கொஞ்சம் சீரியஸா எழுதறேன்னு சிலரும் கொஞ்சம் ஆழமா (எவ்வளவு அடினு தெரியல?) எழுதறேனு சிலரும் சொன்னதால சும்மா சிரிக்கறா மாதிரி (நகைச்சுவை மாதிரி) எழுதலாமேனு யோசிச்சப்ப நமக்கு வர குறுஞ்செய்திகள (SMS) போடலாம்னு தோணிச்சு அதான் இது,
முதல்ல குணா பட பாடல் ஒன்னு,
கண்மணி அன்போடு ப்ரெண்ட் நான் அனுப்பும் மெஸேஜ், இல்ல sms, வேணா மெஸேஜ்னே இருக்கட்டும்
பொண்மணி உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா?
என் செல்லில் இங்க கிடைக்குதே!
உன்னை எண்ணி பார்க்ககையில் மெஸேஜ் கொட்டுது, அதை அனுப்ப நினைக்கயில் பாலன்ஸ் முட்டுது,
" மனிதர் புரிந்து கொள்ள இது மொக்க மெஸேஜ்
அல்ல அல்ல அல்ல ........
அதையும் தாண்டி மட்டமானது "
அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல, என் செல்லுல மட்டும் பாலன்ஸ் நிக்கறதேயில்லை.
அடுத்தது ஒரு ஜோக், ஒரு சின்ன பையன் வீதில
நடந்துபோகும்போது தும்மிகிட்டே போனான்.
அது ஏன்?
ஏன்னா அவன் பொடி பையன். :)
அப்புறம் ஒரு தத்துவம்,
1. முதல்வரே ஆனாலும் முதல் சீட் டிரைவருக்குதான்.
2. ட்ரெயின் டிக்கட் எடுத்து ப்ளாட்பார்ம்ல உக்காரலாம்
ஆனா ப்ளாட்பார்ம் டிக்கட் எடுத்துட்டு ட்ரெயின்ல
உர்கார முடியாது
3. என்னதான் கராத்தேயில ப்ளாக் பெல்ட்
எடுத்திருந்தாலும், சொறி நாய் துரத்துனா ஓடித்தான்
ஆகனும்.
பின்குறிப்பு : முக்கியமான விசயம் தயவுசெய்து மேலே உள்ளதெல்லாம் படிச்சிட்டு கொஞ்சம் சிரிச்சிருங்க. இதெல்லாம் ஜோக்னு நம்பி அனுப்பி வெச்சிருக்கிற என் நண்பர்களுக்காக....... :)