிசா இல்ல நிலத்துக்கு அடில ஒரு ரெண்டு அ​றை மாதிரி கட்டி இருக்காங்க அடிமைகளை கப்பல் ஏத்தறதுக்கு முன்னாடி அடைச்சுவெக்கிற இடம் அது. கீழ இறங்கி பார்த்திட்டு இருக்கும்போது ஒரு பொந்துல இருந்து பாம்பு தலைய நீட்டிகிட்டு இருந்திச்சு நான் பார்த்து அலறிமேல வந்திட்டேன். ஆனா பின்னாடி வந்தவங்க அது பாம்பு இல்லவேற ஏதோ விலங்குனு சொன்னாங்க இருந்தாலும் பயமாதான் இருந்துச்சு. அந்த இடத்துக்குபேரு ஸ்லேவ் சாம்பர்(Slave Chamber). அங்க இருந்து எட்டி பார்த்தா கடல் தெரியுது. அங்கபோயி நல்லா கடல்ல நின்னு நிறைய போட்டோ எடுத்தோம். அழகான ரம்மியமான இடம் இயற்கை இந்த நாட்டுக்கு ரொம்ப அழக குடுத்திடுச்சுப்பா. எங்க பார்த்தாலும் அழகா இருக்கு. ஆள் நடமாட்டமே இல்லாத கடற்கரை அவ்ளோ அழகா தனியா இருக்கு. கூட வந்தபையன் இந்தி சினிமா ரொம்ப பார்த்து பார்த்து மாதுரி தீட்சித், சல்மான்கான் எல்லாரையும் கேட்டதா சொல்லி அனுப்புனான். அப்பதான் தெரிஞ்சுது இந்தி படம் எங்க எல்லாம் பிரபலமாகி ஆகியிருக்குனு.


எப்படியோ பேசி முடிச்சு திரும்ப கிளம்பனும்னு சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது எல்லாருக்கும் கால்வலி பின்னி எடுக்குது இனிமேலும் 2 கி மீ நடக்கற காரியமா தெரியல அதனால பக்கத்துல ஏதாவது கார் கிடைக்குமானு கேட்டோம் அந்த ஆளு இன்னும் உள்ள அரை கி மீ நடந்தா ஒரு உணவு விடுதி இருக்கும் அங்க டாக்சி கிடைக்கும்னு சொல்லிட்டு கூடவே நடந்து வந்தான். உள்ள காட்டுக்குள்ள ஒரு அரு​மையான விடுதி அது கடலுக்கு ரொம்ப பக்கத்துல அழகா இருக்கு அங்க எல்லாரும் வெள்ளை காரங்கதான் இருக்காங்க எப்படியோ ஒரு டாக்சிய கெஞ்சி கேட்டு முக்கியசா​லை வரைக்கும் கொண்டு போய் விட சொல்லி கொண்டு வந்து விட்டான்.
இப்ப அடுத்தது மதிய சாப்பாடுக்கு என்ன பண்றதுனு பார்த்தோம் எல்லாருக்கும் பசி ரொம்ப அதிகம் நடந்து நடந்து. அங்க முக்கியசா​லை  சொல்லற எடத்துலயே ரெண்டு கடைதான் இருக்குது. அதுல ஒரு கடைல ஒன்னுமே இல்ல ஏன்னா எல்லாம் தீர்ந்திடுச்சு 3 மணிக்கே. இங்கெல்லாம் கடைனா ஏதோ பெரிசா நம்ம ஊரு கடைங்க மாதிரினு நீனைச்சுகாதீங்க, தென்ன ஓலை போட்டு ஒரு குடிசை மாதிரி இருக்கும் அதுல நாலு பெரம்பு சேர்போட்டு பலகைல டேபிள் இருக்கும் அவ்ளோதான். எப்படியோ ஒரு கடைல ஆளுங்க இருந்தாங்க அங்க போயி என்ன சாப்பிட இருக்குனு கேட்டோம்.
அவன் சிப்ஸ் மட்டும்தான் இருக்குனாங்க. எனக்கு அது​போதும்னு சொல்லிட்டேன் ஆனா எங்க வீட்டு காரரும் அவரு நண்பரும் சிப்ஸ் என்னத்துக்கு ஆகும் சாப்பாடு இருந்தாதான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்னு சொல்லி புலம்பிகிட்டே சிப்ஸ் ஆர்டர் பண்ணுனாங்க. நாங்க ஆர்டர் பண்ணுனதுக்கு அப்புறம்தான் அவன் அடுப்பு பத்தவெச்சு தயாரிக்க ஆரம்பிச்சான். எல்லாம் கொடுமை. இந்த சிப்ஸ் மயாயி அப்படீங்கறது என்னனா.உருளை கிழங்க நீள நீளமாவெட்டி எண்ணைல (as like our finger chips) பொரிச்சு எடுத்துக்கனும் அப்புறம் முட்டைய உடைச்சு நல்லா   அது கூட இந்த சிப்ஸ் போட்டு மிக்ஸ் பண்ணி ஆம்லெட் மாதிரி ஊத்தி எடுத்து தருவாங்க. இதுக்கு பேருதான் சிப்ஸ் மயாயி. மயாயினா ஸ்வாகிலில முட்டைனு அர்த்தம். இதுக்கு தொட்டுக்க பீலி பீலினு ஒன்னு வெச்சிருப்பாங்க அது என்னனா வெறும் பச்ச மிளகாய அரைச்சு கொஞ்சூண்டு தக்காளி சேர்த்து சாஸ் மாதிரி வெச்சிருப்பாங்க. இந்த கொடுமைதான் தான்சானியா முழுக்கவே நானும் சாப்பிட்டு பழகிட்டேன் வேற வழி.ரொம்ப நேரம் கழிச்சு சிப்ஸ்கொண்டு வந்தான் பரவாயில்லை நல்லா செஞ்சிருந்தான் சிப்ஸ் மயாயி கூட நிறைய வெஜிடபிள் போட்டு சாஸ் ஊத்தி குடுத்தான். நாங்க சாப்பிட ஆரம்பிச்சவுடனே ஒரே ஒரு ப்ளேட் சாப்பாடும் மீன் ஒன்னும் கொண்டு வந்து குடுத்தான். எப்படி இதுனு கேட்டேன். கூட வந்த நண்பர் சொன்னாரு வெயிட் பண்ணிகிட்டு இருக்கும் போது வெளிய போயி பார்த்தேன் அங்க வேலை செய்யற வங்களுக்கு சாப்பாடு செஞ்சுட்டு இருந்தாங்க அவங்க கிட்ட கெஞ்சி கேட்டேன் அதான் ஒரு கப் ஸ்பெஷலா எனக்கு மட்டும் குடுத்தாங்கனாரு. அவருபேசிட்டு திரும்பி பார்த்தா தட்டுல இருந்த மீன கானோம் எங்கனு பார்த்தா கோழி கொத்திட்டுபோயி சாப்பிட்டுட்டு இருக்கு. சரினு இருக்கற சாப்பாட்ட பீலி பீலி ஊத்தி எப்படியோ சாப்பிட்டாங்க. இங்க சாப்பாடுனு கேட்டா வெறும் சாப்பாடு மட்டும்தான் தருவாங்க நம்ம ஊரு மாதிரி குழம்பு ரசம்  ஏதும் கிடையாது. ஆனா என்ன இவங்க அரிசி சாதம் செய்யும் போது கூடவே கொஞ்சம் எண்ணை விட்டு உப்பு போட்டு அளவான தண்ணி வெச்சு வடிக்காம வேக வெச்சுடுவாங்க அதனால வெறும்  சாப்பாடே கொஞ்சம் ருசியாதான் இருக்கும். எப்படியோ சாப்பிட்டு முடிச்சு கிளம்பலாம்னு பார்க்றோம் அப்பதான் ஒரு விசயம் ஞாபகம் வந்திச்சு நாங்க வந்த இந்த ஒரு மணி நேரத்துல ஒரு பஸ் கார் கூட எங்கள தாண்டிபோகவே இல்ல. ஆகா நல்லா மாட்டி கிட்டோம்னு நினைச்சு புலம்பி கிட்டே நின்னோம். அப்ப ஒரு ​பேருந்து வந்திச்சு கடைகாரர் இது நகரத்திற்க்கு தான் போகும் நீங்களும் போலாம்னு. நாங்க ஓடிபோயி பார்த்தா என்ன கொடுமை சாமி இது. நம்ம ஊரு மினிடெம்போல பின்னாடிரெண்டு பலகை அடிச்சு உக்காற வெச்சிருக்காங்க அதுக்குமேல தார் பாயி  கட்டி இருக்காங்க ஏறி நிமிர்ந்து நடக்க முடியாது குமுஞ்சு கிட்டே போயி உக்காற வேண்டியதுதான் இதுல அல்ரெடி பஸ் புல்லு. நடுவுல கீழ குத்த வெச்சு உக்கார்ந்திட்டு வரதுனா ஏறுங்கனு சொல்லறாங்க. எங்களுக்கு வேற வழி இல்ல இதையும் விட்டா அடுத்த வண்டி எபபோ வரும்னு தெரியல கார் மாதிரி வண்டிகளும் கிடையாது சரி ஏறுவோம்னு எப்படியோ ஏறி வந்து சேர்ந்தோம் அந்த ஊருகாரங்க எங்கள பார்த்து சிரிக்க நாங்க அவங்கள பார்த்து சிரிக்க எப்படியோ சிட்டிக்கு வந்து சேர்ந்தோம்.

சிட்டிகிட்ட வரும் போது அந்த பொண்ணு கிட்ட இந்நேரத்துக்கு அ​றைக்கு போயி என்ன பண்ணறது வேற ஏதாவது இடம் இருந்தா சொல்லுனு கேட்டோம். உடனே அந்த பொண்ணு வேற ஒரு இடம் இருக்குனு ஒரு பழைய கோட்டைக்கு கூட்டி கிட்டு போச்சு.

அதுபேரு மருகுபி பேலஸ் (Maruhubi Palace) அதுவும் பழைய சுல்தான் யாரோ வாழ்ந்த இடம் ஆனா அங்க ஒரு பெரிய குளம் இருந்துச்சு நல்ல தண்ணி அதனால நல்லா மூஞ்சி கழுவி குளிச்சு புத்துணர்சி ஆகிட்டோம். அப்புறம் கோட்டைய சுத்தி பார்த்துட்டு பின்னாடி வந்தா கடல். அங்க முழுசும் கப்பல் செய்யற இடம். நிறைய பெரிய பெரிய கப்பலுங்க கிடக்குது. அங்கயெல்லாம் நல்லா போட்டோ எடுத்துகிட்டு கடல் ஓரமா சுத்தி வந்தோம் அங்க ஒரு ஆள் என்னவோ துணி துவைக்கற மாதிரி கல்லுல அடி அடினு அடிச்சுகிட்டு இருந்தான் என்னனு பக்கத்துலபோயி பார்த்தா அது ஆக்டோபஸ் மீன். அட ஆண்டவா அதை என்ன பண்ணறீங்கனு கேட்டா ஆக்டோபஸ் சமைக்கறதுக்கு முன்னாடி இப்படி அடிச்சு கழுவுனா சமைக்கறது ஈசினு சொன்னாங்க. ஆப்டோபஸ் அடிச்சு அடிச்சு அது நுரை மாதிரி வருது அப்புறம் கழுவி சமைக்கறாங்க. இன்னிக்குதான் ஆக்டோபஸ் முழுசா பாத்திருக்கேன். ஆனா பாவம் அது.


இதுல நாங்க அங்க இருக்கும் போதே ஒரு பையன் போன் மேல போன் அவங்க வீட்டுக்கு வந்தே ஆகனும்னு. நாங்க இங்க ஊரு சுத்திகிட்டு இருக்கோம் அங்க இருக்கோம்னுசொல்லி கிட்டே வந்தோம். எல்லாம் ஒரே பாசக்கார பசங்களா இருக்காங்க என்ன பண்ணறது.

நகரத்தி​லே வந்து இறங்கும் போதே அந்த பையன் அங்க காத்துகிட்டு  இருந்தான். அவன் முதல் நாளு எங்கள அலைய விட்ட அதேபையன். மனசுக்குள்ள இவன் வீட்டுக்கு போயி என்னத்த பண்ணறது. அதே பீலி பீலி சிப்ஸ்தான தரபோறான் இதுக்கு இங்க இருந்து அவ்ளோ தூரம் போகனுமானு யோசிச்சு கிட்டே இருந்தோம் இருந்தாலும் அவன் இவ்ளோ தூரம் கூப்பிடறானே போய்தான் பார்ப்போம்னு கிளம்பி அவன் கூட போனோம் அந்த பொண்ணு அவ வீட்டுக்கு போயிட்டா. அவன்கூடபோனோம் ஒரு அரை மணிநேர பயணம் அப்பவும் அவங்க வீட்டுக்கு பக்கத்துல பஸ்போகாதுனு டாக்சி எடுத்தான். டாக்சில ஏறி வண்டி எடுக்கும் போதே ரெண்டு பேரு தள்ளி விட்டுதான் வண்டி ஸ்டார்ட் ஆச்சு. நேரா பெட்ரோல் பங்க் போயி பெட்ரோல்போட நிக்கறோம் வரிசையா ஸ்கூட்டரா வருது. அந்த சான்சிபார் டவுன் முழுக்கவே வெஸ்பா ஸ்கூட்டர் தான் ஓட்டறாங்க. அதை பார்த்து சந்தோசம் ஆயிடுச்சு. என்ன இருந்தாலும் நம்ம ஊரு வண்டியில்ல அதான். அப்புறம் அவங்க வீட்டுக்கு போயி சேர்ந்தோம் வெளில ஒரு 5, 6 குழந்தைங்க விளையாடிட்டு இருந்துச்சு நான் நினைச்சேன் அதெல்லாம் பக்கத்து வீட்டு குழந்தைங்கனு உள்ளபோயி பார் த்தா வீடு சூப்பரா இருக்கு.

அவங்க அண்ணன் வந்தாரு சான்சிபார் ஜெயில்ல ஆபீஸர்னு அறிமுகம் பண்ணிகிட்டாரு. அப்புறம் அவங்க அம்மா அக்கா எல்லாரும் வந்து அறிமுகம் பண்ணிகிட்டாங்க. அவரு இந்தியர்கள் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்ததுக்கு சந்தோசம்னு சொன்னாரு.  கடைசியா அவரு சம்சாரம் வந்து அறிமுகம் பண்ணிகிட்டு குழந்தைகள அறிமுகம் செஞ்சுது. வெளிய விளையாடிட்டு இருந்த 5 ம் அவருடைய சொந்த குழந்தைங்க தானாம். அட ஆண்டவா எப்படிதான் சமாளிக்கறாங்ளோ இவ்ளோ குழந்தைங்கள வெச்சு. அப்புறம் காபி சாப்படறீங்களானு கேட்டாங்க. உடனே நாங்க சரினு சொன்னோம்ல ஏன்னா மதியம் கொஞ்சம் சாப்பிட்டது அதுக்கு பிறகு ஒன்னுமே சாப்பிடலை. அவங்க சம்சாரம் உள்ள போனது ரொம்ப நேரம் வரவே இல்ல. நாங்க நினைச்சோம் உள்ள போயி வெறும் காபிக்கு இவ்ளோ நேரமானு. கடைசில பார்த்தா தட்டு தட்டா எடுத்துட்டு வந்து வெச்சாங்க. என்ன என்ன ஐட்டம் தெரியுமா? பஜ்ஜி,போண்டா, கட்லெட்,ஸ்வீட் பிஸ்கட்ஸ் அப்புறம் தேங்காய் சட்னி. இதெல்லாம் பார்த்து ஆனந்த கண்ணீரே வந்திடுச்சு. ஏன்னா இதெல்லாம் இந்தியால பார்த்தது இப்பதான் 4 மாசம் கழிச்சு பாக்கறோம். ஆகா விடுவமா புகுந்து விலாசிட்டோம்ல. அவங்க கிட்ட அப்புறம் கேட்டோம் இதெல்லாம் எப்படி உங்களுக்கு செய்ய தெரியும்னு கேட்டோம் அதுக்கு அவங்க சொன்னாங்க இந்தியர்கள் (குஜராத்துகாரங்கதான்) இங்க இருந்தாங்க அவங்க கத்துகுடுத்ததுதான் இதெல்லாம்னு சொன்னாங்க. ஆகா நீங்க உங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்கனும் சாமி ஏன்னா இந்திய சாப்பாட கண்ணுல காட்டுனதுக்கு ரொம்ப நன்றினு சொல்லிட்டு அவங்க கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு கிளம்புனோம்.

கிளம்பி வரும்போது மறுபடியும் வண்டி தள்ள வேண்டியதா போச்சு எங்க வீட்டுகாரரு நான் எந்த நாட்டுக்கு போனாலும் வண்டி தள்ளற வேலை மட்டும் விட்டு போகாது போல இருக்குனு கிண்டல் பண்ணிகிட்டே வந்து சேர்ந்தோம். எங்க போனாலும் இந்த குடும்பம்ங்கற அமைப்பும் உபசரிப்பும் ஒரு சந்தோசத்தை தருதுனு நினைச்சு கிட்டே தூங்குனோம்.

இன்னமும் வரும்.. :)  :)

Monday, February 04, 2013

ஜான்சிபார் - 1

வணக்கம்,
இந்த கட்டுரை  நானும் எனது கணவரும் (2008) சென்று வந்த சுற்றுலா பற்றிய குறிப்பு மட்டுமே வேற ஒன்னும் உருப்படியா இல்லீங்க. நாங்களிருவரும் தான்சானியா எனும் ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஜான்சிபார் எனும் தீவிற்கு போய் வந்தோம்.

முதன் முதல்ல இந்த ஊருக்கு போறதால கூகுள்ள தேடி நிறைய விசயங்கள தெரிஞ்சு கிடடோம். முக்கியமா சொல்ல வேண்டியது என்னனா எங்க வீ ட்டுக்காரரு வேலை செய்த கல்லூரில நிறைய பசங்க அந்த ஊருல இருந்து வந்து படிக்கராங்க.

இவங்க கல்லூரி விடுமுறைங்கறதால நாலு நாள் சேர்ந்தா மாதிரி விடுமுறை கிடைச்சுது. தான்சானியாவில இருந்து இந்த ஜான்சிபார்  போகனும்னா ரெண்டு வழிதான் இருக்கு ஒன்னு விமானம், ரெண்டாவது கப்பல். விமானத்துல போனா கால் மணி நேரத்துல போயிடலாம் கப்பல்னா 2 மணிநேரம் ஆகும். எங்க வீட்டு காரரு விமானம்னு சொல்ல நான் கப்பல்னு சொல்ல கடைசில கப்பல்தான் ஜெயிச்சுது. கப்பல்ல போனாதான் கடல நல்லா பாக்கலாம்னு சொல்லி சம்மதிக்க  வெச்சேன்



     நாங்க கிளம்புனது வியாழன் காலை 7 மணி கப்பல். கப்பல் பேரு சீ எக்ஸ்ப்ரஸ் (Sea Express) இதுல முக்கியமான விசயம் எங்க ரெண்டுபேரு கூட மூணாவதா ஒரு நண்பரும் வந்திருந்தாரு. அவருக்கு தண்ணிய பார்த்தலே பயம் தெனாலி மாதிரி. சரியா 7.30க்கு செக் இன் எல்லாம் முடிஞ்சு வண்டி கிளம்புச்சு. அப்ப பக்கத்தில பார்த்தா யாரோ முணங்கற சத்தம் திரும்பி பார்த்தா அந்த நண்பர் சாமி கும்பிட்டுட்டு இருக்காரு கப்பல் கவுந்திடகூடாதுனு. அப்பறம் நாங்களும் வீட்டுக்கு எல்லாம் போன் பண்ணி பேசிட்டு உக்கார்ந்தாச்சு. அப்புறம் எங்க வீட்டுகாரரு சொன்னாரு வெளிய நின்னு பார்த்தாதான் கடல் நல்லா தெரியும்னு. வர மாடடேனு சொன்ன நண்பரையும் கூட்டிகிட்டு வெளில வந்து  அலைகள் பிண்ணனியில நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். அங்கவெளியதான் பாதி பேர் இருந்தாங்க. வயசானவங்க முதல் குழநதைங்க வரைக்கும். ஆனாலும் நாங்க உள்ள வந்து உக்கார்த்தாச்சு கொஞ்ச நேரங்களிச்சு பார்த்தா பக்கத்து சீட் குழந்தை வாந்தி எடுத்துச்சு அதை பார்த்து எங்களுக்கும் குமட்ட எப்படியோ கரை வந்து சேர்ந்தோம் 9 மணிக்கு. ஜான்சிபார் வந்த பிறகு தான் தெரிஞ்சுது எங்கள கூப்பிட வரேனு சொன்ன பையன் வரவே இல்ல போனும் பண்ணல. அப்புறம் என்ன வழக்கம்போல ஒரு சின்ன டீக்கடைல போயி இனிப்பா ஒரு ஆப்பம் டீ அப்புறம் சப்பாத்தி சாப்பிட்டுட்டு வெயிட் பண்னுனோம் அப்பதான் அந்த பையன் போன் பண்ணி அவன் அலுவலகத்தில வேலையா இருக்கறதாவும் நீங்களே கார் பிடிச்சு வந்து சேருங்கனு சொன்னான். அவனை கண்டபடி மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு கார் எடுத்திட்டு அலுவலகம் போய் சேர்நதோம் பெரிய அலுவலகம்தான் TTCL (Tanzania Tele Communicztion Limited) அப்புறம் கொஞ்ச நேரம் அங்க பேசிட்டு அவனை கூட்டிக்கிட்டே பழைய  டீக்கடைக்கிட்ட வந்தோம்  அங்கதான் அவன் எங்களுக்கு பார்த்து வெச்சிருந்த ஹோட்டல் இருந்தது அங்க போயி கொண்டுபோன சாமான் எல்லாம் வெச்சிட்டு எதிர்தாப்புல இருந்த அரபு பிரியாணி கடைலபோயி பிரியாணி ஆர்டர் பண்ணுனோம். ரொம்பநேரம் கழிச்சு வந்தது பிரியாணி, என்னானு பார்த்தா  சாப்பாட்டுல கொஞ்சம் மசாலா சேர்த்து செஞ்சுட்டு அது கூட ஒரு கரண்டி சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவிவெச்சு தந்தான் கொடுமை. அதுக்கு பிறகு கிழம்பி சும்மா இன்னிக்கு பக்கத்தில இருக்கற இடத்தை மட்டும் பாருங்கனு ஒரு அரபு சுல்தான் கோட்டைகிட்ட இரக்கி விட்டுட்டு போயிட்டான்.

அந்த இடத்துக்குபேரு (Mtoni marine) முட்டோனி மரைன் அங்க ஒரு பழையகோட்டை இருக்கு அதுலதான் சையது பின் சுல்தான் அல்புசையது வாழ்ந்திருக்காரு. நிஜமா ரொம்ப சொகுசாத்தான் இருந்திருக்காங்க. அங்க என்ன அதிசயம்னா அந்தகோட்டைக்கு கழிவு வெளியேற கடல்ல இருந்து சின்ன கால்வாய்வெட்டி அதுகோட்டை முழுக்க சுத்தி சுத்தி வருது. கோட்டை கதவு  வரைக்கும் கடல் தண்ணி வர மாதிரி கட்டி இருக்காங்க.

அதுல ராணி குளிக்க மசாஜ் ரூம், ஸ்டீம் பாத் எடுக்க ஒரு குகை மாதிரி கட்டி இருக்காங்க. அது மட்டும் இல்ல இங்க முன் மண்டபத்தில ஒருபெரிய ஹால் எதுக்குன்னா அங்கதான் அடிமைகள அடைச்சு வெச்சிருந்து தினம் பக்கத்து தோட்டத்துல வேலை செய்ய கூட்டிட்டு போவாங்களாம். பாவம் அவங்க சரியான சுகாதாரம் இல்லாத இடத்தில இருந்திருக்காங்க. கோட்டைய சுத்திட்டு வெளிய வந்தா கடல் முன்னாடியே இருக்கு. அங்க தான் ஒரு மணிநேரம் நல்லா காத்து வாங்கிட்டு வநதோம். ஆனா தண்ணி ரொம்ப உள்ள இருந்துச்சு சாயந்திரம்தான் தண்ணி கரை வரும்னு சொன்னாங்க. அந்த கோட்டை பக்கத்துயே முட்டோனி மரைன் ஹோட்டல் இருக்கு அது பீச் ரிசார்ட் பூராம் வெள்ளக்காரங்க சன் பாத்து எடுக்கறாங்க. அங்க போயி ஒரு கைக்கு மருதாணி வைக்க 50 டாலர் பணம்னு சொன்னாங்க சரி சரி நாங்க 5 ரூபாய்க்கு எங்க ஊர்லயே வெச்சுக்கறோம்னு வந்திடடோம்ல. சாயங்காலம் கிளம்பி திரும்ப சிட்டிக்குள்ள வந்தோம். அங்க இந்து கோவில் இருக்கறதா சொன்னாங்க. சரினுதேடி பிடிச்சு போனா நம்ம குஜராத்தி மக்கள் எல்லாம் பய பக்தியா பஜனை பாடிட்டு இருந்தாங்க. அந்த கோவில் பூசாரிகிட்டபேசினா அவரு தமிழ் அதும் கோயமுத்தூர் RS புரமாம் அப்பறம் விடுவமா நல்லா 1 மணி நேரம் பேசிட்டு பிரசாதம் வாங்கிட்டுதான் திரும்ப வந்தோம். அவரு சொன்ன தகவல்படி 1960 க்கு முன்னாடி ஜான்சிபார் முழுக்க அராபியர்களும் இந்தியர்களும்தான் இருந்திருக்காங்க. 1960ல புரட்சி வந்துதான் இந்தியர்கள் எண்ணிக்கை 4000ல இருந்து 400 ஆ குறைஞ்சிருக்கு.



திரும்ப வரும் வழில ஒரு சந்துல நிறைய தள்ளு வண்டிங்க இருந்துச்சு பக்கத்துல போயி பார்த்தா எல்லாம் சீ புட் விக்கற கடைங்க எல்லா வெளி நாட்டு காரங்களும் அங்கதான் இருக்காங்க. நாங்களும் போயி புதுசா என்னவோ தான்சானியா பிட்சானு விக்கறாங்ளே வாங்கி பார்ப்போம்னு வாங்குனா நல்லாதான் இருக்குது. நம்ம ஊருல ​போளினு ஒன்னு செய்வாங்கள்ள அதே மாதிரி ஆனா முட்டயெல்லாம் போட்டு சூப்பர் டேஸ்ட்டா இருந்துச்சு. அப்புறம் நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கறி இன்னும் என்ன என்னவோ குவிச்சு வெச்சு இருக்காங்க. நாங்க போட்டோ மட்டும் எடுத்திட்டு ஓடி வந்திட்டோம். திரும்ப பழைய கடைக்கு வந்து க்ரில் சிக்கன், சிப்ஸ் சாப்பிட்டுட்டு வந்து தூங்கியாச்சு. இப்படியாக முதல் நாள் முடிஞ்சிடுச்சு.

ஆகா முடிஞ்சுடுச்சுன்னு சந்​தோச படாதீங்க.. இன்னமும் சில பாகம் வரும்.. :) :)