உதாரணத்துக்கு சில..
Wednesday, September 17, 2014
நான் வளர்கிறேனே மம்மி
உதாரணத்துக்கு சில..
Thursday, February 21, 2013
ஜான்சிபார் - 4
திரும்ப வரும்போது மறுபடியும் எங்க வீட்டு காரர்தான் கார் ஓட்டுவேனு ஓட்டிகிட்டு வந்தாரு. அப்ப மெயின் ரோடு வந்தவுடன் அவன் நான் ஓட்டறேன். போலீஸ் பார்த்த பிரச்னைனு வாங்கிட்டான். அப்புறம் ஒரு சிக்னல்ல போலீஸ் காரன் வண்டிய ஓரம் கட்ட சொல்லிட்டான். என்னனு பார்த்தா நான் முன்னாடிதான் உக்கார்ந்து இருந்தேன். ஆனா சீட் பெல்ட் போடவே இல்ல. அதான் பிடிச்சுட்டானு நினைச்சு கிட்டோம். டிரைவர் எதுக்கும் 1000 சில்லிங் குடுங்கனு சொல்லி வாங்கி வெச்சுகிட்டான். அப்புறம் என்ன வழக்கம்போல இந்தியா மாதிரி அவரு விரல கார்குள்ள விட்டு பணத்த வாங்கிட்டு போலாம்னுட்டாரு. எல்லா ஊரு போலீசும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.
Thursday, February 07, 2013
ஜான்சிபார் -3
ஆமைனா ஒவ்வொன்னும் அம்மாடி ரொம்ப பெரிசு. அப்ப நிறைய ஆமைகளுக்கு வயசு 160 வருசம் ஆயிருக்கு.
இதெல்லாம் முடிச்சிட்டு திரும்பலாம்னு நினைக்கும்போது ஒரு ஆமை மட்டும் தனியா இருந்துச்சு பாவம் அதுக்கு யாருமே கீரை தரல சரி பாவம் நாம மட்டுமாவது தரலாம்னு உள்ள இறங்கி போயி குடுத்தேன். அதுக்கு பாவம் பசிபோல கட கடனு கீரைய கடிச்சுகிட்டே வந்துச்சு அப்ப என்ன ஆச்சு கீரை தண்ட கடிக்கறதா நினைச்சு என் மோதிர விரல கடிச்சுடுச்சு நான் அவசரமா விரல இழுக்கவும் அதோட பல்லுல சிக்கி விரலுல நல்லா 1 இன்ச் அளவுக்கு காயம். ரத்தம் கடகடனு வர ஆரம்பிச்சுடுச்சு. பாவம் ஆமை அது வேணும்னு கடிக்கல அதுக்கு பசி அதான் தண்டுனு நினைச்சு விரல கடிச்சுடுச்சு. உடனே அந்த தோட்ட காரன் கிட்ட கேட்டோம் இதுக்கு என்ன மருந்து போடறதுனு அவன் கூலா இதுக்கெல்லாம் ஒன்னும் மருந்து போட வேண்டாம் போயி கடல் தண்ணில கழுவுங்க போதும்னு சொல்லிட்டான். எனக்கு அழுகையா வருது.
அப்புறம் திரும்ப கடற்கரைக்கு வந்தோம். அங்க கடல்ல நிறையபேரு குளிச்சுட்டு இருந்தாங்க. எனக்கு தண்ணில இறங்கற எண்ணமே இல்ல. அப்படியே ஓடிபோயி தண்ணில (Snorkling) பாக்கற கண்ணாடி அப்புறம்வாய்வழியா சுவாசிக்கற ஒரு ட்யூப்பு இதுக்கு 100 ரூபாய் வாடகைவேற குடுத்து வாங்கிட்டு வந்திட்டாரு. உணமையில மறக்க முடியாத காட்சிகள் தண்ணிக்கு அடியில இவ்வளவு இருக்கா அம்மாடி. சூப்பருங்க நாம டிஸ்கவரி சேனல்ல பாக்கற மாதிரியே குட்டி குட்டி மீனுங்க கூட்டமா டிசைன் டிசைனா வந்து போகுது அது போக கல்லே செடி மாதிரி டிசைனா கலர் கலரா இருந்துச்சு. உள்ள இருந்து அந்த கல்லு செடி கலர் கலரா எப்படி உருவாகுதுனே தெரியல அதெல்லாம் பார்க்க ரொம்ப அருமையான மறக்க முடியாத காட்சிகள். இதெல்லாம் முடிச்சு வெளிய வரும்போது சரியா ரெண்டு மணிநேரம் கடந்திருக்குது. நேரம் போனதே தெரியல. அப்படியே ஆமை கடியும்தான். இதெல்லாம் முடிச்சுட்டு வெளிய வந்தப்புறம் எங்க வீட்டுக்காரரு கிண்டல் யாரோ தண்ணில இறங்க மாட்டேனு சொன்னாங்க கடைசில பார்த்தா என்ன கரைல நிக்கவெச்சுட்டு நீ இந்நேரம் ஆடறயே நியாயமானு. என்ன பண்ணறதுங்க தண்ணில இறங்கற வரைக்கும் பயம் இறங்கின பிறகு ஒன்னுமே தெரியல தைரியம் வந்திடுச்சுனு சொல்லி சிரிச்சேன் அப்பறம் அவரு கேட்டுதான் எனக்கு ஞயாபகம் வந்திச்சு ஆமை கடி பத்தியே. ஆமைகடி ரத்தம் வரது நின்னுடுச்சு வலியும் இல்ல.
கரை கிட்ட வந்தாச்சு. கரைய போட்டோ எடுத்துகிட்டே வந்தோம்.
கிட்டதட்ட அந்த இடங்கள் வெனீஸ் மாதிரியேதான் இருக்குது. அப்புறம் கரைல இறங்கும்போது தயாரா எங்க நண்பர் இருந்தாரு எப்படி தெரியும் நாங்க இப்ப வருவோம்னு கேட்டா. அவரு அதான் படகோட்டி போன் பண்ணி சொன்னானே அப்படிங்கறாரு. கடற்கரைல இருந்து ஹோட்டலுக்கு கிட்டதட்ட அரை கிலோ மீட்டர் இருக்கும். இனி நடக்கனுமா இல்ல கார் பிடிக்கனுமோனு யோசனை பண்ணிகிட்டு இருக்கும்போதே நண்பர் வாங்க நம்ப கார் இருக்குதுனு ஏத்துனாரு யாருப்பா அந்த நண்பன்னு கேட்டா அதாங்க நம்ம கேப்டன். நம்மள கூட்டிகிட்டுபோக வந்தானே காலைல அவன் தான் இது. நீங்கபோன பிறகு அவன் கூடதான் ஊரு சுத்திகிட்டு இருக்கேன். இதும் அவன் காருதான் ஏறுங்க போகலாம்னு ஏத்தி ஹோட்டலுக்கு கூட்டி கிட்டு போனாரு. போகற வழிலயே இனி மதியம் என்ன பண்ணறது பக்கத்துல பாதி நாள் சுத்தற மாதிரி என்ன இடம் இருக்குனு அவனையே கேட்டோம். அதுக்கு அந்த ஆளு ஸ்பைஷ் டூர் போகலாம் அரை நாள்ள முடிஞ்சிடும்னு சொன்னான். சரி நாங்க குளிச்சு கிளம்பி வரோம் நீயே கூட்டிகிட்டு போனு சொல்லிட்டு நாங்கபோயி 20 நிமிசத்துல தயாராகி வந்தாச்சு.
Wednesday, February 06, 2013
ஜான்சிபார் - 2
அப்படியே உள்ள போக போக வவ்வால் நிறைய கூரைல இருந்துச்சு. பத்தாததுக்கு வேர்வை பயங்கரமா வர ஆரம்பிச்சுது. இதெல்லாம் டிஸ்கவரி சேனல்ல பார்க்கதான் நல்லா இருக்கும் என்னால முடியாதுனு சொல்லிட்டு நான் வரல சாமி ஆள விடுங்கனு சொல்லி திரும்புனேன் அந்த பொண்ணும் என் கூட வந்திடுச்சு ரெண்டு பேரும் மேல படிகிட்ட வந்த பிறகு தான் உயிரே வந்திச்சு. எங்க வீட்டுல அவரு இன்னும் கொஞ்ச தூரம் போறேனு உள்ள போனாரு ஒரு கால் மணிநேரம் கழிச்சு அவங்களும் திரும்ப வந்தாங்க. என்ன பார்த்திங்க முழுசா போலையானு கேட்டோம் அப்ப சொல்லறாங்க உள்ள போக போக வவ்வால் அதிகமா இருக்கு அது மட்டும் இல்ல மூச்சு திணறலும் ஆரம்பிச்சிடுச்சு அதான் வந்திட்டோம்னாங்க. சந்தோசம் திரும்ப போலாம்னு சொன்னப்ப அந்த கைட் பையன் இன்னொரு வழி இருக்கே அதுலவேணா போயி பார்க்கலாம்னு சொன்னான். அங்க நானும் அந்த பொண்ணும் மட்டும் போனோம். அட அந்த வழி கொடுமையிலும் கொடுமையா இருந்துச்சு ஒரே கல்லு கல்லா ஆண்டவா எப்டிதான் அங்க அடிமை இருந்தாங்களோ ரொம்ப பாவம் அவங்க. ஒரு 20 அடிக்கு மேல நடக்க முடியல போட்டோ மட்டும் எடுத்துகிட்டு திரும்ப வந்திட்டோம். மேல நிலத்துக்கு வந்த பிறகுதான் நிம்மதியாச்சு. நிஜமா வாழ்க்கைல மறக்க முடியாத அனுபவம் அது.
அடுத்த இடத்துக்கு போகலாம்னா அதும் இன்னும் 2 கி.மீ தள்ளி இருக்குனாங்க. இப்பவே சலிச்சு போச்சு பக்கத்துல ஒரு விவசாயிகிட்ட மாட்டு வண்டில கொண்டு விடுங்கனு கேட்டோம் ஆனா அவரு மாட்டேன் சொல்லிட்டாரு அதனால நடராஜா சர்வீஸ்தான். காட்டு வழில ரெண்டு பக்கமும் விவசாய நிலம். ஆனா வெயில் கொழுத்தி எடுத்திடுச்சு :(. வேர்க்க விறுவிறுக்க அங்கபோயிசேர்நதோம். அங்க ஒன்னும்பெரிசா இல்ல நிலத்துக்கு அடில ஒரு ரெண்டு அறை மாதிரி கட்டி இருக்காங்க அடிமைகளை கப்பல் ஏத்தறதுக்கு முன்னாடி அடைச்சுவெக்கிற இடம் அது. கீழ இறங்கி பார்த்திட்டு இருக்கும்போது ஒரு பொந்துல இருந்து பாம்பு தலைய நீட்டிகிட்டு இருந்திச்சு நான் பார்த்து அலறிமேல வந்திட்டேன். ஆனா பின்னாடி வந்தவங்க அது பாம்பு இல்லவேற ஏதோ விலங்குனு சொன்னாங்க இருந்தாலும் பயமாதான் இருந்துச்சு. அந்த இடத்துக்குபேரு ஸ்லேவ் சாம்பர்(Slave Chamber). அங்க இருந்து எட்டி பார்த்தா கடல் தெரியுது. அங்கபோயி நல்லா கடல்ல நின்னு நிறைய போட்டோ எடுத்தோம். அழகான ரம்மியமான இடம் இயற்கை இந்த நாட்டுக்கு ரொம்ப அழக குடுத்திடுச்சுப்பா. எங்க பார்த்தாலும் அழகா இருக்கு. ஆள் நடமாட்டமே இல்லாத கடற்கரை அவ்ளோ அழகா தனியா இருக்கு. கூட வந்தபையன் இந்தி சினிமா ரொம்ப பார்த்து பார்த்து மாதுரி தீட்சித், சல்மான்கான் எல்லாரையும் கேட்டதா சொல்லி அனுப்புனான். அப்பதான் தெரிஞ்சுது இந்தி படம் எங்க எல்லாம் பிரபலமாகி ஆகியிருக்குனு.
அதுபேரு மருகுபி பேலஸ் (Maruhubi Palace) அதுவும் பழைய சுல்தான் யாரோ வாழ்ந்த இடம் ஆனா அங்க ஒரு பெரிய குளம் இருந்துச்சு நல்ல தண்ணி அதனால நல்லா மூஞ்சி கழுவி குளிச்சு புத்துணர்சி ஆகிட்டோம். அப்புறம் கோட்டைய சுத்தி பார்த்துட்டு பின்னாடி வந்தா கடல். அங்க முழுசும் கப்பல் செய்யற இடம். நிறைய பெரிய பெரிய கப்பலுங்க கிடக்குது. அங்கயெல்லாம் நல்லா போட்டோ எடுத்துகிட்டு கடல் ஓரமா சுத்தி வந்தோம் அங்க ஒரு ஆள் என்னவோ துணி துவைக்கற மாதிரி கல்லுல அடி அடினு அடிச்சுகிட்டு இருந்தான் என்னனு பக்கத்துலபோயி பார்த்தா அது ஆக்டோபஸ் மீன். அட ஆண்டவா அதை என்ன பண்ணறீங்கனு கேட்டா ஆக்டோபஸ் சமைக்கறதுக்கு முன்னாடி இப்படி அடிச்சு கழுவுனா சமைக்கறது ஈசினு சொன்னாங்க. ஆப்டோபஸ் அடிச்சு அடிச்சு அது நுரை மாதிரி வருது அப்புறம் கழுவி சமைக்கறாங்க. இன்னிக்குதான் ஆக்டோபஸ் முழுசா பாத்திருக்கேன். ஆனா பாவம் அது.
அவங்க அண்ணன் வந்தாரு சான்சிபார் ஜெயில்ல ஆபீஸர்னு அறிமுகம் பண்ணிகிட்டாரு. அப்புறம் அவங்க அம்மா அக்கா எல்லாரும் வந்து அறிமுகம் பண்ணிகிட்டாங்க. அவரு இந்தியர்கள் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு வந்ததுக்கு சந்தோசம்னு சொன்னாரு. கடைசியா அவரு சம்சாரம் வந்து அறிமுகம் பண்ணிகிட்டு குழந்தைகள அறிமுகம் செஞ்சுது. வெளிய விளையாடிட்டு இருந்த 5 ம் அவருடைய சொந்த குழந்தைங்க தானாம். அட ஆண்டவா எப்படிதான் சமாளிக்கறாங்ளோ இவ்ளோ குழந்தைங்கள வெச்சு. அப்புறம் காபி சாப்படறீங்களானு கேட்டாங்க. உடனே நாங்க சரினு சொன்னோம்ல ஏன்னா மதியம் கொஞ்சம் சாப்பிட்டது அதுக்கு பிறகு ஒன்னுமே சாப்பிடலை. அவங்க சம்சாரம் உள்ள போனது ரொம்ப நேரம் வரவே இல்ல. நாங்க நினைச்சோம் உள்ள போயி வெறும் காபிக்கு இவ்ளோ நேரமானு. கடைசில பார்த்தா தட்டு தட்டா எடுத்துட்டு வந்து வெச்சாங்க. என்ன என்ன ஐட்டம் தெரியுமா? பஜ்ஜி,போண்டா, கட்லெட்,ஸ்வீட் பிஸ்கட்ஸ் அப்புறம் தேங்காய் சட்னி. இதெல்லாம் பார்த்து ஆனந்த கண்ணீரே வந்திடுச்சு. ஏன்னா இதெல்லாம் இந்தியால பார்த்தது இப்பதான் 4 மாசம் கழிச்சு பாக்கறோம். ஆகா விடுவமா புகுந்து விலாசிட்டோம்ல. அவங்க கிட்ட அப்புறம் கேட்டோம் இதெல்லாம் எப்படி உங்களுக்கு செய்ய தெரியும்னு கேட்டோம் அதுக்கு அவங்க சொன்னாங்க இந்தியர்கள் (குஜராத்துகாரங்கதான்) இங்க இருந்தாங்க அவங்க கத்துகுடுத்ததுதான் இதெல்லாம்னு சொன்னாங்க. ஆகா நீங்க உங்க குடும்பம் எல்லாம் நல்லா இருக்கனும் சாமி ஏன்னா இந்திய சாப்பாட கண்ணுல காட்டுனதுக்கு ரொம்ப நன்றினு சொல்லிட்டு அவங்க கூட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு கிளம்புனோம்.
கிளம்பி வரும்போது மறுபடியும் வண்டி தள்ள வேண்டியதா போச்சு எங்க வீட்டுகாரரு நான் எந்த நாட்டுக்கு போனாலும் வண்டி தள்ளற வேலை மட்டும் விட்டு போகாது போல இருக்குனு கிண்டல் பண்ணிகிட்டே வந்து சேர்ந்தோம். எங்க போனாலும் இந்த குடும்பம்ங்கற அமைப்பும் உபசரிப்பும் ஒரு சந்தோசத்தை தருதுனு நினைச்சு கிட்டே தூங்குனோம்.
இன்னமும் வரும்.. :) :)
Monday, February 04, 2013
ஜான்சிபார் - 1
இந்த கட்டுரை நானும் எனது கணவரும் (2008) சென்று வந்த சுற்றுலா பற்றிய குறிப்பு மட்டுமே வேற ஒன்னும் உருப்படியா இல்லீங்க. நாங்களிருவரும் தான்சானியா எனும் ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஜான்சிபார் எனும் தீவிற்கு போய் வந்தோம்.
முதன் முதல்ல இந்த ஊருக்கு போறதால கூகுள்ள தேடி நிறைய விசயங்கள தெரிஞ்சு கிடடோம். முக்கியமா சொல்ல வேண்டியது என்னனா எங்க வீ ட்டுக்காரரு வேலை செய்த கல்லூரில நிறைய பசங்க அந்த ஊருல இருந்து வந்து படிக்கராங்க.
இவங்க கல்லூரி விடுமுறைங்கறதால நாலு நாள் சேர்ந்தா மாதிரி விடுமுறை கிடைச்சுது. தான்சானியாவில இருந்து இந்த ஜான்சிபார் போகனும்னா ரெண்டு வழிதான் இருக்கு ஒன்னு விமானம், ரெண்டாவது கப்பல். விமானத்துல போனா கால் மணி நேரத்துல போயிடலாம் கப்பல்னா 2 மணிநேரம் ஆகும். எங்க வீட்டு காரரு விமானம்னு சொல்ல நான் கப்பல்னு சொல்ல கடைசில கப்பல்தான் ஜெயிச்சுது. கப்பல்ல போனாதான் கடல நல்லா பாக்கலாம்னு சொல்லி சம்மதிக்க வெச்சேன்
நாங்க கிளம்புனது வியாழன் காலை 7 மணி கப்பல். கப்பல் பேரு சீ எக்ஸ்ப்ரஸ் (Sea Express) இதுல முக்கியமான விசயம் எங்க ரெண்டுபேரு கூட மூணாவதா ஒரு நண்பரும் வந்திருந்தாரு. அவருக்கு தண்ணிய பார்த்தலே பயம் தெனாலி மாதிரி. சரியா 7.30க்கு செக் இன் எல்லாம் முடிஞ்சு வண்டி கிளம்புச்சு. அப்ப பக்கத்தில பார்த்தா யாரோ முணங்கற சத்தம் திரும்பி பார்த்தா அந்த நண்பர் சாமி கும்பிட்டுட்டு இருக்காரு கப்பல் கவுந்திடகூடாதுனு. அப்பறம் நாங்களும் வீட்டுக்கு எல்லாம் போன் பண்ணி பேசிட்டு உக்கார்ந்தாச்சு. அப்புறம் எங்க வீட்டுகாரரு சொன்னாரு வெளிய நின்னு பார்த்தாதான் கடல் நல்லா தெரியும்னு. வர மாடடேனு சொன்ன நண்பரையும் கூட்டிகிட்டு வெளில வந்து அலைகள் பிண்ணனியில நிறைய புகைப்படங்கள் எடுத்தோம். அங்கவெளியதான் பாதி பேர் இருந்தாங்க. வயசானவங்க முதல் குழநதைங்க வரைக்கும். ஆனாலும் நாங்க உள்ள வந்து உக்கார்த்தாச்சு கொஞ்ச நேரங்களிச்சு பார்த்தா பக்கத்து சீட் குழந்தை வாந்தி எடுத்துச்சு அதை பார்த்து எங்களுக்கும் குமட்ட எப்படியோ கரை வந்து சேர்ந்தோம் 9 மணிக்கு. ஜான்சிபார் வந்த பிறகு தான் தெரிஞ்சுது எங்கள கூப்பிட வரேனு சொன்ன பையன் வரவே இல்ல போனும் பண்ணல. அப்புறம் என்ன வழக்கம்போல ஒரு சின்ன டீக்கடைல போயி இனிப்பா ஒரு ஆப்பம் டீ அப்புறம் சப்பாத்தி சாப்பிட்டுட்டு வெயிட் பண்னுனோம் அப்பதான் அந்த பையன் போன் பண்ணி அவன் அலுவலகத்தில வேலையா இருக்கறதாவும் நீங்களே கார் பிடிச்சு வந்து சேருங்கனு சொன்னான். அவனை கண்டபடி மனசுக்குள்ளயே திட்டிக்கிட்டு கார் எடுத்திட்டு அலுவலகம் போய் சேர்நதோம் பெரிய அலுவலகம்தான் TTCL (Tanzania Tele Communicztion Limited) அப்புறம் கொஞ்ச நேரம் அங்க பேசிட்டு அவனை கூட்டிக்கிட்டே பழைய டீக்கடைக்கிட்ட வந்தோம் அங்கதான் அவன் எங்களுக்கு பார்த்து வெச்சிருந்த ஹோட்டல் இருந்தது அங்க போயி கொண்டுபோன சாமான் எல்லாம் வெச்சிட்டு எதிர்தாப்புல இருந்த அரபு பிரியாணி கடைலபோயி பிரியாணி ஆர்டர் பண்ணுனோம். ரொம்பநேரம் கழிச்சு வந்தது பிரியாணி, என்னானு பார்த்தா சாப்பாட்டுல கொஞ்சம் மசாலா சேர்த்து செஞ்சுட்டு அது கூட ஒரு கரண்டி சிக்கன் கிரேவி அல்லது மட்டன் கிரேவிவெச்சு தந்தான் கொடுமை. அதுக்கு பிறகு கிழம்பி சும்மா இன்னிக்கு பக்கத்தில இருக்கற இடத்தை மட்டும் பாருங்கனு ஒரு அரபு சுல்தான் கோட்டைகிட்ட இரக்கி விட்டுட்டு போயிட்டான்.
அந்த இடத்துக்குபேரு (Mtoni marine) முட்டோனி மரைன் அங்க ஒரு பழையகோட்டை இருக்கு அதுலதான் சையது பின் சுல்தான் அல்புசையது வாழ்ந்திருக்காரு. நிஜமா ரொம்ப சொகுசாத்தான் இருந்திருக்காங்க. அங்க என்ன அதிசயம்னா அந்தகோட்டைக்கு கழிவு வெளியேற கடல்ல இருந்து சின்ன கால்வாய்வெட்டி அதுகோட்டை முழுக்க சுத்தி சுத்தி வருது. கோட்டை கதவு வரைக்கும் கடல் தண்ணி வர மாதிரி கட்டி இருக்காங்க.
அதுல ராணி குளிக்க மசாஜ் ரூம், ஸ்டீம் பாத் எடுக்க ஒரு குகை மாதிரி கட்டி இருக்காங்க. அது மட்டும் இல்ல இங்க முன் மண்டபத்தில ஒருபெரிய ஹால் எதுக்குன்னா அங்கதான் அடிமைகள அடைச்சு வெச்சிருந்து தினம் பக்கத்து தோட்டத்துல வேலை செய்ய கூட்டிட்டு போவாங்களாம். பாவம் அவங்க சரியான சுகாதாரம் இல்லாத இடத்தில இருந்திருக்காங்க. கோட்டைய சுத்திட்டு வெளிய வந்தா கடல் முன்னாடியே இருக்கு. அங்க தான் ஒரு மணிநேரம் நல்லா காத்து வாங்கிட்டு வநதோம். ஆனா தண்ணி ரொம்ப உள்ள இருந்துச்சு சாயந்திரம்தான் தண்ணி கரை வரும்னு சொன்னாங்க. அந்த கோட்டை பக்கத்துயே முட்டோனி மரைன் ஹோட்டல் இருக்கு அது பீச் ரிசார்ட் பூராம் வெள்ளக்காரங்க சன் பாத்து எடுக்கறாங்க. அங்க போயி ஒரு கைக்கு மருதாணி வைக்க 50 டாலர் பணம்னு சொன்னாங்க சரி சரி நாங்க 5 ரூபாய்க்கு எங்க ஊர்லயே வெச்சுக்கறோம்னு வந்திடடோம்ல. சாயங்காலம் கிளம்பி திரும்ப சிட்டிக்குள்ள வந்தோம். அங்க இந்து கோவில் இருக்கறதா சொன்னாங்க. சரினுதேடி பிடிச்சு போனா நம்ம குஜராத்தி மக்கள் எல்லாம் பய பக்தியா பஜனை பாடிட்டு இருந்தாங்க. அந்த கோவில் பூசாரிகிட்டபேசினா அவரு தமிழ் அதும் கோயமுத்தூர் RS புரமாம் அப்பறம் விடுவமா நல்லா 1 மணி நேரம் பேசிட்டு பிரசாதம் வாங்கிட்டுதான் திரும்ப வந்தோம். அவரு சொன்ன தகவல்படி 1960 க்கு முன்னாடி ஜான்சிபார் முழுக்க அராபியர்களும் இந்தியர்களும்தான் இருந்திருக்காங்க. 1960ல புரட்சி வந்துதான் இந்தியர்கள் எண்ணிக்கை 4000ல இருந்து 400 ஆ குறைஞ்சிருக்கு.
திரும்ப வரும் வழில ஒரு சந்துல நிறைய தள்ளு வண்டிங்க இருந்துச்சு பக்கத்துல போயி பார்த்தா எல்லாம் சீ புட் விக்கற கடைங்க எல்லா வெளி நாட்டு காரங்களும் அங்கதான் இருக்காங்க. நாங்களும் போயி புதுசா என்னவோ தான்சானியா பிட்சானு விக்கறாங்ளே வாங்கி பார்ப்போம்னு வாங்குனா நல்லாதான் இருக்குது. நம்ம ஊருல போளினு ஒன்னு செய்வாங்கள்ள அதே மாதிரி ஆனா முட்டயெல்லாம் போட்டு சூப்பர் டேஸ்ட்டா இருந்துச்சு. அப்புறம் நண்டு, ஆக்டோபஸ், நட்சத்திர மீன், கறி இன்னும் என்ன என்னவோ குவிச்சு வெச்சு இருக்காங்க. நாங்க போட்டோ மட்டும் எடுத்திட்டு ஓடி வந்திட்டோம். திரும்ப பழைய கடைக்கு வந்து க்ரில் சிக்கன், சிப்ஸ் சாப்பிட்டுட்டு வந்து தூங்கியாச்சு. இப்படியாக முதல் நாள் முடிஞ்சிடுச்சு.
ஆகா முடிஞ்சுடுச்சுன்னு சந்தோச படாதீங்க.. இன்னமும் சில பாகம் வரும்.. :) :)
Wednesday, October 03, 2012
படித்ததில பிடித்தது
Saturday, July 09, 2011
ஆன கத,,,,

தினமும் குறைந்தது 4 முறையாவது என் பையன் என்னிடம் "அம்மா ஆன கத" என்று கேட்காத நாள் இல்லை. உறங்கும் நேரம் தவிர அவனுக்கு மீதி நேரம் முழுக்க கதை கேட்பதில் அத்துனை ஆர்வம் அதிலும் குறிப்பாக யானை கதை மட்டும் வேண்டும். யானை போட்ட படங்கள், யானை கார்டூன், யானை வைத்து சொல்லப்படும் கதைகள் அனைத்தம் யானைதான்.
இந்த Iceage கார்டுன் பார்த்து பார்த்து எனக்கு ஒவ்வொரு சீனும் மனப்பாடமே ஆயிடுச்சு. பாவம் அந்த CD தேஞ்சே போச்சு. எப்ப பாரு ஆன கத ஆன கதனு கேட்டு இப்பவெல்லாம் ஆனை வடை திருடிட்டு போயி மரத்து மேல உக்காந்துதுனு சொன்னாலும் கேட்டுக்கிறான். இந்த ஆனை வியாதி எப்ப முடியும்னு தெரியல.
இவனுக்கு கதை சொல்ல போக நெட்டுல யானை பத்தி தேடி தேடி படிச்சுட்டு இருக்கேன். அதுல கிடைச்சதுதான் யானை டாக்டர்.
Wednesday, July 06, 2011
யானை டாக்டர்
அணுகுண்ட சமாளிச்சு வெற்றி பெற்ற ஜப்பான் கூட இயற்கைய பாத்து பயந்துதான் நிக்குது. நாம இன்னும் தெரிஞ்சு அனுபவிக்க பல விசயங்கள இயற்கை தன்கிட்ட வெச்சு இருக்கு. இயற்கைய நேசிக்க ஆரம்பிச்சா நம்மளோட போட்டி பொறாமை எல்லாம் கொஞ்சம் தணியும்கிறது என்னோட எண்ணம்.
Friday, April 03, 2009
குங்குமப்பூ



குங்குமப்பூ பல வகைகளிலும் பயன்படுது மருத்துவம், சாயம், உணவு வகை தயாரித்தல், வாசனை திரவியங்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன் படுத்தறாங்க.

Tuesday, September 23, 2008
ஆப்பிரிக்காவில் அனு

ஆப்பிரிக்கா அப்படினாலே மிகப் பெரிய கண்டம்னு எல்லாறுக்கும் தெரியும். சரி ஆனா இதுல மிக்பெரிய நிலப்பகுதி சகாரா பாலைவனம். அதாவது வடக்கு பகுதி, அதே வடகிழக்கு பகுதியில குறிப்பா எகிப்து, சூடான் இங்கயெல்லாம் நைல் நதி பாஞ்சு மிக மிக செழிப்பா இருக்குது.ஆப்பிரிக்காவ மொத்தமா ரெண்டு பாகமா பிரிக்கலாம் அதாவது பாலைவனத்துக்கு மேல வடக்கு பகுதி, பாலைவனத்துக்கு கீழ தெற்கு பகுதினு. இதுல பாலைவனத்துக்கு மேல உள்ள நாடுகள் நைல் நதி பாயறதாலயும், ஐரோப்பாவுக்கு ரொம்ப பக்கத்தில இருக்கறதாலயும் நல்ல முன்னேற்றத்தோட இருக்குது.அதே போல கிழக்கு பகுதியில கடலோரம் இருக்குற நாடுகளும் தென் ஆப்பிரிக்காவும் நல்ல நீர் வழத்தோடயும் ஆசியா அரேபிய நாடுகள்கூட தொடர்பு கொண்டு நல்லா வழமாதான் இருக்காங்க. இது எல்லாத்துலயும் பாவப்பட்டவங்க மேற்கு ஆப்பிரிக்காதான். ஏன்னா இவங்க அடுத்த கண்டத்தோட தொடர்பு கொள்ளனும்னா ஒன்னு மேற்கு பக்கம் அட்லாண்டிக் கடல்ல பல தூரம் கடந்து தென் அமெரிக்காவுக்கு வரனும் இல்லைனா கிழக்க பெரிய ஆப்பிரிக்க நிலப்பரப்ப கடந்து அரேபியா அல்லது ஆசியாவ அடையனும். ரெண்டு பக்கமுமே ரொம்ப தூரம்.அதனால முன்னேற்றம் கொஞ்சம் கம்மிதான் அங்கெல்லாம்.
இப்ப இந்த கண்டத்துல கிழக்கு கடலோரம் இருக்கற தான்சானியாங்கற நாட்டுலதான் நான் இருக்கேன். இந்த நாட்ட பத்திதான் நான் எழுத போறேன்.
Wednesday, September 17, 2008
ஒரு சின்ன சந்தேகமுங்க
இந்த பதிவுல ஒன்னுமே இல்லீங்க வெறும் டெஸ்ட் பதிவுதான் பல நாள் நான் என் வலைப்பக்கம் வரவே இல்ல அதான் ஒரு சந்தேகம் வலைப்பூ உயிரோட இருக்கா இல்லையானு ஒரு சின்ன சந்தேகம் அதான் இந்த பதிவு. சரி வந்தது வந்துட்டீங்க இந்த படத்தையும் பார்த்துட்டு போங்க.
Saturday, April 12, 2008
மக்களாட்சி
திட்டம்னா முதன் முதல்ல இந்தியா சுதந்திரம் அடைஞ்சப்போ மக்கள் தொகை கிட்டதட்ட வெறும் 50கோடிதான் ஆனா பஞ்சம் வறுமை எல்லாம் நல்லா அமோகமா இருந்துச்சு இதை போக்க என்ன பண்ணலாம்னு சில நல்ல அரசியல்வாதிகள் ஐந்தாண்டு திட்டம்னு ஒன்னு கொண்டு வந்து எங்க எங்க முடியுதோ அங்க எல்லாம் அணைகளை கட்டி வாய்க்கால் வெட்டி நீர் பாசனத்தை பெறுக்கி உணவு உற்பத்திய பெறுக்கி இப்டி என்ன என்னவோ செஞ்சு உணவு பற்றாக்குறையில்லாம வறுமை அண்டாம இன்னிய மக்கள் தொகையிலயும் காலந்தள்ளற அளவு முன்னேற்றம் பண்ணியிருக்காங்க.
அதுக்கு பிறகு உள் கட்டுமானம் அதாங்க (Infra structure) போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு. இத பத்தி சொல்லவே வேண்டாம் யாராவது தப்பி தவறி மொபைல் போன் இல்லைனு சொன்னா ஒன்னு அவரு வெளிநாட்டுகாரரா இருக்கும் இல்லைனா பேச முடியாத குழந்தையா இருக்கும் அந்த அளவு பெறுத்துடுச்சு. போக்குவரத்தும் ஒன்னும் குறைஞ்சிடல கிட்டதட்ட எல்லா கிராமங்களும் போக்குவரத்து வசதில தன்னிறைவு பெற்றுதான் இருக்கு.
அது போக சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு இப்டி சொல்லிகிட்டே போகலாம். கண்டிப்பா 100 சதவீத தன்னிறைவு இல்லை. ஆனா கிட்டதட்ட முழு அளவு இருக்குது. சரி எதுக்கு இப்போ இந்த விளம்பரம்னு கேட்கறீங்களா? ஒன்னும் இல்லீங்க திட்டம்னு ஒன்னு போட்டா அதை நிறைவேத்தி செயல் படுத்த கொஞ்ச காலம் ஆகும். ஏன்னா எத்தனையோ அரசு அலுவலகங்களை தாண்டி மக்களை வந்தடையவே பல காலம் ஆகும். அது வரைக்கும் அரசாங்கம்னு ஒன்னு நிலையா இருந்தாதான் அந்த திட்டம் கடைசி குடி மகனுக்கும் வந்து சேர்ந்து கொஞ்சமாச்சும் ஆமை வேகத்திலயாவது முன்னேற முடியும், அதை விட்டுட்டு இந்த ஜனநாயம் எல்லாம் சுத்த தெண்டம். கம்முனு சர்வாதிகாரம்தான் நல்லதுஅல்லது வேற ஆட்சி முறைதான் நல்லதுனு இள ரத்தங்கள்லாம் கர்ஜணை பண்றாங்க ஆனா ஒரு விசயம் தெளிவா இருக்கனும் என்ன ஆட்சி நடந்தாலும் ஜனநாயகத்துலதான் பலன் ஆமை வேகத்துலயாவது நிஜமா கஷ்டப்படுற மக்களுக்கு போய் சேரும் அதை விட்டுட்டு குதிச்சா அது முக்கிய நகரங்கள்ள மட்டும்தான் பலன் அடைஞ்சு முன்னேறும். ஆனா சத்தம் இல்லாத கிராமங்கள் முன்னேறாது. அதனால மக்களே முடிஞ்ச வரைக்கும் ஜனநாயகத்தை பாதுகாக்க நம்மளால முடிஞ்ச கடமைய செய்யனும் இல்லீனா அடுத்த தலைமுறைக்கு ரொம்ப சிரமமா போயிடும்.
எத்தனையோ ஓட்டைகள் இருந்தும் இப்படி பாராட்டவோ அல்லது திட்டவோ அல்லது மொக்கை போடவோ அனுமதிக்கும் மக்களாட்சிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் கூடிய ஒரு மொக்கை கட்டுரை சமர்ப்பணம்.
வாழ்க மக்களாட்சி..!!
Thursday, April 10, 2008
கற்கை நன்றே..!!
இதை நான் நமது புதிய இளைய தலைமுறைக்கு எனது ஆலோசனையாகவும் தெரிவிக்க விரும்புகிறேன். இதில் காந்தியின் சத்திய சோதனை போன்ற நீதிநெறி மற்றும் பகவத்கீதை போன்ற மதம், அரசியல் சார்ந்த தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேச போவதில்லை. உலக அறிவு மற்றும் பல்வேறு வெற்றி தோல்விகளையும், ஒற்றுமை மற்றும் விரோதங்கள் குறித்து சொல்லும் நூல்கள் இவை. தவிரவும் இவைகளை பின்வரும் வரிசையில் படிப்பதால் உலக அறிவும் வளரும் என்றே அசட்டு நம்பிக்கையும் உள்ளது.
நீரினுள் எழும்பி வெடிக்கும் காற்று குமிழி போல...
- நேரு
1. நேருவின் உலகவரலாறு பாகங்கள் 1 & 2
தனது பதின்ம வயது மகளுக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பே என்றாலும்
பலமடங்கு வயதான நமக்கும் வியப்பான ஒரு நூலே. இது புத்தகமாக வெளி வந்த சமயத்திலேயே தமிழாக்கம் (திரு.அழகேசன் என்பது சரி என்றே எண்ணுகிறேன்) செய்யப் பட்டுவிட்டது. ஒரு தந்தை தன் குழந்தைக்கு சொல்லும் அதே பாங்குடன் உலகை குறித்த வரலாற்றை விவரிக்கிறார். பல்வேறு மொழிகள், மதங்கள், இராச்சியங்கள் என்று அனைத்தையும் கால வெள்ளத்தினுள் நீந்திவாறே விளக்குகிறார்.
அவருடைய கொள்கைகளை மறந்து படிக்க ஆரம்பித்தால் மிக அருமையான நூல் இது. எண்ணற்ற மதங்கள், மொழிகள், கொள்கை கோட்பாடுகள், இராச்சியங்கள் அனைத்தும் தோன்றி அழிந்த பாங்கினை விவரித்து வரும் போது மேலே சொல்லியுள்ள உவமையை காட்டுவார். மெய்சிலிர்க்க வைக்கும் தருணம். கிட்டதட்ட ஆங்கில அரசாங்கமும், அடிமை இந்தியாவும் என்ற வரைக்கும் இருக்கும்.
2. மதனின் - வந்தார்கள் வென்றார்கள்
கிட்டதட்ட இரு பாகங்களாக உள்ள உலக வரலாற்றின் சுருக்கி வரைதல் போன்று எளிய முறையில் சுவைபட விவரித்துள்ளார். தைமூரில் ஆரம்பித்து கிட்டதட்ட ஆங்கில ஆட்சி துவக்கம் வரை புத்தகத்தை கீழே வைக்க இயலாத அளவு சுவையுடன் கொடுத்துள்ளார். வண்ண வண்ண ஓவியங்கள் மிக அழகாக மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கிறது.
3. கல்கியின் - சிவகாமியின் சபதம்
காலத்தே இரண்டாவதாக எழுதப்பட்டு இருந்தாலும் முதலில் படிக்க வேண்டியது. ஓவியக்கலை, சிற்பக் கலை, நடனக் கலை என்று எங்கு எந்த பக்கம் படித்தாலும் அரசியலும் , கலையும் சரியான போட்டி போட்டுக் கொண்டு இருக்கும். இவை தவிர அன்றைய தமிழர் தம் வாழ்வியல் முறைகள், போர் திட்டமிடல், ஒற்றாடல் என்று இன்றைய நவீன நாவல்களுக்கு சவால் விடும் வண்ணம் அமைந்திருக்கும்.
4. கல்கியின் - பார்த்தீபன் கனவு
கல்கியின் கிட்டதட்ட முதலாவது வரலாற்று நாவல். அளவில் சிறிதாக
இருப்பினும் படிக்க சுவையான எளிய கதை.
5. கல்கியின் - பொன்னியின் செல்வன் 1,2,3,4 & 5
சொல்லி தெரியவேண்டியதில்லை பொன்னியின் செல்வன் பெருமைகளை. யாவரும் படித்து இன்புறும வண்ணம் தமிழர் தம் வாழ்க்கை முறை, அது இது என எண்ணற்ற செய்தி குவியல்கள் நிலவறையினுள் உள்ள பொக்கிஷம் போல குவிக்கப் பட்டுள்ளது. உள்ளே போய் வர பயிற்ச்சி எடுத்தால் அனுபவிக்க ஏராளம், ஏராளம்...
6. நள்ளிரவில் சுதந்திரம்- வெளிநாட்டு ஆசிரியர்கள் (Larry Collins,Dominique Lapierre)
இந்திய சுதந்திர சமயத்தில் நடைபெற்ற சுவாரசியமான தகவல்கள் களஞ்சியம் என்றே சொல்லலாம். இன்றைய இந்திய டூடே புத்தகத்தின் அன்றைய முன்மாதிரியாக செய்தி திரட்டுவது மற்றும் வழங்கும் கோணங்கள் பிரமிக்க வைக்கிறது. நாம் எதிர் பாரா கோணங்கள் நமக்கு வெளிச்சமிடப் பட்டு காண்பிக்க படும் போது மிகவும் வியப்படைய வேண்டியிருக்கிறது. தமிழாக்கம் செய்ய பட்டு வெகு அருமையாக உள்ளது. தமிழாசிரியர் பெயர் அறிய இயலவில்லை.
மேற்க் கண்ட புத்தகங்களை மேற்க் கண்ட வரிசையிலேயே படிப்பது
நமக்கும், நம் வாரிசுகளுக்கும் பாரதம் மற்றும் பிற சமூகங்கள் குறித்த தேவையான அறிவை வழங்கும் என்றே எண்ணுகிறேன்.
Tuesday, April 08, 2008
ஊழல்
1. போபர்ஸ் ஊழல்- 64 கோடி
வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-22-01-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- 22-10-1999
தண்டனை பெற்றவர்கள்--- தேடுராங்க,தேடுராங்க....தேடிட்டே இருக்காங்க.
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
2.HDW Submarine- 32.55 கோடி
வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி-05-03-1990
தண்டனை பெற்றவர்கள்--- தேடித்தேடி சலிச்சுபோய் ஒன்னும் பண்ண முடியாம சி.பி.ஐ வழக்கை மூடிச்சுக்கறோம் அனுமதி கொடுங்கனு நீதி மன்றத்தில் முறையிட்டிருக்கிறார்கள்.
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
3. பங்குச்சந்தை ஊழல்- 4100 கோடி
வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி - 72 வழக்கு.(1992 - 1997 வரை)
குற்றம் சாட்டப்பட்டவர்கள்--- 4 பேர்(ஹர்சத் மேத்தா உட்பட)
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
4. ஏர்பஸ்(Airbus) ஊழல்- 120கோடி
வழக்குப் பதிவு செய்யப்பட்ட தேதி- 23-03-1990
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட தேதி- இன்னும் தாக்கல் செய்யப்படவில்லைதண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
5.இந்தியன் வங்கி ஊழல்- 762.92 கோடி
வழக்குப் பதிவு- 45 (1992ல் இருந்து)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 27 நபர்கள் மீது
தண்டனை பெற்றவர்கள்--- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
6.ஹவுஸிங் ஊழல்- 65 கோடி
வழக்குப் பதிவு- 11/03/1996
குற்றப் பத்திரிக்கை தாக்கல் -தண்டனை பெற்றவர்கள்-- நான்கு இளநிலை ஊழியர்கள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
7.கால்நடைத் தீவன ஊழல்- 950
கோடிவழக்குப் பதிவு- மார்ச் 1995லிருந்து (64 வழக்கு)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் -63
தண்டனை பெற்றவர்கள்-- ஒரே வழக்கில் மூன்று அதிகாரிகள் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
8.பெட்ரோல் பங்க் ஊழல்- 950கோடி
வழக்குப் பதிவு- நவம்பர் 1996 -1997 (15 வழக்கு)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
9.யூரியா ஊழல்- 133கோடி
வழக்குப் பதிவு- 28/05/1996
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 26/12/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
10.சி.ஆர்.பி(CRB) ஊழல்- 1031கோடி
வழக்குப் பதிவு- 20/05/1997
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 02/09/1997
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
11.டெலிகாம் ஊழல்- 1200கோடி
வழக்குப் பதிவு- ஆகஸ்ட் 1996
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 4
தண்டனை பெற்றவர்கள்-- ஒருவர் மட்டும்
கைப்பற்றப் பட்ட பணம்- 5.36 கோடி
12.யுடிஐ(UTI) ஊழல்- 9500கோடி
வழக்குப் பதிவு- ஜூலை 2001(1 வழக்கு)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - 2004 வரை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
13.கே.பி ஊழல்(KAY PEE)- 3128கோடி
வழக்குப் பதிவு- மார்ச்&மே 2001(மூன்று வழக்கு)
குற்றப் பத்திரிக்கை தாக்கல் - இரண்டு
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
14.வீடு விற்பனை (Home Trade) ஊழல்- 1200கோடி
வழக்குப் பதிவு- 10/05/2002
குற்றப் பத்திரிக்கை தாக்கல் -இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை
தண்டனை பெற்றவர்கள்-- ஹிஹிஹி
கைப்பற்றப் பட்ட பணம்- சுழி
இதெல்லாம் சும்மா சில கூகிள் தேடல் மூலமும், சில கட்டுரைகள் உதவியுடனும் கிடைத்த தகவல்கள்..சரி, என்னோட ஒரே ஒரு கேள்வி என்ன என்றால் இந்திய மக்களாகிய நாம் ஊழல் என்பதை ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றே நினைக்கிறேன்?...அதை விசாரிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி எதற்கு நம் வரிப்பணத்தையும், நேரத்தையும் வீணாக்கவேண்டும்?
Monday, April 07, 2008
மணற்கோவில் - கைலாச நாதர் கோவில்
பல்லவ நாட்டின் தலைநகரான காஞ்சியில் அமைந்துள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்று தென்திசைக் கைலாயம் எனும் கைலாசநாதர் கோயில் ஆகும். இந்த ஆலயம் கட்டிட கலையின் முக்கியமான ஒரு வகையாகும். கல்வெட்டு இக்கோயிலை "கச்சிப்பேட்டுப் பெரிய திருக்கற்றளி" என்றழைக்கிறது.மணற்சிலைகள் கண்ணை கவரும் விதத்தில் காலத்தே சிறிது சிதைவுற்று அழகுற விளங்குகின்றன.
(அனைத்து படங்களையும் சொடுக்கினால் முழுமையான பெரிய அளவிலான ஒளிப்படத்தை காணலாம்.)
இதன் இருபுறமும் உள்ளே நுழைய வழிகள் உள்ளன. பொதுவாக மற்ற கோவில்களில் கோபுரத்தின் வழியே நுழைவதாக இருக்கும்.
ஒளிபடங்கள் (3,4) உள்சுற்றுபுற பிரகாரங்கள் ஆகும். இவைகள் முழுக்க முழுக்க சிற்பங்கள் நிறைந்துள்ளன. மணற் சிற்பங்கள் (சுதை) என்ற வகையில் அமைந்துள்ளன.
ஒளிபடம் (6) நடனத்தின் அழகை துல்லியமாக காட்ட முயன்றுள்ள சிற்பியின் திறனை கண்டு நாம் வியக்காமல் இருக்க இயலாது அல்லவா..? எத்தனை எத்தனை கற்பனையை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளனர் சிற்பி...
ஒளிபடம் (7) அன்றிலிருந்து இன்று வரை நம் பாரதம் கலாச்சாரத்தில் பிண்ணி பிணைந்தவை என்பதை உணர்த்தும் சிற்பம். இன்று பாரதத்தின் தேசிய சின்னமாக உள்ள நான்கு சிங்கங்களின் முன்மாதிரியாக உள்ள சிற்பம்.
ஒளிபடம் (8) இங்கு எதைச் சொல்ல எதை விட..? ஒரே இடத்தில் சிங்கங்கள், யானைகள், ஆடல் மகளீர், வதம் செய்யும் காட்சி, மற்றும் பிற உப குள்ளர்கள் போன்றவைகளை காட்டி தன் முழு திறனை வெளிகாட்டியுள்ளார் சிற்பி.
ஒளிபடம் (9) கோவிலின் சுற்று சுவரில் உள்ள காவல் சிற்பங்கள். எண்ணற்ற சிற்பங்கள் வகைவகையாய் அமைந்துள்ளன. விலங்குகள் மீதமர்ந்துள்ள காவற் வீரர்கள் என மிகவும் தத்துரூபமாய் அமைக்கபட்டு நம்மை வியக்க வைக்கிறது.
குறிப்பு : இந்த தலமானது தற்கால புகழ்பெற்ற காமட்சி அம்மன் கோவில் போன்றவைகளிலிருந்து சற்றே விலகியுள்ளது. நகர மையத்திலிருந்து 4கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் செல்லாத காரணத்தால் அதிக கடைகள் மற்றும் உணவுவிடுதிகள் அருகில் இல்லாத குறையுண்டு.
Wednesday, February 27, 2008
சிற்சில கணங்களில்...

சில எதிர்பார்ப்புகள் தேவையற்று போகின்றன
சில எதிர்பார்ப்புகள் தேய்ந்து மறைந்துவிடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் கேள்வி குறியாகின்றன
சில எதிர்பார்ப்புகள் நடந்தும் விடுகின்றன
சில எதிர்பார்ப்புகள் தோற்கின்றது - ஆனாலும்
பல எதிர்பார்ப்புகள் தினம் தோன்றுகின்றன
தினம் தோன்றி மறையும் விண்மீன்களை போல.
இதை கவிதைனும் எடுத்துக்களாம் மொக்கைனும் எடுத்துக்கலாம். ஆனா ஏனோ எனக்கு நம்ம ராசா எழுதுன இந்த பதிவு ஞாபகம் வருது.
Monday, January 28, 2008
பிரிவோம் சந்திப்போம் - என் பார்வையில்
படம் ஆரம்பிச்சு கொஞ்ச நேரம் வரைக்கும் பொண்ணு பார்க்க போறது. கல்யாணம் இப்டியே போயிடுச்சு. நான் நினைச்சேன். இதென்ன கொடுமையிது
ஒரு கல்யாணத்த காட்டறதுக்கு ஒரு படமானு நினைச்சேன். அப்புறம் இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் அவங்க தனியா போனப்புறம் தினமும் சாப்பிடறது சமைக்கிறது இப்டியே இருந்துச்சு. இதெல்லாம் பார்த்துட்டு எங்க அண்ணாவேற இததான தினமும் வீட்டுல பார்க்கறோம் இதுக்கு போயி செலவு பண்ணி இங்க வந்து பார்க்கணுமான வேற டயலாக்கு.
ஆனா படம் முக்கால்வாசி போன பிறகுதான் தெரிய வருது எடுத்துகிட்ட
நோக்கம். ஆனா அதை புரிய வைக்கறதுகாக கொஞ்சம் இழுத்துட்டே போயிட்டாரு கதைய. ஆனா வேற வழியில்ல இந்த விசயத்தை இந்த மாதிரி கொஞ்சம் இழுத்து சொன்னாதான் தெளிவா புரியும். கண்டிப்பா இந்த படத்தை
தொலைகாட்சில ரிமோட்டோட பார்த்தம்னா ஒன்னுமே இல்லனு சொல்லிட்டு
போயிடுவோம். திரையரங்குல உக்காந்து வேற வழியே இல்லனு பார்த்தாதான் இந்த படத்தோட விசயம் விளங்கம். தனிமை கொடுமைங்கறதுதான் எடுத்துகிட்ட விசயம். அதுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு எடுத்திருக்காரு படத்தை.
பாராட்ட வேண்டியது :
1. இயல்பான கதை அமைப்பு, நடிப்பு, காஸ்ட்யூம்.
(நான் நினைக்கிறேன் எல்லா நடிகர்களையும் அவங்க அவங்க வீட்லயிருந்து கிளம்பி வர சொல்லி அவங்க போட்டிருக்கிற ட்ரெஸ்ல அப்டியே படம் எடுத்திருப்பாரு போல இருக்கு :) )
2. எடுத்துகிட்ட விசயத்துல கொஞ்சமும் மாறாம அப்டியே கடைசி வரைக்கும் அப்டியே கொண்டு போனது.
3. எல்லாருமே நல்லவங்கனு காட்டுனது. சண்டை காட்சி இல்லாதது. அப்புறம் முக்கியமா ஒரு எடத்துலகூட துப்பாக்கியோ அல்லது அரிவாளோ காட்டாம படம் எடுத்ததுக்கு நன்றி.
குறைகள் :
1. முக்கியமான விசயம் கதைய ரொம்ப ஸ்லோவா நகர்த்தியிருக்கிறது. (ரொம்ப கஷ்டம் அடங்கி 2.30 மணி நேரம் உட்கார்ந்து பார்க்கறது. அதுலயும் ரிமோட் இல்லாம ரொம்ப கஷ்டமப்பா )
Sunday, January 20, 2008
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே
இந்த வருட ஆரம்பத்திலிருந்து ஒரு கேள்வி அடிக்கடி பதிவுலக நண்பர்கள் கேட்டுக்கிட்டே இருக்காங்க. அது என்னா கேள்வினா
பெண் பதிவர்கள் ஏன் தங்களுடைய புகைப்படத்தை பதிவுகளில் அல்லது ப்ரொபைலில் போடுவதில்லை?
இது தான் கேள்வி இது பல தடவை நேர்லயும் சிலரால் சாட்டிங்கிலும் கேட்கப்பட்டு விட்டது. நானும் என்னவோ பதில் சொல்லிட்டேன். இருந்தாலும் மத்தவங்களுக்கும் இது ஒரு பயனுள்ளதா (ஆமா நாட்டுக்கு ரொம்ப தேவைனு சொல்றது காதுல விழுது :) ) இருக்கும்னு இங்க எழுதறேன்.
1. பதிவு எழுதவர்ரவங்க அவங்களோட கருத்துகளை அடுத்தவங்ககிட்ட பகிர்ந்துகனும்னுதான் எழுத வராங்க. இதுல படத்த பார்த்து ஒன்னும் ஆக போறது இல்ல.
2. அப்படியே படம் போட்டு பேர் வாங்கனும்னு நினைச்சா அதுக்கு மாடலிங், நடிப்புனு நிறைய மத்த துறைகள் இருக்குது. இங்க பதிவு எழுதனும்னு அவசியம் இல்ல.
3. அப்புறம் சிலர் கேட்கறாங்க முகமிலிகூட எப்டி பேச்சுவார்த்தை வெச்சுக்கிறது. நட்பு எப்படி சாத்தியம்னு கேட்கறாங்க. இதுக்கு என் பதில் ஏன் குறிப்பா பெண்களை மட்டுமே கேட்கறீங்க இன்னும் பல ஆண் பதிவர்களும்தான் முகமிலியா இருக்காங்க. அதுக்காக உங்க நட்புல ஏதாவது தடை ஏற்பட்டு இருக்குதா?
4. இன்னும் சிலர் இப்டி தங்கள் புகைப்படத்தையே வெளியிடாதவங்க எப்டி சமூகத்த பத்தி எழுத முடியும்னு கேட்கறாங்க. ஏனுங்க பதிவு எழுதறதே அவங்கவங்க இஷ்டத்துக்கு அவங்க கருத்துகளை தெரிவிக்கதானே தவிர சமூகத்தை சீர் திருத்தறதுக்காக இல்ல. அப்டியே இருந்தாலும் சமூக சிந்தனைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்னு புரியல.
5. இதெல்லாத்தையும் விட முக்கியமா நம்ம படத்தை பார்த்து அடுத்தவங்க பயப்பட கூடாதுங்கற ஒரு சமூக அக்கறைனு கூட சொல்லலாம். (பெண்களோட நல்ல மனச புரிஞ்சுக்கோங்க :) )