Monday, July 02, 2007

கோவை இணைய நண்பர்கள் சந்திப்பு - 1

நேற்று (01-07-07) இணைய நண்பர்கள் சந்திப்பு கோவையில் இனிமையாக நடந்து முடிந்தது. ‍நேற்று காலை 10 மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு மாலை 5.30 வரை அடாத மழையிலும் விடாது நடந்தது. இடம் கவுண்டம்பாளையத்தில் உள்ள மஞ்சூர் ராஜா அவர்களின் இல்ல மூன்றாம் தளத்தில் நடந்தது.
இதன் தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என எண்ண வேண்டாம். ஏனெனில் இதில் கலந்து கொண்டவர்கள் வெறும் வலைப்பூ வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல, முத்தமிழ் குழுமத்தில் உள்ளவர்கள் மற்றும் தமிழ்பயணி வலைதளத்தை சேர்ந்தவர்கள் எனவே இதற்கு பெயர் இணைய நண்பர்கள் சந்திப்பு என்று வைத்தோம்.

கலந்து கொண்டவர்கள் 15 பேர் கீ‍ழே பட்டியலில் உள்ளவர்கள்.

1. கமல்ராஜா

2. உமேஷ்

3. வின்சென்ட்

4. K.P.குப்புசாமி

5. காசி (தமிமணம்)

6. பாண்டியன்

7. வி.கனகராஜ்

8. ஓசை செல்லா

9. தியாகு

10. செந்தில்குமார்

11. யுவராஜ் சம்பத்

12. நம்பிக்கை பாண்டியன்

13. தமிழ்பயணி சிவா

14. மஞ்சூர் ராஜா

இவங்ககூட நானும் கலந்துகிட்டேன் :)


சரி இன்னும் என்ன பேசுனோம் அப்புறம் புகைப்படங்கள் எல்லாம் அடுத்த பதிவுல பாக்கலாம். இப்போதைக்கு கொஞ்சம் ஆணி புடுங்கனும் வர்ட்டா :)

3 comments:

Butterflies said...

apologies for not typing in tamil!

Anusuya keep rocking!Looking forward to more info on yr meet!

Dr.Srishiv said...

அருமை, முழுவிவரங்கள் புகைப்படங்களோடு எதிர்பார்க்கின்றோம்
ஸ்ரீஷிவ்..

Anonymous said...

வணக்கம் அனுசயா,
ஓஸ்லோவில் இருந்து. ஓசை அமைப்பின் நண்பன். ஓசை உங்களுக்கு தெரிந்திருந்ததில் மகிழ்ச்சி. நிறைய ஆனைமலை, நீலகிரி, மலவாழ் மக்கள் நொய்யல், பவானி என்று இYஅற்ற்கைய தேடி எழுதுங்கள். அன்புடன் வ.ஐ.ச.ஜெயபாலன் visjayapalan@gmail.com