Thursday, June 28, 2007
Sunday, June 24, 2007
இணைய நண்பரகள் சந்திப்பு, கோவையில்
அன்பின் நண்பர்களுக்கு வரும் ஜீலை 1 (ஒன்றாம்) தேதி ஞாயிறுகாலை 10.00 மணியளவில் கோவையில் இணைய நண்பர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைத்து நண்பர்களையும் வருக, வருக என இனிதே வரவேற்கிறேம்.
விழா குறித்து சில கேள்வியும் & பதிலும்...
முதலில் இது எதற்க்கு? அவசியம் என்ன?
குழுமங்கள் மற்றும் பல இணைய நண்பர்களின் நீண்ட நாள் சந்திப்புதிட்டம் செயலுக்கு வந்துள்ளது.
யார், யார் கலந்துக்க?
நீங்கள் வலைபதிவராகதான் இருக்கனும் என்று அவசியமில்லை, குழுமங்களில் கலக்குபவராக இருக்கலாம், மன்றங்களில் வெழுத்துக் கட்டுபவர்களாக இருக்கலாம், இணைய தளங்களில் ஊக்கத்துடன் பணியாற்றுபவர்களாக இருக்கலாம். அட அவ்வளவு ஏனுங்க சும்மா நடப்பதை எல்லாம்வேடிக்கை பார்ப்பவராக இருக்கலாம். இணையம் மற்றும் தமிழ் இவ்விரண்டேநம்மை இணைப்பதாக இருக்கும்.
எதைப் பற்றி பேச?
பல்வேறு தலைப்புகள் குறித்தும் பேசலாம். விரைவில் தலைப்புகள்பட்டியலிட படும்.
அட இன்னமும் கிளம்பலையா...?
சரி சரி நீங்க கேட்பது புரியுது யாரை தொடர்புக் கொள்ளனும் என்பது தானே உங்க கேள்வி...
முத்தமிழ் மஞ்சூர் ராசா - 9443854163
தமிழ்பயணி சிவா - 9894790836
மின்னஞ்சல் முகவரி - vanusuya@gmail.com
வருகை தருபவர்கள் தவறாது முன்னதாக தொடர்புக் கொண்டால் தேவையான வசதிகள் செய்ய உதவியாக இருக்கும்.
இணைய நண்பர்களின் சந்திப்பு, கோவையில்....
வருவதாக உறுதியளித்துள்ளவர்கள் பெயர் பட்டியல்...
சிறப்பு விருந்தினராக தமிழ்மணம் நிறுவனர் திரு.காசிலிங்கம் அவர்கள் |
1.முத்தமிழ் மஞ்சூர் ராசா
2.தமிழ்பயணி சிவா
3.திருப்பூர் தியாகு
4.அனுசுயா
5.ஆசாம் சிவா
6.கபீரன்பர் உமேசு
7.புதுகை பாண்டியன்
8.நாமக்கல் சிபி
9.ஜேகே
10.விஜய்
11.கமல்
12.ஆனந்த்
நீங்களும் உங்கள் வருகையை இங்கே பின்னூட்டமிடுவதன்
மூலம் உறுதி செய்யுங்கள்....
Monday, June 18, 2007
சிவாஜி படம் அனுவின் பார்வை
என் கல்லூரி நண்பனோட கல்யாணத்துக்கு போயிட்டு வரும்போது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து போயே ஆகனும்னு அடம்பிடிச்சு கூட்டிட்டு போயிட்டாங்க. இதுக்கு டிக்கட் விலை வேற ரொம்ப அதிகம் (ரொம்ப டூ மச் :( )
சரி சொந்த நொந்த கதை அப்புறம் படத்த பத்திய என் கருத்துக்கள் கீழே
ஞாபகம் வருதே ஞபாகம் வருதே
1. எத்தன நாளைக்கு ஒரு தனி மனிதன் ஆறு மாசத்துல நாட்ட திருத்துவான்னு படம் எடுப்பீங்க.? லஞ்சம் கேட்கற அதிகாரிங்ககிட்ட ஏன் நான் லஞ்சம் தரனும் எதுக்கு நான் தரனும்னு அதே கேள்விகள். (இந்தியன் படம் ஞாபகம் வருதே)
2.அப்புறம் திருடுன பணத்த பழைய பேப்பர் கூட ஒழிச்சு வெக்கிறது (ஜென்டில்மேன் படம் ஞாபகம் வருதே)
3. பாடல் காட்சிகள் குறிப்பா சகானா பட காட்சி அமைப்புகள் (ஜீன்ஸ் படம் ஞாபகம் வருதே)
4. அதே போல ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் 250கோடி சம்பாதிக்க எவ்வளவு வருசம் பாடுபடனும் அதே மாதிரி படிச்சு முடிக்கவே 25 வருசம் போயிடும் அப்டீனா அவரோட வயசு என்ன அந்த வயசுல காதல் பண்ணி கல்யாணம் பண்ணி இப்டி லாஜிக் ரொம்ப இடிக்குதே? (லாஜிக் பார்த்தா சினிமாவே பாக்க முடியாதுனு என் ப்ரெண்ட் சொன்னா அது கரெக்ட்தானுங்க :) )
சிறப்பு அம்சம்
1. நல்ல நகைச்சுவை காட்சிகள் பரவாயில்ல வாய்விட்டு சிரிக்க வெக்கறாங்க சில இடங்கள்ள.
2. ரஜினி நடிப்பு பரவாயில்ல நல்லாயிருக்கு.
3. இசை சிறப்பாயிருக்கு ஆனா பாடல் வரிகள் புரியற மாதிரி அமைச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
இதெல்லாம் என்னோட சின்ன அறிவுக்கு எட்டுன விசயங்கள். எனக்கு இருக்கற சின்ன மூளைக்கு இவ்ளோதான் யோசிக்க முடிஞ்சுது. என் கேள்வி ஒன்னே ஒன்னுதான் கடைசியா, இவ்ளோ செலவு பண்ணி இவ்ளோ பெரிய பெரிய ஆளுங்க எல்லாருமா சேர்ந்து இந்த படம்தான் எடுக்க முடிஞ்சுதா? கொஞ்சம் யோசிக்க வேண்டிய விசயம். :)
Monday, June 04, 2007
இது வெறும் விளம்பர பதிவு :)
அதுபோக ரெண்டு வாரம் முன்ன நம்ம பாலா அண்ணாச்சி மற்றும் ரவி, செல்லா தலைமைல வெற்றிகரமா ப்ளாக்கர் மீட் முடிஞ்சிருக்கு. உண்மையா பாராட்ட வேண்டிய விசயம். எனக்கு வேற சில சொந்த வேலை இருந்ததால போக முடியல. அடிச்சு பிடிச்சு போய் ரவியையும் வனஜ்ராஜாவையும் சந்திச்சேன். இதுல நம்ம பாலா அண்ணாச்சிக்கு போன் பண்ணா திட்டுவாருனு பயந்து போன் பண்ணல அதனால அவரு மனம் வருத்தமடைஞ்சு பதிவெல்லாம் போட்டாரு. (சாரிங்க :( ).

ஒரு மனுசி வேலை நல்லா பண்றானா அதுக்காக இப்டியா திரும்ப திரும்ப ஆணிய குடுத்து உக்கார வைக்கிறது முடியலப்பா சாமி. ஒரு ப்ளாக் எழுத முடியல ப்ளாக்ல போட்ட கமெண்ட்டுக்கு பதில் போட முடியல என்ன கொடுமை இது சாமி (டயலாக் மாத்திட்டேன் :)). இந்த நேரத்தில நம்ம நண்பர்கள் எல்லாரும் மெயில் அனுப்பி கேட்கிறாங்க. நீங்க ப்ளாக் எழுதறத நிறுத்திட்டீங்களானு? (உள்ளுக்குள்ள அவங்களுக்கெல்லாம் சின்ன சந்தோசம்). இல்லீங்க நான் இன்னும் உங்களையெல்லாம் சுலபமா விட்டுற மாட்டேன். வந்துட்டேயிக்கேனுங்க. :)
Saturday, April 21, 2007
தமிழ்நாடு தேசிய மலர்

Wednesday, April 18, 2007
அழகே அழகே
1. மலர்கள்
2. இயற்கை
அழகுங்கறது என்ன பொருத்தவரைக்கும் மனதுக்கு உற்சாகம் தரக்கூடியதா இருக்கனும் அப்டி பார்த்தா இயற்கைய விட்டா சிறந்த அழகு எதுவும் இல்லை. மலைகள், பச்சை பசும் புல் வெளிகள், பனிவிழும் காலை நேரம், பறவைகள், பூக்கள் இப்டி சொல்லிகிட்டே போகலாம். இயற்கையில எல்லாமே அழகுதான்.
3. புன்னகை
மனுசனோட முகம் எப்டியிருந்தாலும் சரி புன்னகை செய்யும்போது அழகா ஆயிடுவாங்க அது புன்னகையின் சிறப்பு. எவ்ளோ அழகான முகமாயிருந்தாலும் புன்னகையில்லாம உம்முனு இருந்தா அழகு கெட்டு போயிடுது. ஒரு சின்ன புன்னகை மிக அழகா மாத்திடும். எனக்கு புன்னகை செய்யற முகம் எல்லாம் அழகுதான் :)
4. கருணை முகம்
பொதுவா எல்லாருக்கும் அவங்கஅவங்க அம்மாதான் முதல் அழகி. அவங்க எப்டியிருந்தாலும் அவங்க முகம் மடடும்தான் அழகா தெரியும் எல்லா குழந்தைகளுக்கும் அதுக்கு ஒரே காரணம் அன்புதான். எவ்ளோ முகங்களை பார்த்தாலும் அவங்க அம்மா முகம் மட்டும் அழக தெரிய காரணம் அவங்களோட தூய்மையான அன்புதான். அன்னை தெரசா எல்லாருக்கும் அழகா தெரிய காரணமும் அன்பு கருணைதான். நம்மிடம் அன்பா இருக்கற எல்லாரோட முகமும் அவங்கவங்களுக்கு அழகுதான்.
5. குழந்தைகள்.
எந்த நிறம் சாதி உயரம் எடை எப்டியிருந்தாலும் எல்லா குழந்தைகளும் அழகுதான். அவங்க சிரிப்பு அழுகை எல்லாமே அழகுதான்.
அப்பாடி எப்டியோ தேவ் எழுத சொன்னத எழுதிட்டேன்.
நான் கூப்பிடறவங்க...
கொங்கு ராசா
இளா.
இராகவன்
Wednesday, April 11, 2007
சுட்டும் விழிச் சுடரே...
1.இக்காலகட்டத்தில், பணிபுரியும் மங்கையருக்கு உண்டாகும், அல்லது பிறரால் உருவாக்கப்படும் சரவல்கள் எத்தன்மையது? அவைகளால் ஏற்படும் மனத் தாக்கத்தைப்போக்க அல்ல எதிர்கொள்ள எடுக்கவேண்டிய செயல்கள் என்ன?
முதலில் சரவல்கள் என்றால் சரியாக விளங்கவில்லை எனினும் இடையூறுகள் எனக்கொண்டு நான் பதில் கூறுகிறேன். பொதுவாக தற்காலத்தில் பணிபுரியும் மங்கையர்கள் மட்டும் அல்ல, அந்த காலத்தில் இருந்து பெண் வெளியே செல்லும் போது பலப்பல இடையூறுகளை சந்தித்துதான் வருகிறாள். ஆனால் இக்காலகட்டத்தில் சற்று குறைந்துள்ளது என்பது எனது கருத்து. ஆனால் இந்த சரவல்களை சமாளிக்க முதலில் பெண்களுக்குள்ளே ஒற்றுமை வேண்டும். அது கொஞ்சம் குறைவாகவே உள்ளது என்பது என் கருத்து. குறிப்பாக படிக்காத பெண்களிடம் இருக்கும் ஒற்றுமை கூட படித்த பெண்களிடம் இருப்பதில்லை.
பிரச்சினைகள் அற்ற மனிதர்கள் தான் யார் உள்ளனர். பெண்களுக்கு வரும் பிரச்சினைகள் மட்டும் பிரச்சினையா உடல் ஊனமுற்ற நண்பர்களுக்கு வருவதை காணும் போது பெண்கள் பிரச்சினை எனப்படும் வாய்க் கேலி போன்றவை சற்று தாக்கம் குறைவாகவே இருக்கும்.நமது பிரச்சினையை பிறரிடம் தொடர்ந்து சொல்லுவதால் புலம்பல்வாதி (புலம்பல் கேசு) என்ற பெயர்தான் கிடைக்கும். முடிந்த அளவு ஒரு பிரச்சினைக்கு தீர்வை கண்டறிதல்தான் அவசியம். சரவல்களை விளக்கி பலருக்கும் சொல்லுவதால் முன்னேற்றம் ஏதும் கிடையாதே.
இணைய அனுபவம் என்னை பொறுத்த வரையில் மசாலா கலவை போல எல்லா சுவையும் கலந்தே இருக்கிறது. ஆனால் நிறைய நல்ல நண்பர்களை அறிமுகம் செய்தது இந்த இணையம்தான். மேலும் சில எதிர்கருத்துக்களை அறிய உதவியதும் இணையம்தான் சில விசயங்களில் இப்படி கூட யோசிக்க முடியுமா என வியக்கவும் வைத்துள்ளது.
சாதி, சமய, ஆத்திக, நாத்திக விவாதங்கள் இன்று இந்த இணையத்தில் மட்டும் நடக்கும் நிகழ்வு அல்லவே. இது தொன்று தொட்டு பல பெயர்களில் நடைபெற்றுள்ளது. சைவ, வைணவ சண்டை, பகுத்தறிவு பற்றிய சர்ச்சை, மத சண்டை, பெண்ணுரிமை இப்படி பல தலைப்புகளில் விவாதங்கள் பழங்காலத்தில் இருந்து நடந்து கொண்டே உள்ளது. இதனால் எந்த பயனும் ஏற்பட்டதாக காணோம். வெறும் அரசியலுக்கும் புகழ் பெறவும் மட்டுமே உதவுகிறது என்பது என் கருத்து. என்னதான் விவாதங்கள் நடத்தினாலும் இன்னும் தெய்வ வழிபாடு செய்பவர்களும் தெய்வத்தை எதிர்பவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள். இந்த விவாதம் அவர்களுக்கு உதவாது சொந்த அனுபவம், வாழ்க்கை சூழ்நிலை மட்டுமே இதை தீர்மானிக்கிறது.
இந்த விவாதங்களால் மன அமைதி பாதிப்படைகிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். சில விவாதங்களை பார்க்கும்போது அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களோ என எண்ணத் தோன்றுகிறது. விவாதிப்பவர்கள் ஒரு விசயத்தை மனதில் கொள்ள வேண்டும். நாம் கூறும் கருத்துக்கு கட்டாயம் ஒரு மாற்றுக் கருத்து உண்டு என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதை விடுத்து நாம் சொல்லும் கருத்து மட்டும் மிகச்சிறந்தது இதை விட வேறு இல்லை என எண்ணக்கூடாது.
"கற்றது கைம்மண் அளவு.. கல்லாதது உலகளவு"
இந்த கால இளைஞர்களிடம் தமிழ் நன்றாகவே வளர்ந்து வருகிறது என்பது என் கருத்து. தினம் தோன்றும் தமிழ் வலைப்பூக்களை பார்த்தாலே தெரிகிறது. மேலும் இந்த இளைய தலைமுறையினர் யாரும் தமிழ் வாழ்க என கோஷம் போட்டு அதை செயல் படுத்துவதில்லை அமைதியாக தங்களின் கருத்துக்களை கணிணியில் தட்டிவிட்டு இருந்து விடுகிறார்கள். வீதியில் வந்து போராட்டம் நடத்த தயாராக இல்லை. படிக்கும்வரை எப்படியோ ஆனால் படித்து வேலையில் அமர்ந்த பின்பு தங்களின் தாய்மொழி மீதான பற்று அதிகப்படுவதாகவே தோன்றுகிறது.
"காய்த்த மரமே கல்லடி படும்"
4.மங்கையரின் சுதந்திரம் பற்றித் தங்களின் கருத்துக்களை விரிவாக எழுதவும்.
மங்கையரின் சுதந்திரம் பற்றி என் கருத்து மங்கையர்க்கு தேவையான அளவு சுதந்திரம் இருக்கிறது. இதை பயன்படுத்தி முன்னேற வேண்டியது பெண்களின் வேலைதான். இந்தியஅரசின் அரசியல் அமைப்பில் இருந்து நடைமுறை வாழ்க்கை வரை பெண்ணுக்கு படிப்பு, உடை, பொருளாதாரம், வேலை வாய்ப்பு, கருத்து என அனைத்திலும் முழு சுதந்திரம் இருந்து கொண்டுதான் உள்ளது. அதை பயன்படுத்தி முன்னேற வழி பார்க்க வேண்டும் அதை விடுத்து பெண்ணுரிமை சுதந்திரம் என பேசிக்கொண்டே இருப்பது அநாவசியம். சுதந்திரம் அதிகம் உள்ள மேற்கத்திய நாடுகளில் கூட பெண் அதிபர்களோ அதிகபட்சம் பெண்கள் அரசியலில் சாதித்ததோ இல்லை ஆனால் இந்தியாவில் மட்டுமே பெண்கள் அரசியலில் கூட அதிக அளவில் சாதித்துள்ளார்கள்.
"மாதா பிதா குரு தெய்வம் "
அவருக்கு வைக்க ஆசைப்படும் ஆப்புகள்..
1. சில வருடங்களாக ஏறுமுகத்தில் இருந்த வளாகத்தேர்வுகள் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. இந்த போக்கின் எதிர்காலம் என்ன?
Saturday, March 31, 2007
காந்தாரக் கலை

புத்தரின் சிலை

புத்தர் பெருமான் தனது சீடர்களுடன் கையில்
கப்பறை எனும் உணவுஏற்க்கும் பாத்திரத்துடன் அமர்ந்துள்ளார். மேலாடையும், சிகையும் சுருள் வடிவம்பெற்றதே காந்தாரக் கலை எனப்படும். இனி வருவது நம் தாய்குலங்களுக்காக. அவர்கள் ஆதரவு இன்றி எந்தநாகரீகமும் வளராதே. இன்னமும் சொல்ல போனால் அவர்கள் தான் நாகரீகஅளவுக்கோல் ஆவர்கள்.

தங்க காதணிகள்.
அடுத்து வருவது... புத்தப் பெருமான் அழகிய உருவம்
புத்தரின் தியான முத்திரை
புத்தரின் முகம்
தாமரை மலர் ஏந்திய புத்தர் கரம்
புத்தப் பெருமானின் அழகிய உருவச் சிலை.
இவ்வளவு அன்பு, அஹிம்சை என்று போதித்தும் காந்தாரகலை எனும் அழகிய ஒரு கலையால் அமைக்கப் பட்ட ஒரு படைப்புக்குநம் மனித இன நவநாகரீக வளர்ச்சியில் ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா... ஆம். இரத்தக் கண்ணீர் விட வேண்டிய படம்தான் கலங்கிய மனதுடன்...
தீவிரவாதிகளால் அழிக்கப் பட்ட பாமியான் குன்றுச் சிலை. இடது புறம்(முதல் பாகம்) சிலை உள்ளது. முன்புறம் ஒரு மனிதன் நின்றுக் கொண்டு உள்ளான் பாருங்கள். மனிதனை விட எவ்வளவுஉயரம் அப்பப்பா. வலது புறம் (இரண்டாம் பாகம்) ஏவுகணை மற்றும்பீரங்கி தாக்குதலால் அழிக்கப் பட்டு விட்டு காலியாகி விட்ட இடம்.இங்கும் முன்புறம் பல மனிதர்கள் நின்று கொண்டு உள்ளார். இனிவரும் நாட்களிலாவது கருணையும், சகிப்பு தன்மையும்உலகெங்கும் பரவட்டும். புத்தம் தர்மம் கச்சாமி...!!! சங்கம் தர்மம் கச்சாமி...!!!
Friday, March 30, 2007
கோடையும் குளுமையும்
அட அதுக்காக என்ன செய்யலாம் தர்பூசிணி போன்ற பழங்களை நாடலாம்.ஆனாலும் வயிறு நிறைந்த பிறகு அதிகம் சாப்பிட இயலாதே... ஆதனால் கண்நிறைய குளு குளு வென பார்த்து இரசிக்கலாம் அல்லவா இந்த மாதிரியான ஒளிப் படங்களை...





மேட் இன் ஜப்பான் மோகம் கொஞ்ச நாள் முன்னர் வரை நம்ம ஊருலேஇருந்ததில்லே அதனால் இந்த அருவி படத்தை சப்பானிய நாட்டில் இருந்து சுட்டது. ஊரு பேரு டக்கசிக்கோ-க்யோ (Takachiho-Kyo Gorge).
Thursday, March 29, 2007
சிரிக்கலாம் வாங்க...
Thursday, March 08, 2007
மகளிர் தினம்
Sunday, February 11, 2007
இணையாத பாலம்
"இணையாத பாலம் இருந்தென்ன லாபம்"
இந்த ஸ்லோகன்தான் இப்ப கோவையில் அதிகமா பேசப்படும் வார்த்தைகள். கோவை கிழக்கு தொகுதியை சேர்ந்த ஒண்டிப்புதூர் அப்டீங்கற ஊர்ல ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி ரயில்வே மேம்பாலம் கட்ட ஆரம்பிச்சாங்க. ஆரம்பிச்சப்ப ஒரே ஜோராதான் இருந்தது. அந்த ரோடு திருச்சி ரோடு அதிகமான அளவு போக்குவரத்து உள்ள சாலைதான். அதை அடைத்துவிட்டு ஊருக்கு உட்புறமாக உள்ள சிறிய சாலையில் அதுவும் இரண்டு ரயில்வே லைன்களை கடந்து செல்லும் பாதையை ஒதுக்கினார்கள். சரி ஒரு வருடம்தானே என்ன செய்வது என்று அனைவரும் பொருத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.
பிறகு திடீர் என்று பாலத்தின் நடுவே அதாவது இருப்பு பாதை மேல் கட்ட வேண்டிய பகுதியை மட்டும் அப்படியே விட்டு விட்டார்கள் கேட்டதற்கு அது மத்திய அரசு வேலை என்று விளக்கம் வந்தது. சரினு அதுக்கு ஒரு வருசம் போயிடுச்சு. இப்டியே கட்டி கட்டி கடந்த நான்கு வருட காலமா கட்டியும் இன்னும் இணைய மாட்டேங்குது பாலம். ஸ்பீட் படத்துல கிளைமேக்ஸ்ல வர்ர மாதிரி வண்டியெல்லாம் வேகமா போயி ஹை ஜம்ப் பண்ணிதான் போகனும் போலயிருக்கு.
இதுல மாற்று பாதையில போயிட்டு இருக்குற பேருந்துகள்ல பயணம் செய்யற பயணிகள் எல்லாம் ரொம்ப பாவப்பட்டவங்க. ஏன்னா எப்ப பாரு ரெண்டு ரயில்வே லைன்லயும் ரயில் போயிட்டும் வந்துட்டும் இருக்கும் அதனால அடிக்கடி கேட் போட்டு குறைந்தது முக்கால் மணி நேரமாவது நிறுத்தி வச்சிடுவாங்க. குறிப்பிட்ட நேரத்துக்கு யாராலயும் போக வர முடியாது. இதுல கொடுமை என்னன்னா மழை வந்தா அந்த வழியில ஒரு சின்ன ஓடை உருவாகி தண்ணி போயிட்டேயிருக்கும். அப்பவெல்லாம் இந்த இரு சக்கர வாகனத்துல போறவங்க நிலைமைய நினைச்சாதான் பரிதாபம்.
ஆக மொத்தத்தில ஊர்ல பல பேருக்கு இந்த பாலம் திறக்கலையேனு மிகப்பெரிய வருத்தம் இருக்குது இதுனால பல கோடி பொருளாதார நஷ்டம், எரிபொருள், நேரம் இப்டியே சொல்லிட்டே போகலாம். இதைய எப்ப திறப்பாங்கனு தெரியல ஆனா கடந்த ஒரு மாதமா கொஞ்சம் சுறுசுறுப்பா ரயில்பாதை மேல இருக்கற பகுதிய இணைச்சிட்டு இருக்காங்க.

இவ்வளவு கஷ்டத்துக்கு நடுவிலயும் இப்ப திறப்பாங்க அப்ப திறப்பாங்கனு மக்களும் பொறுமையா நாலு வருசத்த ஓட்டிட்டாங்க. இப்ப அதெல்லாம் பிரச்னையில்ல கோவையில பொதுவா பொழுது போக்கறதுக்கு ஏத்த மாதிரி வசதியா பூங்காக்களோ இல்ல கடற்கரை ஆற்றங்கரை எதுவும் இல்ல. அதனால நம்ம ஊர் மக்கள் எல்லாம் என்ன பண்ணுனாங்க நடை பயிற்சி, உடற் பயிற்சி, மாலையில ஒரு சின்ன வாக்கிங் போக இப்டி எல்லா விதத்திலயும் அந்த பாலத்தைதான் பயன்படுத்திட்டு இருக்காங்க. இந்த பாலத்தை திறந்தா மக்களோட ஒரு பொழுதுது போக்கு இடம் இல்லாம போகப்போகுது. :(
Wednesday, January 03, 2007
கைத்தொ(ல்)லை பேசி
இதெல்லாம் பத்தாதுனு ஆபீஸ்குள்ள டீ சாப்பிட போகலாமா? பிரிண்ட் அவுட் பேப்பர் கொஞ்சம் எடுத்துட்டு வா இப்டினு ஆபீஸ்குள்ளயே மெசேஜ்.
இதெல்லாம் போக இந்த நியூ இயர், நல்ல நாள் கெட்ட நாள் இப்டி எது வந்தாலும் வாழ்த்து செய்தி வேற லிஸ்ட் போட்டு அனுப்பறது. இதெல்லாம் போக போன் பேசறது வேற. அது எப்டிதான் கட்டுபடி ஆகுதுன்னே தெரியல. ஒரு சிலர் மணிக்கணக்கா பேசறாங்க பேசறாங்க பேசிகிட்டே இருக்காங்க. காது என்னத்துக்குதான் ஆகுமோ தெரியல. அதவிட அவ்ளோ நேரம் என்னதான் பேசுவாங்க. எங்கயிருந்துதான் மேட்டர் கிடைக்குதோ தெரியல. இதுல Hands free வேற மாட்டிக்கறாங்க. தூரத்துலயிருந்து பார்த்தா தன்னப்போல பேசற மாதிரியிருக்கு. சில சமயம் என்னடாயிது லூசாப்பா நீனு கேட்கற அளவு இருக்கும்.
ம் ஊருக்கெல்லாம் உபதேசம் பண்ணியாச்சு நாமளும் ஏதாவது இந்த வருசம் உருப்படியா பண்ணலாம்னு நினைச்சு இந்த வருசத்துலயிருந்து இந்த குறுஞ்செய்தி அனுப்பறது தொலை பேசியில பேசறது இதெல்லாம் படிபடியா குறைச்சுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். பார்ப்போம் கொஞ்சமாவது குறையுதானு. :)
Friday, December 29, 2006
முதலாம் பிறந்த நாள்.
பொதுவா இந்த ஆண்டு என்னை பொறுத்த வரைக்கும் வலையுலக ஆண்டுனே சொல்லலாம். அந்த அளவு 2006 வாழ்க்கையில் அதிலும் தமிழ் வலை உலகம் நிறைஞ்சிருக்குது.
இந்த வருட ஆரம்பத்துலதான் வலைப்பூ (Blog) அப்படீனா என்னனே எனக்கு தெரியும். என் சகோதரர் அறிமுகப்படுத்தி வெச்சாரு. அப்ப முதன்முதலா நான் படித்தது நம்ம கொங்கு நாட்டு ராசாவோட வலைத்தளம்தான் அதுக்கு பிறகு ஜிராகவனுடையது அப்புறம் அப்டியே தமிழ்மணம் ஜோதியில நானும் இணைஞ்சுட்டேன்.
நான் பாட்டுக்கு அடுத்தவங்க கட்டுரைய படிச்சுட்டு கமெண்ட் போட்டுட்டு இருந்தேன். திடீர்னு முதன் முதலா நான் இந்தியாவும் உலக அதிசயமும் அப்டீனு ஒரு கட்டுரை எனக்கு தோனுத எழுதுனேன். அதைய தினமலர் பத்திரிக்கையில பிரசுரம் பண்ணினாங்க உடனே எனக்கு ஒரு நினைப்பு அட நாமளும் பெரிய எழுத்தாளர் போல இருக்கு. இனிமே நாமளும் எழுதுவோம்னு கண்டதையும் கிறுக்க ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள் போனவுடனே படம் போட்டு கதை எழுதறது கொஞ்சம் ஈசியா இருந்துச்சு. ஒரு படத்த போட்டு அதுக்கு ஒத்து வரமாதிரி ரெண்டு லைன் எழுத வேண்டியது. இப்டியே கொஞ்ச நாள் ஒப்பேத்துனேன். :)))))
அப்புறம் எனக்கு இந்த பூக்கள் மேல ஒரு பைத்தியம். எங்க பூ படம் பார்த்தாலும் உடனே புடுச்சு போட்டுடுவேன். அப்டியே எழுதி எழுதி கடைசில பூக்கள பத்தி மட்டுமே எழுதற நிலைமைக்கு வந்துட்டேன். கடைசியா கவிதைங்கற பேர்ல ஒரு கிறுக்கல் வேற.
ஆனா போன மாதம் திடீர்னு ஜி.கெளதம் வைச்ச போட்டில ஆறுதல் பரிசு வாங்கி குங்குமத்துல வேற பப்ளிஷ் பண்ணுனாங்க. அது ஒரு சந்தோசம். அப்பப்ப நான் எழுதி அடுத்தவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம்னு நினைக்கும் போது ஏதாவது ஒரு பரிசு கொடுத்து தொடர்ந்து எழுத வைச்சிடுறாங்க. பாவம் படிக்கறவங்க.
இந்த வலையுலகத்தை பொருத்த வரைக்கும் நான் ஒரு வருடக்குழந்தை. ஆனா இந்த ஒரு வருடத்துல கற்றதும் பெற்றதும் நிறைய நிறைய.
நிறைய நிறைய நண்பர்கள். நிறைய விதவிதமான மக்களை பற்றிய அறிமுகம். இந்த உலகத்தை சுருக்கி சின்னதாக்கிடுச்சு இந்த வலையுலகம். ஒரே விசயத்தை மத்தவங்க எவ்வளவு விதமா நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க முடிஞ்சுது.
இனிவரும் அடுத்த ஆண்டிலாவது ஏதாவது உருப்படியா எழுதலாம்னு நினைக்கிறேன். :))
Wednesday, November 22, 2006
மழை....

எட்டிப்பிடிக்க முடியாத ஆகாயத்திற்கும்
எட்டநிற்கும் மண்ணிற்கும்
இடையில் ஒரு பிணைப்பினை
ஏற்படுத்தும் நீ கூட ஒரு அஞ்சலகம்தான்
கார்மேகமாய் காட்சி தந்து
நீ வரும் முன்னே இப்பூமிக்கு
உன் வாசத்தைக் கொடுத்து
இம்மண்ணிற்கு வளம் கொடுக்கும்
நீ கூட ஒருதாய் தான்.
உன்னில் நனைந்து என்னைத்
தேற்றி இயற்கை வியந்து என்
சோகத்தை மறப்பதால்
ஆம்! உன்னை நேசிக்கிறேன்.
நீ கூட எனக்கு ஒரு
எட்டாம் அதிசயம்தான்!
எட்டும் அதிசயம் கூட.!
Thursday, November 16, 2006
இலவசம் .....

வேணும் எனக்கு நல்லா வேணும் அப்பவே சொன்னாங்க கேட்டனா இலவசமா தர்ராங்கன்னு எல்லாத்துலயும் மெயில் அக்கவுண்ட் ஓபன் பண்ணினேனே. இப்ப தினமும் வந்த மெயில செக் பண்ணவே பாதி நேரம் சரியா போயிடுது.
Wednesday, October 18, 2006
லாவண்டர்

கடந்த வாரம் திரு.கோபாலன் அவர்கள் லாவண்டர் பூ படம் எடுத்து அனுப்பியிருந்தார். சரி இந்த பூ பத்தி எதாவது தெரியுமானு கேட்டா ஒன்னுமே தெரியாது அங்க போனா கும்முனு வாசம் வரும் நிறைய தேனீக்கள் இருக்கும்னு மட்டும் சொல்லிட்டாரு.
லாவண்டர்னா பாய்ஸ் படத்துல ஷங்கர் காட்டுனதுதான் எனக்கு ஞாபகம் வருது. நானா வலைல தேடுனப்ப நிறைய விஷயம் தெரிஞ்சது. எனக்கு தெரிஞ்சத இங்க எழுதியிருக்கேன்.
லாவண்டர்னா கத்திரிபூ கலர்ல மட்டும்தான் இருக்கும்னு நினைச்சிட்டுயிருந்தேன். ஆனா

லாவண்டர்ல மட்டும் சுமார் 20 -30 வகையிருக்குது. அதுவும் பல நிறங்கள் இருக்கு. இங்க நீங்க பாக்கறது மஞ்சள் லாவண்டர் பூ.
லாவண்டர் பொதுவா சூரிய ஒளி அதிகம் விரும்பும் மலர். அதோட தாய்நாடு பிரான்ஸ்தான். ஆனா இப்ப பெரிய லாவண்டர் தோட்டம் ஆஸ்திரேலியாவுல டாஸ்மேனியாங்கற

இடத்துலயிருக்குது. இது குத்து செடி மட்டும் இல்ல சில வகையான பூ செடிகள் பல அடி உயரம் கூட வளருதாம்.
லாவண்டர் வெறும் வாசனைக்கு மட்டும் பயன்படுத்தறது இல்ல மருத்துவத்துக்கும் பயன்படுத்தறாங்க. இந்த லாவண்டர் பூச்சி கடி பூச்சிகள் வராமயிருக்கவும் பயன்படுத்தறாங்க. அதுபோக தலைவலி தைலம் தயாரிக்கவும் பயன்படுத்தறாங்க.

லாவண்டர் பூ தெய்வ வழிபாட்டுக்கும் பயன்படுத்தறாங்களாம். இந்த பூ பூக்கும் காலம் நவம்பர் டிசம்பர் தான். கிட்டதட்ட நம்ம ஊர் துளசி மாதிரி. ஏதோ எனக்கு நெட்டுல கிடைச்ச விசயங்கள எழுதியிருக்கேன்.
Tuesday, September 26, 2006
கிளி பூ





மேலயிருக்கறதெல்லாம் வலையுலக நண்பர் அனுப்புன படங்கள். இந்த பூ அப்பிடியே கிளி மாதிரியிருக்கு, இது தாய்லாந்து நாட்டுல இருக்கறதா தெரியுது. இது போக வேற எந்த தகவலும் இந்த பூ பத்தி தெரியலீங்க. பூ படத்த பாத்தவுடன எனக்கும் வலையேத்தனும்னு ஆசை வந்து போட்டாச்சு.
அப்புறம் நானும் பெரிய வலைப்பதிவர் ஆயிட்டனுங்க. எப்டினு கேட்கறீங்களா? நமக்கும் போலி பின்னூட்டம் வர ஆரம்பிச்சுடுச்சே. என் நண்பர்கிட்ட பேசும்போது இப்டி போலி பின்னூட்டம் வந்திருக்குனு சொன்னதுக்கு அவரு அட பரவாயில்ல நீயும் பெரிய வலைபதிவர் ஆயிட்டனு சொல்றாரு. ஏதோ பூ, மரம், செடி படம் போட்டு ரெண்டு வரி எழுதிட்டு இருக்கற நமக்கு எதுக்குங்க இந்த விளம்பரம். :(
Friday, September 22, 2006
புத்தகங்கள் ... ... ...

One book that changed my life
இதுவரை படிச்சதுல வாழ்க்கைய மாத்தக்கூடிய அளவு எதுவும் படிக்கல. ஆனா, ஏதாவது பிரச்னைனா நெனச்சு பார்க்கிற அளவு ஞாபகம் இருக்கறது சில புத்தகங்கள். அதுல பட்டாம்பூச்சினு ஒரு புத்தகம் (Bapillon in english) ஆசிரியர் ஹென்றி ஷாரியர் எழுதுனது சுதந்திரமான வாழ்க்கைக்காக எவ்வளவு கஷ்டம் வேணாபடலாம்னு எழுதியிருப்பாரு.
அப்புறம் ஏழைபடும் பாடு, மோபிடிக் இதெல்லாம் ரொம்ப பிடிச்சது.
The book you have read more than once
பொன்னியின் செல்வன் 5 தடவைக்கு மேல படிச்சாச்சு ஆனா திரும்ப படிக்கற ஆசை இன்னும் இருக்கு. சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு 3 தடவை படிச்சிருக்கேன்.
One book you would want on dessert island
ஜெயமோகனோட விஷ்ணுபுரம் ஆளில்லாத தனி தீவிலயாவது வேற வழியில்லாம படிப்பேன்னு நினைக்கிறேன் :).
One book that made you laugh
எல்லா ஜென் கதைகளும் பிடிக்கும் படிச்சா மனச கொஞ்சம் லேசாக்கி சந்தோசத்த தரும் புத்தகங்கள்.
one book that made me cry
வேதியியல் பாட புத்தகங்கள் எப்ப படிச்சாலும் அழ வைக்க கூடியது அதுதான்.
One book you wish you had written
குழந்தைகளுக்கான சிறுகதை புத்தகம் எழுதனும்னு ஆசை.
One book that you wish had never been written
தெரியல
One book you are currently reading
இப்ப கைவசம் படிச்சிட்டு இருக்கறது ஊர்மண் ஆசிரியர் மேலாண்மை பொன்னுசாமி எழுதியிருக்கறார். அதுபோக வழக்கமான விகடன், இந்தியாடுடே, காமிக்ஸ் எல்லாம் படிச்சிட்டு
இருக்கறேன்.
One book you have been meaning to read
படிக்க விரும்பற புத்தகங்கள் நிறைய இருக்கு. கற்றது கை மண் அளவுதானுங்க..
இந்த புத்தகம் படிக்கற பழக்கம் சின்ன வயசுலயிருந்து இருக்கறதால நிறைய விசயம் தெரிஞ்சிக்கறதவிட கல்லூரியில பெரிய பெரிய புத்தகங்களை பாத்து பயப்படாம இருக்க முடிஞ்சுது. (முக்கியமா புக் படிக்கும்போது தூங்காமயாவது இருக்க முடிஞ்சுது :) )
அப்புறம் நான் மாட்டிவிட நினைக்கிறது சந்திர S சேகரன்.
Wednesday, September 20, 2006
மீண்டும்....

போன மாசம் புல்லா எங்க ஊர்க்காரர் அதாங்க சூர்யாவுக்கு கல்யாணங்கறதால ஒரே பிஸி அதனால பதிவு எதுவும் போட முடியல. ( ஓகே ஓகே இப்ப நான் எழுதலைனு யாரு கவலைப்பட்டாங்கன்னு கேக்கறது தெரியுது) இருந்தாலும் எல்லாருக்கும் சொல்றது என்னன்னா இனிமேல தொடர்ந்து எழுதுவனுங்க. இது சும்மா ஒரு அட்டெண்டன்ஸ் பதிவு அவ்வளவுதான். :)))))