Monday, October 15, 2007

முத்தே முத்தம்மா!!!

முத்து மணி மாலை பாட்டு கேட்டு நல்லா அனுபவிப்போம் அந்த முத்துக்களை பற்றி இன்னிக்கு வந்த மெயில் பார்த்து அசந்துட்டேன். பொதுவாவே முத்துக்கள்னா எல்லா பெண்களுக்கும் பிடிக்கும். அதுலயும் வெண் முத்து பாக்க ரொம்ப அழகாதான் இருக்கும். ஆனா இந்த படங்களை பார்த்த பிறகு கொஞ்சம் வருத்தமா போயிடுச்சு எனக்கு. இவ்வளவு பாடு படுத்திதான் முத்து எடுக்கறாங்களா? பாவம் இந்த முத்து சிப்பி உயிரினம். :(



முத்துங்கிறது எப்டி உருவாகுதுனா சிப்பியோட உடலுக்கு உறுத்தலா போற சில குப்பைகள்கிட்ட இருந்து பாதுகாக்க அது ஒரு திரவத்தை பூசி தன் உடம்ப பாதுகாத்துக்கும். அந்த திரவம்தான் பிற்காலத்தில முத்தா ஒரு திட பொருளா உருவாகும். இதையதான் நாம எடுத்து நகை பண்ணி போட்டு ரசிக்கறோம்.

இதுல செயற்கை முத்து இயற்கை முத்துனு ரெண்டு வகை உண்டு, எப்டினா இயற்கையா சிப்பிக்குள்ள அழுக்கு போய் அதை தடுக்க சிப்பி உண்டாக்கற முத்து இயற்கை முத்து. ஆனா அப்டி உருவாகறது ரொம் கம்மிதான். அதனால மனுசனே சிப்பிய வளர்த்தி அதுக்குள்ள சில நெருடல உண்டு பண்ணி செய்யறது செயற்கை முத்து.

கிட்டதட்ட எல்லா சிப்பிகளும் இந்த மாதிரி ஒரு திட பொருள உருவாக்கும். ஆனா எல்லாமே நல்ல முத்து கிடையாது. நிறைய சிப்பிகள்ள கிடைக்கறது வெறும் திடமற்ற அல்லது மட்டமான முத்துக்கள்தான்.

பொதுவா முத்துங்கறது வெறும் கால்சியம் (CaCo3)அதாவது சுண்ணாம்பு சத்துல இருந்து உருகாறதுதான்.





இந்த முத்து நல்ல தண்ணியில இருந்து கிடைக்கறது, அதாவது ஏரி,குளம்,ஆறுல வளர்ந்து வர சிப்பி முத்து முக்கியமா சீனாவுலதான் கிடைக்கும். அது போக கடல் அதாவது உப்பு தண்ணியில வளர்ந்து வர்ரதும் உண்டு.

ஆனா முத்தகள்ள பால் வெள்ளை, மஞ்சம், ரோஸ் மற்றும் கருப்பு கலர் இப்படி பல வகை உண்டு. ரொம்ப காஸ்ட்லி கருப்புதானுங்க.



Friday, October 05, 2007

முகவரி மறந்ததே !



இன்று நான்

வீடு திரும்ப மாட்டேன்


உன் பிசாசு நினைவுகள்

என் வீட்டிற்கான பாதைகளை

கலைத்து விட்டன


என் வீட்டிற்கு வழிகாட்டும்

விளக்குகளை உன்

பிரியத்தின் கண்களின் வெளிச்சம்

மூழ்கடித்துவிட்டன


என் வீட்டின் எண்களை

உனது பறவைகள் தானியங்களெனெ

கொத்திச் சென்றுவிட்டன


இனி நான் வீடென்று நம்பிய

என் வீட்டிற்கு

ஒரு போதும் திரும்ப மாட்டேன்
டிஸ்கி : கவிதை எழுதிய நண்பருக்கு நன்றி. அப்புறம் யாரும் இதை படிச்சிட்டு நான் வீட்டுக்கு போக மாட்டேன்னு நினைச்சு சந்தோசப்படாதீங்க. :)

Wednesday, October 03, 2007

போராட்டங்களும் வெற்றிகளும்

கடந்த வாரம் ஒரு பெரிய பந்த் நடந்து முடிஞ்சிருக்கு அப்டியே காந்தி ஜெயந்தியும் வந்து போயிடுச்சு. எனக்கு இந்த ரெண்டையும் பார்க்கும்போது இந்த போராட்டங்களால் என்ன வெற்றிகளை அடைஞ்சிருக்கோம்னு தெரியல. காந்தி காலத்துல அவரு உண்ணா விரதம் இருந்தாரு ஆங்கிலேயர்களை விரட்ட. ஆனா அதுல பொது மக்களுக்கு ஒரு சின்ன இடைஞ்சல் வந்தாலும் உடனே போராட்டத்த கைவிட்டுடுவாரு. அதுவும் போராட்டம்தான், இப்பவும் நடத்தறாங்களே தலைவர் போராட்டம் அறிவிக்கறதுக்கு முன்னாடியே பொது மக்கள் சொத்துக்கு கேடு விளைவிக்கனும்னு தெளிவா இருக்காங்க.
பஞ்சாலை நகரம் (Cotton City) தென்னிந்தியாவின் மான்செஸ்டர் அப்டினு பேர் வாங்குன ஊர் எங்க கோயமுத்தூர். ஏன் இந்த பேர்னா இங்க இருக்கற அளவு பஞ்சாலைகள் (cotton Manufacturing Mills) தென்னிந்தியாவுல வேற எங்கயும் கிடையாது. இங்க எப்டியும் வீட்டுக்கு ஒருத்தர் பஞ்சாலை தொழிலாளர் இருந்திருப்பாங்க. ஆனா இப்ப நிலைமை சுத்தமா மாறி போச்சு. பஞ்சாலை எல்லாத்தையும் மூடிட்டு காம்ளக்ஸ், ரியல் எஸ்டேட் அப்டினு மாத்திட்டாங்க. காரணம் ஸ்‍ரைக், ஏன் பண்ணறோம்? எதுக்கு பண்ணறோம்? னு யோசிக்காம மக்கள் பண்றத பாத்து பயந்துபோயி மில் மொதலாளிகள் மூடிட்டு போயிடறாங்க. உதாரணமா ஒரு நிரந்திர தொழிலாளி ஒரு நாளைக்கு 120 ரூபாய் முதல் 170 வரை சம்பாதிப்பவர் இந்த பெரிய ஆலை மூடப்படும்போது சிறு சிறு வேஸ்ட் காட்டன் யூனிட் என அழைக்கப்படும் சின்ன சின்ன தொழிற்சாலைகளில் வே‍லை செய்ய நேர்கிறது அவர்களுக்கு அங்கு கிடைக்கும் கூலி ஒரு நாளைக்கு 40 முதல் 70 வரை மட்டுமே. இது மட்டும் அல்ல அங்கு போனஸ் மருத்துவ செலவு எதுவும் கொடுக்கப்படுவதில்லை காலம் முழுவதும் அவர்கள் தற்காலிக பணியாளர்களாக மட்டுமே இருக்க முடியும். ஆனாலும் பெரிய ஆலைகளில் போனஸ் பேச்சு வார்த்தையில் சற்று தோல்வி ஏற்பட்டாலும் உடனே ஸ்ரைக் செய்து மில்லை மூடிவிட்டு சிறு தொழில்சாலைக்கு தற்காலிகமாக செல்கிறார்கள். இதனால் நஷ்டம் கட்டாயம் தொழிலாளர்களுக்குதான் அதை அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.
அதே போல ப்ரிக்கால் ஒரு உதாரணம், அங்க கடந்த ஆண்டு போனஸ் மட்டும் 62 சதவீதம் கொடுக்கப்பட்டது. இது தனியார் துறையில் மிக உயர்ந்த அளவு. ஆனால் இந்த ஆண்டு ஐந்து தொழிலாளர்களை மாநிலம் விட்டு மாநிலம் இட மாற்றம் செய்ததை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஸ்ரைக் செய்து கொண்டு அந்த தொழிற்சாலையை மூடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளாரகள். இந்த காலத்தில் ஐடி துறையில் நாடு விட்டு நாடே மாற்றினாலும் ஒருவரும் மூச்சு விடுவதில்லை. :)
இப்படி போராட்டம் செய்து செய்து என்ன சாதித்து இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. அதே போல இனிமேலாவது போராட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அப்படி முன் அனுமதி பெறுபவர் கட்டாயம் கொஞ்சம் பணம் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் சட்டம் வந்தாலாவது திருந்துவார்களோ என்னவோ ?